Friday, August 06, 2021
திருச்சியில் கட்டிட தொழிலாளர்களுக்கு கோவிட் தடுப்பூசி முகாம் துவக்கிய அப்பல்லோ மருத்துவமனை குழுமம்
திருச்சி, தமிழ்நாடு அமைப்புசாரா கட்டிட தொழிலாளர்களுக்கு கோவிட் தடுப்பூசி வழங்கும் திட்டத்தின் கீழ் முதலமைச்சர் திரு மு.க ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின் படி அப்போலோ குழுமத்தின் தலைவர் மருத்துவர் பிரதாப் ரெட்டி அவர்களால், அனைத்து அப்போலோ மருத்துவமனைகளும் தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியத்துடன் இணைந்து 2 லட்சம் அமைப்புசாரா கட்டிட தொழிலாளர்களுக்கு கோவிட் தடுப்பூசியானது தமிழ்நாடு முழுவதும் அளிக்கப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக வியாழன் அன்று (05.08.2021) திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தொழிலாளர் நலத்துறையுடன் இணைந்து திருச்சி அப்பல்லோ சிறப்பு மருத்துவமனை, டெல்டா மாவட்டங்களில் உள்ள அமைப்புசாரா கட்டிட தொழிலாளர்களுக்கு கோவிட் தடுப்பூசி 30,000 தொழிலாளர்களுக்கு வழங்கவுள்ளது. இந்நிகழ்ச்சியை, அமைச்சர்கள் திரு. கே. என். நேரு மற்றும் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் திரு.எஸ் சிவராசு, தொழிலாளர் துறை கூடுதல் ஆணையர் திரு.பாலசுப்ரமணியன் உடன் இருந்தனர்.
அப்போலோ மருத்துவமனை சார்பில் அப்போலோ குழுமத்தின் முதுநிலை தலைமை மருத்துவ அதிகாரி மற்றும் அப்போலோ குழுமத்தில் கோவிட் தடுப்பூசிக்கான நடவடிக்கைகளை நாடு முழுவதும் நடத்தி வருகிறது. இது தொடர்பாக மருத்துவர் ரோகினி ஸ்ரீதர் கூறுகையில் இத்திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலார்களுக்கு கோவிட் தடுப்பூசி வழங்கப்படுவதாக கூறினார். திருச்சி மருத்துவமனை தலைவர் சாமுவேல், விற்பனைப் பிரிவு பொது மேலாளர் மணிகண்டன், நிலைய மருத்துவ அதிகாரி மருத்துவர் சிவம், மற்றும் மருத்துவமனை துணை பொது மேலாளர் சங்கீத் உடனிருந்தனர்.
Total Pageviews
News
Pages
Popular Posts
-
மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே உள்ள பொய்கைகரைப் பட்டியை சேர்ந்தவர் வாசு .இவர் மவுலிவாக்கம் கட்டிட பணியின் போது கொத்தனாராக வேலை பார்த்து...
-
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி சமத்துவ மக்கள் கட்சியின் ஆலோசனை கூட்டம் சாத்தான்குளத்தில் நடைபெற்றது. தென் மண்டல அமைப்...
-
திருப்பூர்,பட்டாகேட்டு, 63 வேலம்பாளையம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ரேஷன்கார்டு, ஆதார் அட்டை போன்ற ஆவணங்களை ஒப்படைக்க கலெக்டர் அலுவலகத்துக...
-
திருப்பூர் : மாவட்டத்தில், உள்ளாட்சி இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ள பள்ளிகளுக்கு, இன்றும் நாளையும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்...
-
OXFORD ENGINEERING COLLEGE, TRICHY 16th Convocation day was held on 25-08-2018 at Oxford Engineering College. The function was preside...
-
Sir/Madam The Birth Anniversary of 'Suyamariyathai Sudar' M.A.Shanmugam will be celebrated on behalf of Government of Puducherry ...
0 comments:
Post a Comment