Sunday, May 10, 2020
On Sunday, May 10, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி மாவட்டம் முசிறி அருகே கோதூர்பட்டியில் டாஸ்மாக் கடையில் இருந்து திருட்டுத்தனமாக விற்பனைக்கு கடத்தப்பட்ட 1200
மதுபாட்டில்களை கைப்பற்றிய போலீசார் ஒருவரை கைது செய்து தலைமறைவாக உள்ள விற்பனை மேலாளரை தேடி வருகின்றனர்.
முசிறி அருகே அமைந்துள்ள
கோதூர்பட்டியில் கோதூர்பட்டியில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது இன்று 144 தடை உத்தரவு பின்னர் திறக்கப்பட்ட டாஸ்மார்க் கடையில் வியாபாரம் களைகட்டியிருந்தது
இந்நிலையில் நீதிமன்றம் டாஸ்மாக் கடையை மூடுவதற்கு உத்தரவிட்டது. இதனால் கள்ளத்தனமாக மது பாட்டில்களை விற்பனை செய்ய கோதூர் பட்டி டாஸ்மார்க் கடை விற்பனை மேலாளர் பாண்டியன் அப்பகுதியை சேர்ந்த ஜெகநாதன் என்பவருக்கு 1200 குவாட்டர் மதுபாட்டில்கள் அடங்கிய 25அட்டை பெட்டிகளை ஆம்னி வேனில் ஏற்றி விற்பனை செய்வதற்கு அனுப்பி வைத்துள்ளார்.
அப்போது சம்பவ இடத்திற்கு சென்ற முசிறி போலீஸ் டிஎஸ்பி செந்தில்குமார் தலைமையிலான போலீசார் 1200 மது பாட்டில்களையும், ஆம்னி வேன் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் ஜெகநாதன் என்பவரை போலீசார் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்களின் மதிப்பு 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் ஆகும். மேலும் தப்பி ஓடி தலைமறைவாக உள்ள கோதுர்பட்டி டாஸ்மார்க் கடையின் விற்பனை மேலாளர் பாண்டியனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
-
திருச்சி முசிறி முசிறி அருகே தா.பேட்டை சலவைத் தொழிலாளர் சங்கத்தினர் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக 1200 நபர்களுக்கு இலவசமாக முக கவசங...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...

0 comments:
Post a Comment