Wednesday, June 17, 2020
On Wednesday, June 17, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது.
திருச்சி-கரூர் பைபாஸ் சாலை பகுதியில் உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு பின்னர் அவர் அய்யாக்கண்ணு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தோம்.
அப்போது வாரணாசி தேர்தலில் போட்டியிட வேண்டாம். 6,000 ரூபாய் நிதி உதவி அளிக்கப்படும். நதிகள் இணைக்கப்படும். விளைபொருட்களுக்கு லாபகரமான விலை கொடுக்கப்படும். 5 லட்சம் ரூபாய் கடன் வட்டி இல்லாமல் கொடுக்கப்படும் என்று உத்தரவாதம் அளித்தார்.
ஆனால் ஓராண்டாகியும் இன்னும் அவற்றை நிறைவேற்றப்படவில்லை. அதனால் நதிகளை இணைக்க வேண்டும். அதற்கான உரிய நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். லாபகரமான விலை கொடுக்க வேண்டும். 5 லட்சம் ரூபாய் கடன் வழங்க வேண்டி விரைவில் டெல்லி சென்று நிர்வாண போராட்டம் நடத்தப்படும். கொரோனா பாதிப்புக்கு 20 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து இருப்பதாக மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து இருந்தார். ஆனால் விவசாயிகளுக்கு எவ்வித அறிவிப்பும் வெளியிடவில்லை.
குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தற்போது உள்ள தண்ணீர் 40 நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும். கடைமடை பகுதிகளுக்கு இரண்டு நாட்களில் சென்றுவிடும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆனால் 10 நாட்கள் ஆனாலும் கடைமடை பகுதிக்கு தண்ணீர் சென்றடையாது என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வைகை அணையில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால், இன்னும் இரு மாதங்களுக்கு மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யக் கூடிய நிலை ஏற்பட்டிருக்கிறத...
-
திருச்சி திருச்சியில் அங்கீகாரம் இல்லாத குடிநீர் ஆலைகளுக்கு சீல் வைத்த நிலத்தடி நீர் பிரிவு அதிகாரிகள் ...
-
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் கிருமிநாசினி தெளிக்கும் பணி இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை திருச்சி ஆட்சியர் சிவ...
-
நெமிலி அருகே உள்ள சயனாபுரத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 760 மாணவ- மாணவிகள் படிக்கிறார்கள். தலைமை ஆசிரியர் உள்ப...
-
திருச்சி 15.08.16 சபரிநாதன் 9443086297 திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ரூபாய் 18 இலட்சம் ...
-
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. அப்போது கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த பூர்...
-
தமிழகத்தில் தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான், பொங்கல் என பல பண்டிகைகள் முக்கியமானதாக கொண்டாடப்பட்டு வருகிறது. பண்டிகைகள் மட்டும் இன்றி பிறந்த...
0 comments:
Post a Comment