Tuesday, September 29, 2020
திருச்சி
புதிய விவசாயம் சட்டங்களை கொண்டு வந்த மத்திய அரசையும், அதற்கு ஆதரவு தெரிவித்த தமிழக அரசை கண்டித்தும், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், காங்கிரஸ்,மதிமுக, இந்திய, மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்டுகள், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, ஐஜேகே, கொங்கு மக்கள் கட்சி, பார்வர்டு பிளாக், ஆதித்தமிழர் பேரவை உள்ளிட்ட பல்வேறு திமுக கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் குறித்து கே.என்.நேரு செய்தியாளரிடம் பேசும்பொழுது........ திமுக கூட்டணிக் கட்சியினரின் இந்த ஆர்ப்பாட்டம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இந்த வெற்றியானது சட்டப்பேரவைத் தேர்தலிலும் தொடரும். நாங்கள் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தவுடன் விவசாயிகளுக்கு ஆதரவாக செயல்படுவோம் என்று அவர் கூறினார். இலால்குடி, பூவாளூர் மார்கெட், புள்ளம்பாடி, கல்லக்குடி, மணிகண்டம் வண்ணாங்கோவில், அந்தநல்லூர் ஜீயபுரம், ஸ்ரீரங்கம் ஆகிய இடங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி மாவட்டம் முழுவதும் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் பல்லாயிரக்கணக்கான திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி திருச்சி தி.மு.க செயல்வீரர்கள் கூட்டத்தில் நேரு பேச்சு திருச்சி மாவட்ட தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம் கலைஞர் அறிவாலயத்த...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா பகல்பத்து உற்சவம் நிறைவு நாளான இன்று 5ஆம் தேதி நம்பெருமாள் மோகினி அ...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் விரைவில் குணமடைய வேண்டி சிறப்பு யாகங்கள் நடைபெற்றது. வேலூர் மாவட்...
-
பெருந்துறை சீனாபுரம், திங்களூர் ஊராட்சிகளில் 237 பேருக்கு 948 விலையில்லா ஆடுகளை அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் வழங்கினார். 237 பேருக்கு ...

0 comments:
Post a Comment