Wednesday, May 06, 2020
On Wednesday, May 06, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சிராப்பள்ளி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் நோய்
தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தகவல்
நமது மாவட்டத்தினை சார்ந்த 51 நபர்கள் கொரோனா வைரஸ் நோய்
பாதிக்கப்பட்டதன் விளைவாக சிகிச்சை பெற்று வந்தனர். இதில் ஏற்கனவே 47 நபர்கள்
பூரண குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிலிருந்து வருகை
புரிந்த 28 நபர்கள் மற்றும் இதர மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களிலிருந்து வருகை புரிந்த
667 நபர்களுக்கு இரத்த பரிசோதனை செய்ததில் ஏற்கனவே 4.5.2020 அன்று 4 நபர்களுக்கு
கொரோனா வைரஸ் நோய் தொற்று உள்ளது என உறுதி செய்யப்பட்டுள்ளது.
மீதமுள்ள
304 நபர்களுக்கு இன்று(5.5.2020) ரத்த மாதிரி பரிசோதனை செய்ததில் 303 நபர்களுக்கு
கொரோனா வைரஸ் நோய் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. 1 நபருக்கு
கொரோனா வைரஸ் நோய் தொற்று உள்ளது என உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தை சார்ந்த 9 நபர்கள் அரியலூர் மாவட்டத்தைச் சார்ந்த 9
நபர்களும் பெரம்பலூர் மாவட்டத்தைச் சார்ந்த 12 நபர்களுக்கும் புதுக்கோட்டை
மாவட்டத்தைச் சார்ந்த 1 நபரும் ஆக கூடுதல் 31 நபர்கள் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
அனைத்து நபர்களும் நலமுடன் உள்ளனர்.
வெளிமாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பிறமாவட்டங்களிலிருந்து திருச்சி
மாவட்டத்திற்குள் வரும் நபர்கள் உடனடியாக சுகாதாரத்துறையினரை தொடர்பு கொண்டு
தகவல் தெரிவிப்பதுடன் 14 நாட்களுக்கு வீட்டினை விட்டு வெளியே வராமல்
தனித்திருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றது.
தேவையில்லாமல் வெளியில் நடமாடுவதை பொது மக்கள் தவிர்க்க வேண்டும்.
விழித்திரு - விலகி இரு - வீட்டில் இருக்கஎன்பதை கடைபிடிக்க வேண்டும். திருச்சிராப்பள்ளி
மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் இல்லாத மாவட்டமாக மாற்றுவதற்கு பொதுமக்கள்
அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...
-
பொதுமக்கள் காப்பாற்றப்பட வேண்டும் எல்பின் நிறுவனத்தை பற்றிய உண்மை வீடியோ சமூக சேவகர் சத்தியமூர்த்தியும் இந்த செய்தியை வெளி உலக...

0 comments:
Post a Comment