Tuesday, January 19, 2021
மருத்துவக் கல்லூரி மாணவி 4 வது மாடியிலிருந்து குதித்து மர்ம மான முறையில் பலி
இறப்பில் மர்மம் என மாணவியின் தந்தை காவல் நிலையத்தில் புகார்.
திருச்சி மாவட்டம், சமயபுரம் சுங்கச்சாவடி,அருகே தனலட்சுமி சீனிவாசன் தனியார் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை மாணவ, மாணவிகள் விடுதியுடன் உள்ளது. இக் கல்லூரியில் அரியலூர் மாவட்டம், கருப்பூர் பொய்யூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராமையாவின் மகள் ராஜேஸ்வரி டி பாம் இரண்டாம் ஆண்டு கல்வி பயின்று வருகிறார். மாணவி ராஜேஸ்வரி இம் மாதம் 17 ம் தேதி தனது வீட்டிலிருந்து கல்லூரிக்கு வந்துள்ளார். திங்கள் கிழமை இரவு 1 மணி வரை கல்லூரி விடுதியில் உள்ள தனது சக தோழிகளுடன் நன்றாக பேசியுள்ளார்.
அதிகாலையில் மாணவி ராஜேஸ்வரி விடுதியில் காணவில்லை என சக மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திடம் கூறியுள்ளனர்.
கல்லூரி நிர்வாகத்தினர் சம்பவ இடத்தில் வந்து பார்த்த போது விடுதியின் தரைப்பகுதியில் மர்ம்மான முறையில் சடலமாக கிடந்தார். மாணவி உயிரிழந்தது குறித்து அவரது பெற்றோருக்கு கல்லூரி நிர்வாகத்தினர் தகவல் கூறியதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்தினை பார்த்த போது , சம்பவ இடத்தில் எவ்வித ரத்தம் சிதறிகிடக்கவில்லை. மாணவி தங்கி இருந்த விடுதியின் 3 மற்றும் 2 வது மாடி படிகள் தண்ணீர் ஊற்றி கழுவியிருந்தனர்.
மேலும் உயிரிழந்த மாணவியின் கழுத்து நெரிக்கப்பட்டும், முகத்தாடையிலும், தொடைப் பகுதியிலும் கத்தியால் குத்திய காயங்கள் இருந்துள்ளது. இதனால் மாணவி ராஜேஸ்வரியின் சாவில் மர்மம் உள்ளதென கூறி மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவக்கல்லூரி முன் போராட்டம் நடத்த முயன்றனர்.
சம்பவ இடத்திற்கு வந்த திருச்சி மத்திய மண்டல காவல்துறை ஐஜி மற்றும் போலீஸார் மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினருடன் பேசினர்.
போலீஸ் ஐஜி, சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் முறையாக புகார் அளித்தால் உரிய விசாரணை நடத்திடுவோம் எனக் கூறினார். அதன் பேரில் சமயபுரம் காவல் நிலையத்தில் மாணவியின் தந்தை ராமையன் மகள் சாவில் மர்ம்ம் உள்ளதென புகார் கூறியதன் பேரில் போலீஸார் வழக்கு பதிந்து, மாணவியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்..
Total Pageviews
News
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...

0 comments:
Post a Comment