Friday, March 06, 2020
On Friday, March 06, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி இந்திரா கணேசன் பொறியியல் கல்லூரியில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது
மகப்பேறு நிபுணர்,
ராமகிருஷ்ணா மருத்துவமனை
டாக்டர் ரமணி தேவி ,மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் காமராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் மகப்பேறு நிபுணர்,
ராமகிருஷ்ணா மருத்துவமனை
டாக்டர் ரமணி தேவி பேசுகையில்,
கொரோனா வைரஸ் நோய் தற்போது ஈரான், இத்தாலி, சீனா, கொரியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் தீவிரமாக பரவி வருகிறது.
நம் கைகள் மூலம் மூக்கு வாய் போன்றவற்றை அடிக்கடி தொடக்கூடாது. இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் நிலவும் வெப்பநிலையில் கொரோனா நோய் பரவ வாய்ப்பு கிடையாது. 15 டிகிரி செல்சியஸ் இருந்தாலே கொரோனா கிருமி அழிந்துவிடும். மூச்சுத் திணறல், உடல் வலி, தலைவலி, இருமல், சளி போன்றவை இந்நோய்க்கான அறிகுறியாகும். இத்தகைய அறிகுறி இருந்தாலே அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று நோய் தாக்குதல் இருக்கிறதா என்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
நோய் தாக்குதல் இருந்தால் உடனடியாக அதிகப்படியான மூச்சுத்திணறல் ஏற்படும். நுரையீரல், சிறுநீரகம் போன்ற உடல் உறுப்புகள் அடுத்தடுத்து செயலிழந்து உயிர் இழப்பை சந்திக்க நேரிடும். 100 பேருக்கு இந்நோய் இருந்தால் 2 சதவீதத்துக்கும் குறைவானவர்களே இறப்புகளை சந்திக்கின்றனர்.
52% பேர் குறைந்த அளவிலான தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். 15 சதவீதம் பேர் கடுமையான பாதிப்புக்குள்ளாகின்றனர். 3 சதவீதம் பேர் மட்டுமே சிக்கலுக்கு ஆளாகின்றனர்.
மக்கள் அதிகம் கூடும் பகுதிக்கு செல்வதை தவிர்த்து தனிமையில் இருக்க வேண்டும். வெளிநாடுகளுக்கு சென்று வருபவர்களுக்கு இத்தகைய நோய் அறிகுறி இருந்தால் உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகளுக்கு கை கழுவுவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
பேட்டி: மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் காமராஜ்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...

0 comments:
Post a Comment