Tuesday, December 01, 2020
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார்.
திருச்சி் மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பிக்சாண்டார் கோயில் ஊராட்சியில் இன்று முதன் முறையாக விவசாயிகளுக் கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் திரு.பெரியகருப்பன் அவர்கள் தொடங்கி வைத்து திட்டம் குறித்து விளக்க உரை ஆற்றினார். தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நெல் இயந்திர நடவு செய்யப்பட்ட வயல்களை ஆய்வு செய்தார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிச்சாண்டார்கோவில் முன்னோடி விவசாயிகளுக்கு வேளாண்மை துணை இயக்குநர் திரு.லட்சுமணசாமி பயிர்களில் ஏற்படும் பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாடு குறித்து விளக்கமாக எடுத்து கூறினார். அதுபோலே ஒவ்வொரு ஊராட்சியிலும் 10 முன்னோடி விவசாயிகளை தேர்ந்தெடுத்து அவர்களிடம் பூச்சி மற்றும் நோய்க்கட் டுப்பாடுகள் குறித்து பயிற்சி் அளிக்கப்பட்டு அந்த பகுதிகளில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் பூச்சி மற்றும் நோய்க் கட்டுப்பாடு குறித்து விளக்கமளித்து பயிர்களை காக்க ஆலோசனைகள் வழங்கப்படும். இந்நிகழ்வில் வேளாண்மை உதவி இயக்குநர் தாகூர், வேளாண்மை அலுவலர் உமா மகேஸ்வரி, துணை வேளாண்மை அலுவலர் சின்னப்பாண்டி உடன் இருந்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வேளாண்மை உதவி அலுவலர் பார்த்திபன் செய்து இருந்தார். வேளாண்மை உதவி அலுவலர்கள் பாஸ்கர், பிச்சைபிள்ளை மற்றும் ஆனந்த் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
கொடுமுடி அருள்மிகு மகுடேஸ்வரர் வீரநாராயண பெருமாள் கோவிலில் மண்டலாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. மகுடேஸ்வரர்–வீரநாராயண பெருமாளுக்...
-
ஈரோடு மாவட்டத்தில் யூரியா உரம் தட்டுப்பாட்டால் விவசாயிகள் பெரிதும் அவதி அடைந்து உள்ளனர். எனவே வேளாண்மைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என...
-
சுய உதவிக் குழு வங்கிக் கடன் திட்டத்தைத் மிகச் சிறப்பாக செயல்படுத்தும் தனியார் வங்கியாக தமிழ்நாடு மெர்க்கன்டை வங்கி தேர்வு செய்யப்பட்...
-
மதுரை மாவட்டம் மருத்துவ கல்லூரியில் (MEDI -EXPO 2014 ) மருத்துவ விழிப்புணர்வு கண்காட்சி மதுரை மாவட்ட ஆட்சி தலைவர் சுப்பிரமணியன் அவர்கள் இ...
-
திருப்பூர் வடக்கு ஒன்றியம் பொங்குபாளையம் ஊராட்சி பள்ளிபாளையம் மாகாளியம்மன் கோவில் திடலில் மக்கள் முதல்வர் ஜெயலலிதா பொய் வழக்கில் இருந்து...
-
படிப்பு விஷயத்தில் பெற்றோர் கண்டித்ததால் வீட்டை விட்டு வெளியேறிய சிறுமியை அவிநாசி அருகே புதன்கிழமை மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்...
-
திருச்சியில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி திருச்சி வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி அருகில் தமிழ்நாடு க...
-
சென்னை புறநகரில் அ.தி.மு.க.வினர் மொட்டை அடித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். நந்தம்பாக்கத்தில் மேயர் சைதை துரைசாமி பங்கேற்றார். அ...

0 comments:
Post a Comment