Thursday, May 28, 2020
On Thursday, May 28, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி மாவட்டம் ,
முசிறி அருகே தா.பேட்டைக்கு மும்பையிலிருந்து வந்த மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
முசிறி தாலுகா தா.பேட்டையை சேர்ந்தவர் செந்தில்குமார் .இவர் கடந்த பத்து வருடங்களாக மும்பையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். குடும்பத்துடன் மும்பையில் வசித்த செந்தில்குமார் மும்பையிலிருந்து விமானம் மற்றும் கார் மூலம் பயணித்து மனைவி தீபா மகன் கவின் அஸ்வின் ஆகியோருடன் தா.பேட்டைக்கு நேற்று வந்துள்ளனர் . வரும் வழியில்
இவர்களுக்கு கோவையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மருத்துவ பரிசோதனை முடிவில் தீபா, கவின் ,அஸ்வின் ஆகியோருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருக்கும் தகவல் தா.பேட்டை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினருக்கு கோவையில் இருந்து தெரியவந்தது. இதையடுத்து தா.பேட்டை சேர்ந்த சுகாதார குழுவினர் மூவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் .பேரூராட்சி நிர்வாகம் அப்பகுதிகளில் சுகாதார தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது . இச்சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது .மேலும் தா.பேட்டை முழுவதும் சுகாதார தடுப்பு நடவடிக்கைகளை மேம்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...

0 comments:
Post a Comment