Sunday, July 25, 2021
உலக தமிழ் பல்கலைக்கழகம் அமெரிக்கா சார்பாக திருச்சியில் கௌரவ டாக்டர் பட்டம்
அமெரிக்க உலக தமிழ் பல்கலைக்கழகம் சார்பில் திருச்சியில் பல்வேறு தரப்பட்ட சாதனையாளர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் அளித்தது. இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி வி.ஐ.பி. ஏஜென்சி சேர்மென் A.மனோகரன் மற்றும் சேலம் ஜஸ்ட் வின் பிரைவேட் லிமிடெட் சேர்மேன் Dr.A. பாலசுப்பிரமணியம் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும், அமெரிக்க உலக தமிழ் பல்கலைக்கழக சேர்மன் Dr.A.M.ராய் பெர்னான்டோ அவர்கள் தலைமையில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கபட்டது.
இந்நிகழ்ச்சியில் சேலம் தர்ஷிகா (10) சிறுவயதில் இருந்தே யோகா, தியானம் மீது ஆர்வம் கொண்ட இவர் ஊரடங்கு காலத்தில் தொடர்ந்து யோகா பயிற்சியில் ஈடுபட்டார்.
கொரோனா மூன்றாம் அலையில் குழந்தைகளை பாதிக்கும் என்ற அச்சம் உள்ள நிலையில் யோகா மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்து தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ள முடியும் என்பது தொடர்பாக விழிப்புணர்வு செய்ய தர்ஷிகா முடிவு செய்து சேலம் பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் மாணவி தர்ஷிகா பத்மாசனமிட்டு தலையில் தக்காளி பழத்தை வைத்து முப்பத்தி ஒரு நிமிடம் (31) யோகாசனம் செய்து பதஞ்சலி புக் ஆப் வேர்ல்டு ரெக்காட்ஸ் இடம்பெற்று கேடயம் வழங்கப்பட்டது. மற்றும் திருச்சி மேலப்புதூர் ஜோசப் ஆங்கிலோ இந்தியன் பெண்கள் மேல்நிலை பள்ளியில் படிக்கும் சுகித்தா. இவர் கடந்த மூன்று வருடங்களாக தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்பத்தை தனது சிலம்ப ஆசான் கலைசுடர்மணி திரு.எம்.ஜெயக்குமார் அவர்களிடம் முறைபடி சிலம்பத்தை கற்று தேர்ந்து சிலம்பத்தில் 5 புதிய உலக சாதனைகளும், சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச சிலம்ப போட்டிகளில் பங்கற்று தங்கம் வென்று, மேலும் தேசிய, மாநில மற்றும் மாவட்ட சிலம்ப போட்டிகளில் பங்குபெற்று இதுவரை 25 தங்கம் 12 வெள்ளி மற்றும் 4 வெண்கல பதக்கங்களும் வென்றுள்ளார்.
இவரை நமது இந்திய நாட்டின் துணை ஜனாதிபதி உயர்திரு. வெங்கையா நாயுடு அவர்கள் நேரில் அழைத்து பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் டெல்லியில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேசிய அளவிலான துப்பாக்கி பிஸ்டல் சுடும் போட்டியில் பங்கு பெற்றும் தங்கம் வென்றுள்ளார். மேலும் யோகா குருஜீ கிருஷ்ணகுமார் அவர்களின் பயிற்சியில் யோகாவில் புதிய உலக சாதனையும் செய்துள்ளார். மேலும் பாரதிதாசன் பல்கலைக்கழகம் இவருக்கு முன்னோடி பெண்மனி விருதும் கொடுத்து கௌரவ படுத்தியுள்ளார்கள்.
இவர் தான் கற்ற சிலம்ப கலையை தனது மூத்த ஆசான் ஜெயக்குமார் அவர்களின் அறிவுரை படி இலவசமாக பல அரசு பள்ளிகளுக்கும் சென்று கற்று கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
தனது 13 வயதிலேயே இத்தனை சாதனைகளை புரிந்த மோ.பி.சுகித்தா அவர்களுக்கு உலக தமிழ் பல்கலைக்கழகம் அமெரிக்கா சார்பாக இளம் கௌரவ டாக்டர் பட்டமும், மேலும் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட மலேசியாவில் மூன்று தலைமுறையாக வசித்து வரும் கலைமாமணி அன்பழகன் குப்புசாமி அவர்கள் தமிழரின் பாரம்பரிய கலையான சிலம்பத்தை நன்கு கற்றறிந்து தான் கற்ற சிலம்ப கலையை மலேசியாவில் 8 மாநிலத்திலும் சிங்கப்பூரிலும் சிலம்பக் கோர்வை கழகம் என்கிற அமைப்பைத் துவங்கி இதுவரை 500க்கும் மேற்பட்ட மாணவர்களையும் 100க்கும் மேற்பட்ட சிலம்ப ஆசான்களையும் உருவாக்கியதோடு மட்டுமல்லாது பல சிலம்ப போட்டிகளில் தனது மாணவர்களைப் பங்கெடுக்கச் செய்தும் சர்வதேச போட்டிகளை நடத்தியும் அதில் வெற்றி பெற வைத்ததைப் பாராட்டி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கபட்டது.
மேலும் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட அயோத்தி அவர்களின் மகன் ராஜலிங்கம் அவர்கள் மலேசியாவில் குடியுரிமை பெற்று மலேசியாவில் கடந்த 20 வருடங்களாக கம்யூனிகேஷன் துறையில் 40க்கும் மேற்பட்ட பணியாளர்களுடன் மலேசியாவில் தனது தொழிலை திறம்பட நடத்தி வருகின்றார். தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட இவர் மலேசியாவில் திறம்பட தொழில் செய்வதை பாராட்டி கௌரவ டாக்டர் பட்டம் பெறனர். இந்த பட்டமளிப்பு விழாவை திருச்சி ருத்ர சாந்தி யோகாலையா குருஜீ கிருஷ்ணகுமார் ஏற்பாடு செய்திருந்தார்கள்.
Total Pageviews
News
Pages
Popular Posts
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
திருப்பூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நாராயணன் பதவி உயர்வு பெற்று சேலம் மாவட்டத்திற்கு மாற்றலாகி சென்றுவிட்...
-
ஊழல்வாதிகளை தண்டிக்க தமிழகத்தில் ‘லோக் அயுக்தா’ அமைப்பை ஏற்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் எ...
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
சென்னையில் நேற்று இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பலத்த மழை சென்னையில் நேற்று காலை வெயில் கடுமையாக இருந்தது. மாலையில் லேசான ஈரப்பதமா...
-
. திருச்சி மாவட்ட பளுதூக்கும் சங்கம் மற்றும் எஸ் ஆர் எம் சுகாதார கிளப் இணைந்து 2018-ம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி திருச்சி திருவெறும்பூர...
-
மணப்பாறையில் காவல்துறை அனுமதி கடிதத்தோடு வெளிமாவட்டங்களுக்கு பயணிக்கும் மக்கள். இது சாத்தியமா? மேலதிகாரிகள் மற்றும் அரசு தான் இதற்...
-
திருச்சிராப்பள்ளியில் வாக்களிப்பதின் அவசியத்தை வலியுறுத்தி மாபெரும் கையெழுத்து இயக்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் பழனிசாமிதொடங்கிவைத்...

0 comments:
Post a Comment