Saturday, May 23, 2020
On Saturday, May 23, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருட்டுத்தனமாக மணல் அள்ளிய ஜேசிபி மற்றும் டிப்பர் லாரி பறிமுதல். அதிமுக பிரமுகர் உள்ளிட்ட 9 பேர் கைது
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள மருங்காபுரி பகுதியான வேம்பனூர் ஆற்றில் தொடர்ந்து மணல் திருட்டு நடைபெறுவதாக வந்த புகாரையடுத்து திருச்சி சரக டி.ஐ.ஜி உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் நேற்று இரவு மருங்காபுரி பகுதிகளில் அதிரடி ரெய்டில் ஈடுபட்டனர்.
அப்போது மினிக்கியூர் அருகே மணல் அள்ளிக்கொண்டு வந்த ஒரு ஜேசிபி மற்றும் ஒரு டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர். ஜேசிபி ஓட்டுனர் திருப்பதி (33), லாரி ஓட்டுனர் குமரேசன் (32) ஆகியோரிடம் நடத்திய விசாரணையில் மணல் திருட்டில் தொடர்புடைய மினிக்கியூரைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் அருணாச்சலம் என்ற பெருமாள் (55) மற்றும் (33), தனபால் (45), சதீஷ் (25), சங்கர் (38), சதாசிவம் (30), ராசு (30) ஆகிய 9 பேரையும் கைது செய்து வளநாடு காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதனை அடுத்து அதிமுக பிரமுகர் உள்ளிட்ட 9 பேரையும் கைது செய்த வளநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி அனைவரையும் மணப்பாறை அரசு மருத்துவமனையில் மருத்துவபரிசோதனை செய்து பின்னர் மணப்பாறை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
கைது செய்யப்பட்ட அருணாச்சலம் என்ற பெருமாள் மருங்காபுரி ஒன்றியத்தின் அமமுக முன்னாள் ஒன்றிய செயலாளராக இருந்தவர் உள்ளாட்சி தேர்தலின்போது அதிமுகவில் இணைந்து தற்போது இவரது மனைவி பராசக்தி மருங்காபுரி ஒன்றிய 2 வது வார்டு அதிமுக ஒன்றியக் குழு உறுப்பினராக உள்ளார். தொடர்ந்து பினாமிகள் மூலம் மணல் திருட்டில் ஈடுபட்டுவந்த இவரை தற்போது முதன் முறையாக போலீசார் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நீண்ட நாட்களாக மணல் திருட்டில் ஈடுபட்டு வந்த ஆளும் கட்சி முக்கிய பிரமுகர் உள்ளிட்ட 9 பேர் ஒரே நாளில் கைது செய்யப்பட்டுள்ளது மணப்பாறை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...
-
பொதுமக்கள் காப்பாற்றப்பட வேண்டும் எல்பின் நிறுவனத்தை பற்றிய உண்மை வீடியோ சமூக சேவகர் சத்தியமூர்த்தியும் இந்த செய்தியை வெளி உலக...



0 comments:
Post a Comment