Sunday, September 27, 2020
மக்காசோள பயிர்களை தாக்கும் படைப்புழுவை கட்டுபடுத்தும் தொழில் நுட்பங்களை மண்ணச்சநல்லூர் ஒன்றிய வேளாண்மை அலுவலக உதவி இயக்குநர் விவசாயிகளுக்கு வழங்கினார்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஒன்றியத்தில் கரியமாணிக்கம் குறு வட்டத்தில் திருப்பட்டூர்,எதுமலை,சிறுகனூர்,வாலையூர்,பாலையூர்,பெரகம்பி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 800 ஹெக்டேர் பரப்பளவில் மக்காசோளம் சாகுபடி செய்கின்றனர். இந்த மக்காசோள பயிர்களை படைப்புழு தாக்கி வருகிறது. இந்த படைப்புழு தாக்கத்தால் உரிய மகசூல் கிடைக்காமல் விவசாயிகள் நஷ்டமடைந்து வருகின்றனர். இந்த படைப்புழு தாக்கத்திலிருந்து விடுபட விவசாயிகளுக்கு வேளான் அலுவலக அதிகாரிகள் தொழில் நுட்ப ஆலோசனைகளை வழங்கியுள்னர்.
உழவியல் முறை
ஆழ உழுது 1 ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம் புண்ணாக்கு மண்ணில் இட்டு படைப்புழுவின் கூட்டுப் புழுக்களை அழிக்க வேண்டும்.
சரியான பருவத்தில் விதைத்தல் மற்றும் பல்வேறு நாட்களில் ஒரே பகுதியில் விதைப்பதை தவிர்க்க வேண்டும்.
தொடர்ச்சியாக மக்காசோள பயிர்களை சாகுபடி செய்யாமல் சுழற்ச்சி முறையில் பயிர்களை கடைபிடிக்க வேண்டும்.
விதை நேர்த்தி
ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் பவேரியா அல்லது பேஸியான,30 எப் எஸ் தயோமீதாக்சாம் பயன்படுத்தி விதை நேர்த்தி செய்ய வேண்டும்.பூஞ்சானக் கொல்லிகளைக் கொண்டு விதை நேர்த்தி செய்யப்பட் டிருந்தால் அதனுடன் பூச்சிக் கொல்லிகளை கொண்டு விதைகளை நேர்த்தி செய்யலாம்.
இறவை மக்காசோள பயிர்களை 60 க்கு 25 செமீ இடைவெளியிலும்,மானாவரி மக்காசோள பயிர்களை 40 க்கு 20 செ.மீ இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்.
இறவை மக்காசோளத்தில் கம்பு பயிரையும்,மக்காசோளத்தில் சோளப்பயிரையும் வரப்பு பயிர்களாக மக்காசோளம் விதைப்பதற்க்கு 15 நாட்களுக்கு முன்னதாக விதைத்து படைப்புழுக்களை அழிக்கலாம்.
படைப்புழுக்களை முட்டைப் பருவத்திலேயே அழிக்க டிரைக்கோகிரம்மா பிரிட்டியோசம் ஒட்டுண்ணியை ஒரு ஏக்கருக்கு 6 சி.சி பயன்படுத்தி கட்டுபடுத்தலாம்.
வரப்பு பயிர்களாக தட்டைப்பயறு,சூரியகாந்தி,எள்,செண்டுமல்லி பயிர்களையும்,ஊடுபயிர்களாக உளுந்து,பாசிப்பயறு சாகுபடி செய்வதன் மூலம் படைப்புழுக்களை கட்டு படுத்தலாம்
இளங்குருத்துப் பருவத்தில்(15 - 20 நாட்களில்) அஸாடிராக்டின்1 இ.ஸி. 10 லிட்டருக்கு 20 மி.லி. வீதமும்,எமாமெம்டின் பென்சோவேட் 5 எஸ்ஜி 10 லிட்டருக்கு 4 கிராம் வீதமும்,நவலூரான்10 இஸி 10 லிட்டருக்கி 15 மி.லி என்ற அளவில் கலந்து இவற்றில் ஏதாவது ஒன்றை ஏக்கருககு 100 லிட்டர் என்ற அளவில் கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.
முதிர்ந்த குருத்து பருவத்தில் (40-45 நாட்களில்)
தயோடிகார்ப் 75 டபிள்யூ. பி 10 லிட்டருக்கு 20 கிராம் வீதமும்,ஸ்பைநோசட் 12 எஸ்.ஸி 10 லிட்டருக்கு 5 மி.லி வீதமும் மெடாரைஸியம் அனி சோப்பிலியே 1*10 ஸிஎப்யூ கிராம் 10 லிட்டருக்கு 80 கிராம் வீதம் ஏக்கருக்கு 200 லிட்டர் அளவில் கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.
கதிர் பிடிக்கும் பருவத்தில் (60-65 நாட்களில்) புளுபென்டையமைட் 480 எஸ்.ஸி 10 லிட்டருக்கு 9 மி.லி வீதமும், குளோரான்டிரானிலிப்புரோல் 18.5 எஸ்.ஸி 10 லிட்டருக்கு 5 மி.லி வீதம் ஏக்கருக்கு 200 லிட்டர் என்ற அளவில் கைத்தெளிப்பான் மூலம் தெளித்து படைப்புழுக்களை கட்டுப்டுத்தில் நல்ல மகசூலை விவசாயிகள் ஈட்ட முடியும் என்று படைப்புழுவை கட்டுபடுத்தும் தொழில் நுட்பங்களை மண்ணச்சநல்லூர் ஒன்றிய வேளாண் அலுவலக உதவி இயக்குநர் தாகூர் தெரிவித்தார்.
Total Pageviews
News
Pages
Popular Posts
-
திருச்சி திருச்சி தி.மு.க செயல்வீரர்கள் கூட்டத்தில் நேரு பேச்சு திருச்சி மாவட்ட தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம் கலைஞர் அறிவாலயத்த...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா பகல்பத்து உற்சவம் நிறைவு நாளான இன்று 5ஆம் தேதி நம்பெருமாள் மோகினி அ...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் விரைவில் குணமடைய வேண்டி சிறப்பு யாகங்கள் நடைபெற்றது. வேலூர் மாவட்...
-
பெருந்துறை சீனாபுரம், திங்களூர் ஊராட்சிகளில் 237 பேருக்கு 948 விலையில்லா ஆடுகளை அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் வழங்கினார். 237 பேருக்கு ...

0 comments:
Post a Comment