Saturday, February 08, 2020

On Saturday, February 08, 2020 by Tamilnewstv in ,    


திருச்சி எல்பின் நிறுவன உரிமையாளர்  ராஜா என்கிற அழகர்சாமி  மற்றும்  ரமேஷ் குமார்  அரசுக்கு எதிராக செயல்படுவதால்  கைது செய்யப்படுவார்களா

திருச்சி மன்னார்புரத்தில் உள்ள எல்பின் நிறுவனத்தில் பல்வேறு கவர்ச்சி டெபாசிட் திட்டங்களை அறிவித்து பல பெரிய ஹோட்டல்களில் கூட்டம் நடத்தி பணம் வசூலித்து வருகின்றனர்.



இந்நிறுவனம் குறித்து பல்வேறு புகார்கள் உள்ளன இது தொடர்பாக  குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று மதியம் தஞ்சையில் எல்பின்  நிதி நிறுவனத்தின் உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. தஞ்சை தனியார் மண்டபத்தில் இதற்காக தஞ்சை எல்பின் நிதிநிறுவன லீடர் பிரசன்ன வெங்கடேஷன்  ஏற்பாடு செய்திருந்தார்.
இதை அறிந்த தஞ்சை மாவட்ட ஆட்சியர் எல்பின்  நிதி நிறுவனம் முறைப்படி இயங்குகிறதா இந்த கூட்டத்திற்கு யார் அனுமதி அளித்துள்ளார் என விசாரிக்க சொல்லி காவல்துறைக்கு உத்தரவிட்டார்.
 அதன்பேரில் தஞ்சை பல்கலைக்கழக போலீசார் கூட்டத்தை கேன்சல் செய்ய சொல்லிவிட்டு கூட்டத்தை ஏற்பாடு செய்த பிரசன்ன வெங்கடேசனை மேல்  விசாரணைக்காக தஞ்சை மாவட்ட குற்ற பிரிவு அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர்.

இதனால் ஆவேசமடைந்த எல்பின் தலைவர்  ராஜா என்கிற அழகர்சாமி  மற்றும்  ரமேஷ் குமார் எல்பின் வாட்ஸ்அப் குரூப்களில் அனைவரும் ஒன்று திரண்டு நமது சக்தியை காவல்துறையினருக்கு எதிராக காட்டவேண்டும் ஒன்று திரண்டு வாருங்கள் என சட்டத்திற்கு விரோதமாக கூறினார். இவரது பேச்சை கேட்டு 200க்கும் மேற்பட்ட எல்பின் உறுப்பினர்கள் தஞ்சை எஸ்பி அலுவலகம் முன் அரசுக்கு எதிராக திரண்டனர். இதனால் எஸ்.பி அலுவலகம் முன்பு பரபரப்பாக காணப்பட்டது . இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த ஆயுதப்படை போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். பின்பு தஞ்சை மாவட்ட லீடர் பிரசன்னா வெங்கடேசன் மற்றும் இருவர் மீது தஞ்சை தமிழ் பல்கலைக்கழக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சையில் உள்ள பொதுமக்கள் போலி நிதி நிறுவனம் மீது உடனடி நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சித் தலைவரையும், காவல் துறையினரையும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் மீண்டும் இன்று மாலை 5 மணிக்கு திருச்சி ரம்யாஸ் ஓட்டலில் நந்தனம் மகாலில் இதே போல் ஓர் நிகழ்ச்சி இந்த எல்பின் போலி நிதி நிறுவனத்தால் நடத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல தகவல்களுடன்

Friday, February 07, 2020

On Friday, February 07, 2020 by Tamilnewstv in ,    


தனது உயிருக்கு எல்பின் நிறுவனத்தினரால்  ஆபத்து புதுகை சத்தியமூர்த்தி கதறல்.

திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு பொதுமக்களுக்கு தங்கள் முதலீட்டை 300 மடங்காக தரும் ஒரே நிறுவனம் என விளம்பரம் செய்து ஏமாற்றி பணம் சம்பாதித்து வரும் எல்பின் நிறுவனம் குறித்து பல இடங்களில் புகார் அளித்து வருபவர் புதுக்கோட்டையை சேர்ந்த சத்தியமூர்த்தி.

இவர் நமக்கு அனுப்பிய வீடியோவில்

நான் தொடர்ந்து எல்பின் நிறுவனத்தின் முறைகேடுகள் குறித்து திருச்சி ,புதுகை, தஞ்சை, மதுரை போன்ற மாவட்டங்களில் காவல்துறையில் புகார் அளித்துள்ளேன். இதனால் என்னிடம் 50 லட்சம் வரை தருகிறேன் என பேரம் பேசினார்கள் வழக்குகளை வாபஸ் பெறக் கோரி. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பதால் வழக்கை வாபஸ் பெற மாட்டேன் என கூறியதால் என் மீது பல்வேறு பொய் வழக்கு பதிந்தார்கள். (பாலியல் வழக்கு உள்பட)
அதற்கும் உடன்படாததால் தற்போது திருச்சி சேர்ந்த அறம் மக்கள் நல சங்கம் பிரமுகர் எனக்கூறி பிரபாகரன் என்பவர் என்னை நீ சின்னப் பையன் நாங்கள் சொல்வதை கேட்காவிட்டால் உனது கழுத்தை அறுத்து விடுவேன் கொலைமிரட்டல் விடுகின்றார்.
பொதுமக்களுக்கு  சேவை செய்ய வேண்டும்  என்ற மனப்பான்மையில்  உள்ள எனக்கு  பல்வேறு சோதனைகள்  வேதனைகள் ஏற்படுகின்றது  எல்லாம் ELFIN  நிறுவனத்தின் பணத்தால்  தான் எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அது முழுக்க முழுக்க  ELFIN நிறுவனம் மட்டுமே காரணம்.



மேலும் பல தகவல்களுடன்
On Friday, February 07, 2020 by Tamilnewstv in ,    
தைப்பூச விழாவையொட்டி சமயபுரத்தில் தெப்பத் திருவிழா.

       திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாக சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் ஆகும். இந்த ஸ்தலத்திற்கு பகுதிகளிலிருந்து பக்தர்கள் வந்து சென்று தங்களது நேர்த்திக் கடனை செலுத்தி வருகின்றனர்.

  சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச திருவிழா  10  நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும். ஜனவரி 30 கொடியேற்றத்துடன் துவங்கிய விழா தினமும் ்இரவு அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
 9 ம் நாளான இன்று தெப்பத் திருவிழா நடைபெற்றது. அம்மன்  தெப்பத்தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

  10 ம் நாளான  நாளை  காலை  அம்மன் கோயிலிருந்து தைப்பூசத்திற்காக கண்ணாடி பல்லாக்கில் எழுந்தருளி கொள்ளிடம் வடகாவிரியில்  அண்ணன் ஸ்ரீரங்கம் ரங்கநாதரிடம் தைப்பூசத்திற்க்கு சீர் வாங்கும் விழா நடைபெறும்.

            விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர்  கே.பி. அசோக்குமார் மற்றும் கோயில் பணியாளர்கள், பக்தர்கள் செய்திருந்தனர். விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர்.
On Friday, February 07, 2020 by Tamilnewstv in ,    
திருச்சி பாலக்கரை கீழப்புதூர் அருகே மதிமுக சார்பில் பொதுமக்களிடையே இந்திய குடியுரிமை சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கையெழுத்து பெறப்பட்டது

மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி திருச்சி பாலக்கரை புதூர் காளியம்மன் கோவில் எடத்தெரு அருகே  அருகில் மதிமுக மாவட்ட செயலாளர் வெல்ல மண்டி சோமு மாநில மகளிர் அணி அமைப்பாளர் ரொகையா ஆகியோர் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தனர்.


இந்நிகழ்ச்சியில்  பெல் ராஜமாணிக்கம் அன்புராஜ் ஜங்சன் பகுதி செயலாளர் பிரபாகரன் பொறியாளர் ஸ்டீபன் பகுதி நிர்வாகிகள் வழக்கறிஞர் ஜஸ்டின் செல்லகுமார் மாவட்ட பிரதிநிதி கரிகாலன் பகுதிசெயலாளர்கள் துரை வடிவேல், எடத் தெரு சரவணன், ஜெயசீலன்,  பொன்மலைப்பட்டி கணேசன், அகமது கபீர், ரஜினி சிவா, கல்லுக்குழி பன்னீர்செல்வம், வட்டச் செயலாளர் திருச்சி செல்லத்துரை, திமுக நாகராஜ், ஜமால், ராமமூர்த்தி, ஷாஜஹான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Thursday, February 06, 2020

On Thursday, February 06, 2020 by Tamilnewstv in ,    
தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் நலச்சங்கம் சார்பில் பெருந்திரள் முறையீடு போராட்டம் இன்று நடைபெற்றது. திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடந்த இந்த போராட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் காயத்ரிதேவி தலைமை வகித்தார். செயல் தலைவர் கோமதி சிறப்புரையாற்றினார்.
கிராம சுகாதார செவிலியர்கள் முதல் மருத்துவர்கள் வரை பழிவாங்கும் நடவடிக்கை என ஒழுங்கு நடவடிக்கை, இடமாறுதல் உத்தரவு, தற்காலிக பணிநீக்கம் ஆகியவற்றை நிபந்தனையின்றி ரத்து செய்ய வேண்டும். நிரந்தர குடும்பநல அறுவை சிகிச்சைக்கு வற்புறுத்தி கிராம சுகாதார செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது. பெண்கள் பிரசவத்திற்கு, மேல் சிகிச்சைக்கு பரிந்துரைத்த பின்னர் ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை தனியார் மருத்துவமனைகளில் உள்ளவர்கள் தான் பெண்களை பொறுப்புடன் கவனித்துக் கொள்ளவேண்டும். இதற்காக கிராம சுகாதார செவிலியர்களை அழைக்கக் கூடாது. தேசிய ஊரக நல திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதி விபரம் குறித்த தகவலை குறுஞ்செய்தி, வாட்ஸ்அப், இமெயிலில் வெளிப்படையாக தெரியப்படுத்த வேண்டும்.
 துணை சுகாதார நிலைய மேம்பாட்டு நிதி, நிபந்தனையற்ற நிதி, கிராமக் குடிநீர் மற்றும் துப்புரவு குழு நிதிகளை மூன்று ஆண்டுகளாக முறையாகவும், முழுமையாகவும் வழங்க வேண்டும். வாடகையில் இயங்கும் துணை சுகாதார நிலையங்களுக்கு நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும். பழுதடைந்த துணை சுகாதார நிலையங்களுக்கு வாடகை பிடித்தம் நிறுத்தப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.
On Thursday, February 06, 2020 by Tamilnewstv in ,    
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவர் திருச்சி எல்பின் நிதி நிறுவன மோசடி குறித்து

திருச்சி மாவட்டக் காவல்துறை ஆணையர் அவர்களிடம் அளித்துள்ள புகாரில்
தொடர்ந்து மோசடியில் ஈடுபட்டுவரும் எல்பின் நிறுவனம் மாதம் தோறும் பெரிய ஹோட்டல்களில் தன தங்களது லீடர்கள் மூலம் ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்களை வரவைத்து மூளைச்சலவை செய்து தொடர்ந்து கோடிக்கணக்கில் ஏமாற்றி வருகின்றனர். இரண்டு நாட்களுக்கு முன்பு கூட திருச்சி BREEZE ஹோட்டலில் பல ஆயிரம் பேரை திரட்டி ஏமாற்றி கோடிக்கணக்கில் வசூல் செய்தனர்.
இந்த மோசடி ELFIN நிறுவனம் பற்றி நான் புதுக்கோட்டை தஞ்சாவூர் மதுரை திருச்சி என பல மாவட்டங்களிலும் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளேன். இவர்கள் நோக்கம் கொள்ளை அடிப்பது மட்டும்தான்.



(2013 ஓரியண்ட் ஹைபர் மார்க்கெட் பார்ட்னர்கள் பாதுஷா மற்றும் இரண்டு நபர்கள் டின் நம்பர் 0002927268 அடுத்தது 2014 வராக மணி பார்ட்னர்கள் ரமேஷ்குமார் விஸ்வநாதன் செட்டியார் டின் நம்பர் 0003161010 & 0006833411 அடுத்தது 2017 எல்ஃபின் பார்ட்னர்கள் ரமேஷ்குமார் எல்ஃபின் பார்ட்னர்கள் ரமேஷ்குமார் & பாதுஷா டின் நம்பர் 0003161010 & 0002927268 அடுத்தது 2019 ஸ்பேரோ குளோபல் டிரேடிங் பார்ட்னர்கள் பால்ராஜ் அறிவுமணி பாபு பார்ட்னர்கள் பால்ராஜ் அறிவுமணி பாபு ஜிஎஸ்டி பின் நம்பர் 33ADSFS9169BIZN)

மதுரையை தலைமையிடமாக கொண்டு 2013ல் பாதுஷா என்பவர் 2 பேர் பார்ட்னருடன் ஒரு கம்பெனியை தொடங்குகிறார். அங்கு நஷ்டக் கணக்கு காண்பித்து விட்டு தலைமறைவாகி 2014 சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு வருதா மணி என்ற கம்பெனியை ஆரம்பிக்கின்றனர். அதில் இரண்டு பேர் பார்ட்னர் ஒருவர் ரமேஷ்குமார் மற்றவர் விஸ்வநாதன் செட்டியார் அதையும் மூடிவிட்டு 2017ல் இந்த எல்பின் நிறுவனத்தை ஆரம்பிக்கின்றனர் .
இதில் பங்குதாரர்கள் ரமேஷ்குமார், பாதுஷா இதுவும் சிறிது நாட்களில் வருமானவரி சோதனையில் சிக்கி மூடப்படுகிறது.

மறுபடியும் இதே எல்பின் நிறுவனத்தின் பெயரை வைத்து ஸ்பேரோ குளோபல் டிரேடிங், ஸ்பேரோ ரியாலிட்டி இந்த நிறுவன பங்குதாரர்கள் அறிவுமதி, பால்ராஜ், பாபு இவர்கள் ஆரம்பிக்கும் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் ஒரே நம்பர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.. இவர்களைப் பற்றி புகார் அளித்தாலும் ஏதாவது தகவல் பரப்பினால் ஒன்று ஆள் வைத்து மிரட்டுவது, பொய் வழக்கு போடுவது அல்லது உங்களுக்கு எவ்வளவு வேண்டும் என செட்டில்மெண்ட் பேசுவது அவர்கள் வாயை அடைத்து இவர்கள் தொழிலை நன்றாக நடத்த வேண்டும் என்பது மட்டுமே இவர்களது குறிக்கோள். என்னைக் கூட திருச்சி அறம் மக்கள் நல சங்கம் சேர்ந்த மாநில பொறுப்பாளர் பிரபாகரன் என்பவர் நான் அறம் மக்கள் நல சங்கத்தில் உள்ளேன் நீங்கள் அனுசரித்துப் போனால் எப்படியும் இருக்கலாம் இல்லை என்றால் என்னை பற்றி தெரியாது கொலையும் செய்யத் தயங்க மாட்டேன் என மிரட்டி விட்டுச் சென்றார். தற்போது இவர்களை பாதுகாத்துக்கொள்ள 2015இல் வேற ஒரு நபர் பதிவு செய்த பத்திரிக்கையை 5 லட்ச ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளனர், அதேபோல் 25 லட்சம் கொடுத்து அறம் டிவி என்பதை வாங்கியுள்ளனர். பல குற்ற வழக்குகள் உள்ள ரமேஷ் எப்படி மக்கள் ராஜன் என்ற பத்திரிகைக்கு ஆசிரியர் ஆனார் என்பது தெரியவில்லை.பணம் இருப்பதால் எதையும் சாதிக்கலாம் என நினைத்துக் கொண்டு உள்ளார் . தங்கள் மீது உள்ள குற்ற வழக்குகளில் இருந்து தப்பிக்க தற்போது மீடியாவை பயன்படுத்தி வருகின்றார். தற்போது இவர்களுடன் இருக்கும் கருப்பு பணத்தை மாற்ற ஏ ஆர் ரகுமான் அவர்களை வைத்து திருச்சியில் மாபெரும் இசை நிகழ்ச்சி வழங்க உள்ளார். முழுவதுக்கும் இவர்கள் ஸ்பான்சர் வழங்கியுள்ளனர். அதாவது 10,000 பேர் வந்தால் 10 லட்சம் பேர் வந்ததாக கணக்கு காட்டி கருப்பை வெள்ளையாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். எல்பின் பற்றி மாற்றம் மக்கள் நல சங்கம் சார்பில் திருச்சி காவல்துறையிடம் பொதுமக்கள் 45 பேர் புகார் அளித்தனர் அந்த மாற்றம் மக்கள் நல சங்கத்தை தற்போது தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக பெருமையாக கூறி வருகிறார். தாது பணத்தால் எதையும் சாதிக்கலாம் என்று நினைத்துள்ளார். நான் அவர்களுக்கு வளைந்து போகாததால் தான் எனது மீது பொய் வழக்கு பதியப்பட்டுள்ளது. ரமேஷ் .காவல்துறை பொது மக்களை காக்க என்ன நடவடிக்கை எடுக்கும் என காத்திருக்கிறேன்.

இவர்களிடம் (எந்தப் பத்திரிகையிலும் இல்லாமல் நான் பத்திரிகைகள் என கூறிக்கொண்டு ) காசு வாங்கி திங்கும் சில சமூக விரோதிகள் வாட்ஸ்அப் குழுக்கள் மற்றும் யூட்யூப் களில் செய்திகள் போடும் நண்பர்களை சமூக விரோதிகள் என ரமேஷ் குமார் அவர்களுக்கு ஜால்ரா அடித்து வருவது வேதனையிலும் வேதனை.

மேலும் புதிய தகவல்களுடன் தொடரும்

Sunday, February 02, 2020

On Sunday, February 02, 2020 by Tamilnewstv in ,    
திருச்சி நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம் ELFIN  திட்டத்தால் போக்குவரத்து பாதிப்பா

திருச்சி பிரீஸ் ஹோட்டலில் நடக்கும் தனியார் நிறுவனம் எல்பின் நிகழ்ச்சிக்கு திருச்சி கலையரங்க வளாகத்தில் பார்க்கிங் அனுமதி அளித்தது யார்....
முன்னாள் எஸ்பி கலியமூர்த்தி கலந்துகொள்ளும் நிகழ்ச்சி கலையரங்கம் வளாகத்தில் நடைபெற்றது

அதற்கு வாகன நிறுத்த இடம் இல்லை அதனால் வாகனங்கள் சாலையில் நிறுத்தி உள்ளார்கள்.

எல்பின் கவர்ச்சி திட்டங்கள்

*ELFIN E COM PRIVATE LIMITED*


*HIGHWAY  ECM*
Rs84,000
(PV 7)
✓10000 Members  only Eligible•••
✓1000 Members only mega price •••

✓First price
 100 Members 600 sqrFit home(House)•••

✓Second price
10 Members car•••

✓Third price 100 Members Plot•••

✓Fourth price 100 Members 5 பவுன் GoldChain•••

✓Fifth price  100 members Royal Enfield•••

✓Sixth price 100 members 3 பவுன் gold Chain•••

✓Seventh price 490 members 65 inches LED TV , DVD Player, Home theater•••

•••Balance 9000 Members-ku
LED TV....FREE••••
*****************************
ஏன் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை.மாவட்ட நலப்பணி நிதி குழு கையூட்டு பெறப்பட்டதா மாவட்ட ஆட்சியர் விசாரணை செய்ய வேண்டும் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்
On Sunday, February 02, 2020 by Tamilnewstv in    
திருச்சி எல்பின் நிறுவனம் மீது பொதுமக்கள் நலன் கருதி புகார் அளித்த நபருக்கு எதிராகபாலியல் புகார்.
                       
சத்தியமூர்த்தி மாவட்ட இளைஞரணி துணை தலைவர் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா சேர்ந்தவர் இவர் சில நாட்களுக்கு முன்பு எல்ஃபின் e-com பிரைவேட் லிமிடெட் திருச்சி கல்லுக்குழி தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது எல்லோரும் கோடீஸ்வரர் ஆகலாம் என்ற ஆசை வார்த்தைகளை கூறி ஒரு நபர் இந்த கம்பெனியில் இணைவதற்கு 12 ஆயிரம் பணத்தை வாங்கி அதற்கு மதிப்புள்ள பொருட்களை தருகிறோம் என்றும் உங்களுக்கு கீழ் நான்கு நபர்களை சேர்த்தால் இந்த நான்கு நபர்களும் ஒரு நபர் வீதம் 5000 கமிஷனாக வழங்கப்படும் என்றும் கூறுகிறார்கள் மேலும் எங்கள் கம்பெனி ரியல் எஸ்டேட்டில் மூன்று லட்சம் முதலீடு செய்தால் பத்தே மாதங்களில் 9 லட்சம் தருவோம் என்று கூறுகிறார்கள் மக்களை திசைதிருப்பி பணத்தை கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறார்கள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களை ஆசை வார்த்தைகள் கூறி முதலீடு செய்ய வைத்துள்ளார்கள் தற்போது

புதுக்கோட்டை ஆலங்குடி எங்கும் கூட்டங்கள் நடக்காத படி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் மேலும் இந்த நபர்கள் திருச்சியிலுள்ள நட்சத்திர ஹோட்டல்களில் கூட்டம் நடத்தி மக்களிடம் பணம் பறிக்கின்றனர் இப்படி ஆசை வார்த்தைகள் காட்டி பணம் கொள்ளையடித்தவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சத்தியமூர்த்தி கூறியுள்ள இதனை எதிர்கொள்ள முடியாத எல்பின் நிறுவனம் சத்தியமூர்த்திக்கு எதிராக பாலியல் புகார் ஒன்றை கொடுத்து வழக்கை வாபஸ் பெறக்கோரி அடியாட்களை வைத்து மிரட்டுவதாக சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
On Sunday, February 02, 2020 by Tamilnewstv in ,    
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள் மோசடி காவல்துறையில் புகார் தெரிவிக்கலாம் காவல்துறை  அறிவிப்பு*

திருச்சி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மதுரை திருமங்கலத்தில்  ரமேஷ் குமார் என்கிற ரமேஷ் பாதுஷா சாகுல் ஹமீது  என்கிற அழகர்சாமி பஷீர் ஆகியோர் ELFIN என்ற நிறுவனம் துவக்கினர் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு பரிசுப்பொருட்கள் முதலீடு தொகை முதலீட்டாளர்களுக்கு பிரித்து வழங்கப்படும் என ஆசை வார்த்தைகள் கூறி ஆயிரம் கோடி கணக்கில் பணம் வசூல் செய்துள்ளனர் குறிப்பாக பத்தாயிரம் ரூபாய் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் மாதம் ஆயிரம் ரூபாய் மற்றும் காலிமனை கிடைக்கும் என்றும் வருடத்திற்கு பிறகு 20 ஆயிரம் ரூபாய் பணம் திரும்பக் கிடைக்கும் என்று கூறி பணம் வசூல் செய்ததாக கூறப்படுகிறது
கடந்த சில ஆண்டுகளில் என்ற நிறுவனம் மதுரை திண்டுக்கல் திருவண்ணாமலை திருச்சி மட்டுமல்லாது தமிழகம் முழுவதிலும் சுமார்  ஆயிரம் கோடிக்கு மேல் மோசடி செய்துள்ளதாக செய்ததாக புகார் எழுந்துள்ளது பல்வேறு புகார்களின் அடிப்படையில் வருமான வரித்துறை சோதனை நடத்தினர் ஆனால் திருச்சியில் இன்றுவரை தொடர்ந்து எல்பின் நிறுவனம் தனது கூட்டம் நட்சத்திர ஹோட்டல்களில் நடத்திவருகிறது

 இந்நிலையில் தன்னிடம் பணம் வசூல் செய்த ELFIN நிறுவனம் பணத்தை திரும்பத் தராமல் ஏமாற்றியதாக திருவாரூரைச் சேர்ந்த குமார் என்பவர்  குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார் அந்த புகாருக்கு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது இந்த நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் திருச்சி மன்னார்புரம் பல்துறை கட்சி அலுவலகத்தில் உள்ள திருச்சி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுக்கலாம் என்று தெரிவித்துள்ளது காவல்துறை
0431-2422220 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது