Tuesday, April 14, 2020

On Tuesday, April 14, 2020 by Tamilnewstv in    
கோவிட் -19

ஐ அடுத்து, மாநில அளவிலான வங்கிக் குழு மற்றும் ரிசர்வ் வங்கி இந்தியாவின் கன்வீனர் ஆகியோரின் வேறு சில பரிந்துரைகளைத் தவிர்த்து, வங்கியின் வேலை நேரங்களைக் குறைக்குமாறு அனைத்து இந்திய வங்கி அதிகாரி கூட்டமைப்பு கோரியுள்ளது.

மாநில அளவிலான வங்கிக் குழு மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் கன்வீனருக்கு 5 பிற பரிந்துரைகளைத் தவிர்த்து காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை படிவம்.

கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் ஜி.வி. மணிமரன் ஒரு கடிதத்தில், வங்கியின் உறுப்பினர்களின் வேலை நேரம் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ஒரே மாதிரியாக மாற்றப்பட வேண்டும் என்றும், 5 சுற்றளவில் அமைந்துள்ள நகர்ப்புற மற்றும் அரை நகர மையங்களில் உள்ள கிளைகளில் ஊழியர்களை சுழற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.  கிளைகளின் எண்ணிக்கையை குறைக்க முடியும் மற்றும் நிர்வாக ஊழியர்களிடமிருந்தும் பின்புற அலுவலகங்களிலும் வரையறுக்கப்பட்ட ஊழியர்களுடன் செயல்பட முடியும், என்று அவர் பரிந்துரைத்தார்.

நிர்வாக ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார். இந்த ஆலோசனை, அடிப்படை வங்கி சேவைகள் வாடிக்கையாளர்களுக்குக் கிடைப்பதை உறுதிசெய்கையில், வங்கியாளர்கள் கோவிட் -19 ஆல் பாதிக்கப்படுவதற்கான அபாயத்தையும் குறைக்கும், என்றார்


TRANSLATION  IN ENGLISH


Banker's want working hrs staff strength to be reduced

In the wake of the Covid 19 Crisis,the all India National ized bank officers federation has requested that working hours of banks be reduced apart from making a few other recommendatioconvener of the state level banking committee and the Reserve Bank of India

From 10am to 2pm apart from five other recommendations to the convener of the State Level Banking committee and the   Reserve bank of india.
The general Secretary of the federation G.V. Manimaran in a letter urged that working hours of the member bank s be made uniform from 10am to 2pm and that staff be rotated at branches by drawing a roster,by clubbing branches in urban and semi urban center s located within a radius of 5km. The banks can cut down on the number of branches and operate with limited staff at administrative  and back - end offices, he suggested.
He also suggested that employee s into administrative duty be allowed to work from home. The suggestion s while ensuring that basic banking services are available for customer s, will also reduce the risk of bankers being infected by Covid -19 , he said


Monday, April 13, 2020

On Monday, April 13, 2020 by Tamilnewstv in    
மணப்பாறையில்
மதுவை தரையில் ஊற்றுவது போல் நாடகமாடி

ஒரு லிட்டர் வாட்டர் பாட்டிலில் ஊற்றி புதருக்குள் மறைத்த காவலர்கள் காவல் நிலையத்தில் பரபரப்பு.



திருச்சி மாவட்டம், மணப்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை அழிக்கும் பணி நடைபெற்றது. அப்போது காவல் நிலையத்தின் ஒரு பகுதியில் மதுபாட்டில்களை திறந்து மதுவை கீழே ஊற்றி விட்டனர். ஆனால் அந்த பணிகள் எல்லாம் முடித்து சென்று விட்ட பின்னர் அங்குள்ள புதர் போன்ற பகுதியில் சில மதுபாட்டில்கள் அப்படியே ஒரு சிறிய சாக்கில் இருப்பது தெரியவந்தது. இதுமட்டுமின்றி ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலிலும் முழுவதுமாக மதுவை நிரப்பி புதருக்குள் மறைத்தும் சாக்குப் பைகளில் முழு பாட்டிலை வைத்து இருந்தது தெரியவந்தது

பின்னர் இதுதொடர்பாக தகவல் அறிந்த செய்தியாளர்கள் சிலர் சம்பவ இடத்திற்கு சென்று அதை காட்சிகளாக பதிவு செய்வது பற்றி தகவல் அறிந்த போலீசார் மீண்டும் வந்து அந்த மதுபாட்டில்களை எடுத்துச் சென்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறும் போது அந்த மதுபாட்டில்களை திறக்க முடியாததால் அப்படியே விட்டுச் சென்றதாக கூறினர். ஆனால் ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலில் முழுவதுமாக மது நிரப்பப்ட்டது எப்படி என்று போலீசாரிடம் கேட்ட போது அதற்கான பதிலை தர மழுப்பி விட்டனர்.

 இதனால் ஒதுக்கி பதுக்கி வைக்கப்பட்ட மதுபாட்டில்களின் ரகசியத்தை அறிய காவல்துறை உயரதிகாரிகள் உடனடியாக விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை மேலோங்கி உள்ளது.


இதனை அறிந்த காவல் ஆய்வாளர் கண்ணதாசன் செய்தியாளர்களை செய்தி சேகரிக்க விடாமல்
அவரது வாகனத்தில் உள்ள ஒலிபெருக்கி மூலம் (மயிர புடுங்கி வந்தீங்களா) என்று
திட்டி விரட்டி உள்ளார் ஆகையால் காவல் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Sunday, April 12, 2020

On Sunday, April 12, 2020 by Tamilnewstv in    
தொட்டியத்தில் 144 தடை உத்தரவினால்  வாழை தோப்பில்  அழுகி வீணாகும் வாழை பழங்கள் -
கருணை காட்ட வாழை விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை.


திருச்சி மாவட்டம், தொட்டியம்  காவிரி கரையோர  பகுதியாகும் .இங்கு விவசாயிகள் பெருமளவில் வாழை பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர்.

தற்போது வாழைமரங்கள் நன்கு குலை தள்ளிய நிலையில் வாழைத்தார்கள் வெட்டி எடுத்து வியாபாரத்திற்கு எடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால்  விவசாயிகள் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி கண்ணீர் வடிக்கின்றனர்.


தொட்டியம் தாலுகாவில் சுமார் ஆயிரம் ஏக்கர் அளவில் பயிரிடப்பட்டுள்ள வாழை மரங்கள் தற்போது குலை தள்ளிய நிலையில் மரத்திலேயே நன்கு பழுத்த நிலையில் காணப்படுகிறது. தற்போது சுமார் ஒரு லட்சம் வாழை மரங்கள் அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் 144 தடை உத்தரவினால்  வாழைதார்கள்   தோப்பில் இருந்து வெட்டி வெளியே எடுத்து வந்து சரக்கு வாகனங்கள் மூலம் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்து வியாபாரம் செய்ய முடியாத நிலை உள்ளது. கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க பின்பற்றப்படும் சமூக இடைவெளி காரணமாக வாழை தார்களை வெட்டுவதற்கு  கூலி ஆட்களும் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வாழைத்தார்கள் தோப்பிலே பழுத்த நிலையில் தொங்குகிறது .இதை பறவைகள் வந்து கொத்தி தின்று சேதப்படுத்துவதுடன் , வாழைப்பழங்களும் அழுகி வீணாகிறது. எனவே விவசாயிகளை காக்கும் நோக்கில் தமிழக அரசு வாழைப்பழங்களை, மொத்தமாக கொள்முதல் செய்து தற்போது பணியாற்றும் அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள், நோயாளிகள் ஆகியோருக்கு வழங்கி விவசாயிகள் இழப்பை ஈடுகட்டும் வகையில் செயல்படவேண்டும். மேலும்  வைட்டமின்  சத்துள்ள வாழைப்பழங்களை சந்தைப்படுத்துவதற்கு அனுமதிக்கவேண்டும். நன்கு பழுத்து குலை தள்ளிய நிலையில் உள்ள வாழைப்பழங்கள் அழகுவதால் விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படும் .அரசு நஷ்டயீடு வழங்குவதாக இருந்தால் கூட ஏற்படும் நஷ்டத்திற்கு ஈடாக அரசால் உதவிட இயலாது. எனவே வீணாகும் வாழைப்பழங்களை பொதுமக்களுக்கு சென்றடையும் வகையில் சந்தைப்படுத்த அரசு உதவ வேண்டும் என்பதே இப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.
On Sunday, April 12, 2020 by Tamilnewstv in    
திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள வீரமஞ்சன்பட்டி வனப் பகுதியை ஆள் நடமாட்டம் குறித்து
 டிரோன் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றுதல் பரவுவதை தடுப்பதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இத்தகைய சூழலில்
ஒரு சிலர் அரசு உத்தரவை மதிக்காமல் வெளியே வருபவர்கள் மீது காவல்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள துறையூர் வனசரக பகுதிக்கு உட்பட்ட வீரமஞ்சம்பட்டி வனப்பகுதியில் தீ விபத்து ஒன்று ஏற்பட்டது.
இதற்கு சிலர் அப்பகுதியில் சிகரெட் புகைத்து அப்படியே விட்டுச் சென்றதால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் வன பகுதியில் ஆட்கள் நடமாட்டம் குறித்து டிரோன்  கேமிரா மூலம் கண்காணிக்க உத்தரவிட்டார். இதனடிப்படையில் முசிறி காவல் சரக  டிஎஸ்பி தலைமையில் வனபகுதியில் ஆட்கள்  நடமாட்டம் குறித்து டிரோன் கேமரா மூலம் கண்காணிக்கும் பணி நடைபெற்றது. அரசின் உத்தரவை மீறி வன பகுதியில் யாரேனும் சுற்றி வருவது டிரோன் கேமிரா மூலம் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.
On Sunday, April 12, 2020 by Tamilnewstv in    
முசிறியில் கொரோனா விழிப்புணர்வு பணியில் என்.சி.சி மாணவர்கள் -சமூக ஆர்வலர்கள் பாராட்டு
திருச்சி மாவட்டம், முசிறியில் 144 தடை உத்தரவில் போலீசார் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்திற்கு உதவியாக முசிறி அரசுக்கல்லூரியை சேர்ந்த என்.சி.சி மாணவர்கள் களமிறங்கி உள்ள சம்பவம் சமூகஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பை ஏற்படுத்திஉள்ளது.
  கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 144 தடை உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் சமூகஇடைவெளியை பின்பற்ற வேண்டும். தேவையில்லாமல் பொதுஇடங்களில் சுற்றி திரிய கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசு விதித்துள்ள சட்ட விதிமுறைகளை பின்பற்ற உதவிடும் வகையில் முசிறி போலீசார் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்துடன் இணைந்து முசிறி அறிஞர் அண்ணா அரசுகலைக்கல்லூரியை சேர்ந்த என்.சி.சி மாணவர்கள் சீருடைஅணிந்து உழவர்சந்தை, முசிறி கைகாட்டி ஆகிய இடங்களில் பணியாற்றினர். அப்போது கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்தும், சமூகஇடைவெளியை பின்பற்றுமாறும், வெளியே வரவேண்டாம் எனவும் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டனர். கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில் பலரும் உயிர்பயத்தில் உறைந்துள்ள நிலையில் என்.சி.சி மாணவர்கள் சமூகநல ஆர்வத்துடன் பணியாற்றியது சமூகஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
On Sunday, April 12, 2020 by Tamilnewstv in    
முசிறி கிடங்கில் வைக்கப்பட்டுள்ள மதுபாட்டில்களுக்கு ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு
  திருச்சி மாவட்டம், முசிறியில் உள்ள நுகர்பொருள் வாணிப கிடங்கில் அரசு டாஸ்மாக் கடைகளிலிருந்த மதுபாட்டில்கள் ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.
   திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அரசு மதுபான கடைகளில் திருட்டு போனது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தற்போது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் டாஸ்மாக் மதுபான கடைகள் பூட்டப்பட்டுள்ளது. இதனால் மதுபாட்டில்கள் கிடைக்காமல் மதுபிரியர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அரசு மதுக்கடைகளிலிருந்து மதுபாட்டில்கள் திருட்டுபோவதை தடுக்கும் விதமாக மதுகடைகளிலிருக்கும் மதுபாட்டில்கள் அனைத்தையும் ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்புடன் முசிறி நுகர்பொருள் வாணிப கிடங்கிற்கு எடுத்து செல்லப்பட்டது. முசிறி, மண்ணச்சநல்லூர், லால்குடி, பெட்டவாய்த்தலை, துறையூர், தொட்டியம் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கிவந்த மதுக்கடைகளிலிருந்து எடுத்து வரப்பட்ட மதுபாட்டில்கள் கணக்கிடப்பட்டு பாட்டில்கள் வைக்கப்பட்டுள்ள கிடங்கிற்கு சீல்வைக்கப்பட்டு ஆயுதம் தாங்கிய போலீஸ் காவல் போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்கள் வாணிபகிடங்கிற்கு எடுத்துசெல்லப்பட்ட சம்பவம் குடிமகன்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.
On Sunday, April 12, 2020 by Tamilnewstv in    

திருச்சி ஏப் 12





திருச்சி சுப்பிரமணியபுரம்  பகுதியை சேர்ந்த ஒரு தம்பதிக்கு 4 வயதில் பெண் குழந்தையும், ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இந்த குழந்தைகளின் தந்தை டெல்லியில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டு வீடு திரும்பினார்.  கடந்த10 நாட்களுக்கு முன்பு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து அவர்  திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனை தொடர்ந்து அவரது மனைவி  தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் திருச்சி எடத்தெரு கீழப்புதூர் பகுதியில் உள்ள  தாயார் வீட்டுக்கு வந்தார். கீழபுதூரில் உள்ள வீட்டிற்கு வந்தனர். அங்கு அந்த வீட்டில் மொத்தம் 12 பேர் இருந்துள்ளனர். இதையடுத்து ,12 நபர்களுக்கும் மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டனர்.
 இதில் ஏற்கனவே கரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வருபவரின் ஒன்றரை வயது பெண் குழந்தைக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. தொடர்ந்து இன்று காலை  தாயும், குழந்தையையும் மருத்துவ குழுவின் 108 ஆம்புலென்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்குள்ள தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னர் உடனடியாக அப்பகுதி முழுவதும் தூய்மை பணியாளர்கள் கிருமி நாசினியை தெளித்தனர்.
On Sunday, April 12, 2020 by Tamilnewstv in    
திருச்சி ஏப் 12

கொரோனாவால் சிகிச்சைக்கு அரசு மற்றும் தனியாா் பள்ளி கல்லுாாிகள் தயாா் - 11,135நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு - மாவட்ட ஆட்சியர் தகவல்

திருச்சியில் கொரோனாவால்
இது வரை 39 பேர் பாதிக்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா. மேலும் மாவட்டம் முழுவதும் 3045 பேர் வீடுகளில்  தனிமைபடுத்தப்பட்டு கண்கணிக்கப்பில் உள்ளனர். இந்நிலையில் மேலும்  பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அரசு
மற்றும் தனியாா் பள்ளி கல்லுாாிகள் தயாா் நிலைக்கு மாற்றப்பட்டு வருகின்றன. இதில்  திருச்சி மாவட்டத்தில் 161 அரசு பள்ளி மற்றும் கல்லுாாிகளும்,
59தனியாா் பள்ளி மற்றும் கல்லுாாிகள்  கண்டறியப்பட்டுள்ளன. இந்த 220 அரசு மற்றும் தனியாா் பள்ளி கல்லுாாி கட்டிடங்களில் 4108 அறைகள் உள்ளன. இவற்றில் 2282 அறைகள் (விடுதிகளில் உள்ள) மெத்தை வசதிகளுடன் உள்ளன. 1826 அறைகளில் மெத்தை வசதிகள் இல்லை. இங்கு மெத்தை வசதிகள் ஏற்படுத்திட மாவட்ட நிா்வாகம் சாா்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இங்கு 11,135 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கூடிய வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. தண்ணீா், கழிப்பீட வசதி உள்ளிட்ட அனைத்தும் அடிப்படை வசதிகளை உடனடியாக ஏற்பாடு செய்ய திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு உத்தரவிட்டுள்ளார்.
திருச்சியில் உள்ள ஜமால் முகமது என்ற தனியார் கல்லூரியில் ஏற்கனவே 69 பேர் தனிமை படுத்தப்பட்டு மருத்துவக் குழுவினரால் கண்கணிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிட்த்தக்கது.
On Sunday, April 12, 2020 by Tamilnewstv in    
கொரோனா வைரஸ் தாக்குதல் உலகத்தை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.


இதனால் வரும் ஏப்ரல் 14ம் தேதி வரையிலான 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் வாகன போக்குவரத்து இன்றி சாலைகள் வெறிச்சோடி கிடக்கிறது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே இருசக்கர வாகனங்களில் மக்கள் வந்து செல்கின்றனர. 

இந்த வகையில் வெறிச்சோடிய சாலைகளில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஓவியர்கள் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஓவியத்தை வரைந்து வருகின்றனர். திருச்சியில் மஞ்சத்திடல் பாலம், பழைய பால் பண்ணை, மண்ணச்சநல்லூர், கோஹினூர் தியேட்டர் ஜங்ஷன், ஆகிய இடங்களில் விழிப்புணர்வு ஓவியம் வரையப்பட்டுள்ளது.
 இந்த ஓவியத்தை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் பார்வையிட்டு ஓவியர்களை பாராட்டி வருகின்றனர்.

 பேட்டி: நாகேந்திரன். ஓவியர்