Saturday, March 07, 2020
On Saturday, March 07, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி தேசியக் கல்லூரியில் நடந்த ஆண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று திருச்சி வந்தார்.
திருச்சி விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்தார். அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணி எப்போது தொடங்கும் என்று கேள்வி எழுப்பினர். அதற்கு சுப்பிரமணியன் சுவாமி பதில் கூறுகையில், ஏப்ரல் 2ஆம் தேதி ராமர் கோவிலுக்கான அடிக்கல் நாட்டப் படும். அனைத்து கட்டுமான பொருட்கள் தயாராக இருப்பதால், உடனடியாக அவற்றை கோர்க்கும் பணி தொடங்கும். இரண்டு ஆண்டுகளில் கோவிலை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோல் காசி விசுவநாதர் கோவில் பகுதியில் ஒரு பகுதி உடைக்கப்பட்டு மசூதி கட்டப்பட்டுள்ளது. அதையும் மாற்றுவதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதற்காக சன்னியாசிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு நான் தலைவராக இருக்கிறேன். பாபர் மசூதியை நான் இடிக்கவில்லை. மக்களாக இணைந்து இடித்தார்கள். அது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது என்றார். திமுக தேர்தல் வியூலத்திற்கு பிரசாந்த் கிஷோர் நியமிக்கப்பட்டிருப்பது குறித்த கேள்விக்கு, சுப்பிரமணியசாமி பதில் கூறுகையில், பிரசாந்த் கிஷோர் யார் என்பது எனக்கு தெரியாது. ஒரு அரசியல் தலைவராக இருந்தால் எனக்கு தெரியும். ஆனால் இந்த தேர்தலில் திமுக தோற்க வேண்டும். அதற்கான முயற்சிகளை அனைவரும் இணைந்து மேற்கொள்வோம்
என்றார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், சசிகலா சிறையில் இருந்து வந்தவுடன் மாற்றம் ஏற்படும். அது குறித்த விபரத்தை தற்போது வெளியிட முடியாது. அவர் சமுதாய ரீதியாக வலுவாக உள்ளார் என்றார்.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயிகள் பாராட்டு விழா நடத்துவது நல்ல விஷயம். அதற்காக எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். முதலில் கடல் நீரை குடிநீராக மாற்றி விட்டு ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்களை நிறைவேற்றலாம் என்றார்.
திருச்சி விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்தார். அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணி எப்போது தொடங்கும் என்று கேள்வி எழுப்பினர். அதற்கு சுப்பிரமணியன் சுவாமி பதில் கூறுகையில், ஏப்ரல் 2ஆம் தேதி ராமர் கோவிலுக்கான அடிக்கல் நாட்டப் படும். அனைத்து கட்டுமான பொருட்கள் தயாராக இருப்பதால், உடனடியாக அவற்றை கோர்க்கும் பணி தொடங்கும். இரண்டு ஆண்டுகளில் கோவிலை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோல் காசி விசுவநாதர் கோவில் பகுதியில் ஒரு பகுதி உடைக்கப்பட்டு மசூதி கட்டப்பட்டுள்ளது. அதையும் மாற்றுவதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதற்காக சன்னியாசிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு நான் தலைவராக இருக்கிறேன். பாபர் மசூதியை நான் இடிக்கவில்லை. மக்களாக இணைந்து இடித்தார்கள். அது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது என்றார். திமுக தேர்தல் வியூலத்திற்கு பிரசாந்த் கிஷோர் நியமிக்கப்பட்டிருப்பது குறித்த கேள்விக்கு, சுப்பிரமணியசாமி பதில் கூறுகையில், பிரசாந்த் கிஷோர் யார் என்பது எனக்கு தெரியாது. ஒரு அரசியல் தலைவராக இருந்தால் எனக்கு தெரியும். ஆனால் இந்த தேர்தலில் திமுக தோற்க வேண்டும். அதற்கான முயற்சிகளை அனைவரும் இணைந்து மேற்கொள்வோம்
என்றார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், சசிகலா சிறையில் இருந்து வந்தவுடன் மாற்றம் ஏற்படும். அது குறித்த விபரத்தை தற்போது வெளியிட முடியாது. அவர் சமுதாய ரீதியாக வலுவாக உள்ளார் என்றார்.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயிகள் பாராட்டு விழா நடத்துவது நல்ல விஷயம். அதற்காக எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். முதலில் கடல் நீரை குடிநீராக மாற்றி விட்டு ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்களை நிறைவேற்றலாம் என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...

0 comments:
Post a Comment