Thursday, April 23, 2020

On Thursday, April 23, 2020 by Tamilnewstv in ,    
மாவட்ட மேலாளரை உடனடியாக மாற்ற வேண்டும் டாஸ்மாக் ஊழியர்கள் கதறல்? விஜிலென்ஸ் எங்கே போனது?

24.3.2020. கணக்கு பார்த்து பணம்கட்டியிருந்தால் முழுமையாக வங்கியில்பணம் கட்டியிருக்க வேண்டும்
ஊரடங்கு உத்தரவில் கள்ளதனமாக மதுபானங்கள் விற்றதில் ஒரு கடைக்கு 1000 ஆயிரம் பல லட்சம் விற்றபனையில் வித்தியாசம் ஏன்?

கொரோனா வைரஸ் காரணமாக தமிழகம் முழுவதும் டாஸ்மார்க் கடைகள் மூடப்பட்டுள்ளது 24.3.2020 .ஆம் தேதியிலிருந்து ஊரடங்கு காரணமாக கடைகள் 6 மணிக்கு மூடப்பட்டதால் டாஸ்மாக் மதுபானங்கள் அதிகமாக விற்பனையானது விற்பனையான பணம் அதற்கு அடுத்த நாள் வங்கிகள் 25 தேதி தெலுங்கு வருட பிறப்பு வங்கிகள் விடுமுறை. அதற்கு மறுநாள் 26 ஆம் தேதி வங்கியில் பணம் கட்டினார்கள். ஆனால் மதுபானங்கள் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை காரணமாக பாதுகாப்பான இடத்திற்கு டாஸ்மாக் மதுபானங்களை திருச்சியில் உள்ள திருச்சி துவாக்குடி மதுபான குடோன்.. கலையரங்கம் தியேட்டர்.,தேவர்ஹால். முசிறி டி என் சி குடோன் . மணப்பாறையில் உள்ள கல்யாண மண்டபம். திருச்சி உள்ள சுமார் 174 கடைகளை சரக்குகள் பாதுகாக்கப்பட்டுள்ளது .அரசே மதுபானங்களை எடுத்து வருவதற்காக  ஒப்பந்த ஊர்தி எடுத்து வருவதற்கு அரசாங்கம் வாடகை தரவில்லையாம் தமிழகம் முழுவதும் பணியாளர்களே வாடகை கொடுத்து இருக்கிறார்கள் வாடகை என்பது வண்டி வாடகை மற்றும் சரக்குகளை ஏற்றுவதற்கு ஒரு கூலி இறக்குவதற்கு ஒரு கூலி அனைத்தையும் பணியாளர்களை கொடுத்திருக்கிறார்கள் அரசாங்கம் இதுவரை வண்டி வாடகை தரவில்லை. திருச்சி மாவட்டத்தில் வாடகை என்பது முதன்முதலாக சரக்கு எடுத்த கடைகளுக்கு 25 ரூபாய் என்றும் அதன் பிறகு எடுத்த கடைகளுக்கு 20 ரூபாய் என்றும்  கடைகளில் டாஸ்மார்க் ஒப்பந்த வண்டி காரர்களே முடிவு செய்து  டாஸ்மாக் ஊழியர்களை மிரட்டி பணத்தை பெற்றுக்கொண்டனர்   இந்த தவறை திருச்சி மாவட்ட மேலாளரிடம் எடுத்து சொல்லியும் எந்த பலனும் இல்லை டாஸ்மார்க் ஒப்பந்த வண்டி காரர்களிடம் இடமிருந்து கமிஷன் பெறுகிறார் திருச்சி மாவட்ட மேலாளர். வாடகை ஒப்பந்த வண்டியின் சூப்பர்வைசர் இஸ்மாயில்  என்பவர் இவர் ஆளும் கட்சிக்கு உடன் தொடர்பு உடையவர் இவரை திருச்சி மாவட்ட மேலாளர்  பகைத்துக்கொள்ள மாட்டாராம் இவருக்கு அலுவலகத்தில் உள்ள டெம்போ மேனேஜர் ஜெயப்பிரகாஷ் (தாசில்தார்) மற்றும் அலுவலக பணியாளர் தியாகராஜன் சரக்கு பில் அடிப்பவர் டாஸ்மார்க் கடை  சூப்பர்வைசர் ஜெயபிரகாஷ, இவர்கள் இஸ்மாயிலுக்கு  உடந்தை ஆதலால் பணியாளர்களை தொடர்ச்சியாக மிரட்டி வருகிறாராம் இந்த இஸ்மாயில் பணியாளர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை மேலும் எந்த கடைக்கு எவ்வளவு சரக்கு வேண்டும் என்பது நிர்ணயம் செய்வது டாஸ்மார்க் கடை சூப்பர்வைசர் ஜெயப்பிரகாஷ் இஸ்மாயிலும் மற்றும் சூப்பர்வைசர் ஜெயபிரகாஷ் மனைவியும் சேர்ந்து மதுபான பெட்டியின் கணக்கு எண்ணிக்கையை வீட்டில் பில் அடிப்பார்களாம் அப்படிப் பில் அடிப்பது சட்டத்துக்கு புறம்பானது என்று தெரிந்தும் அதிகாரிகள் கண்டு கொள்வதில்லையாம். இதை யாரும் கேட்க முடியாது ஊழல் இங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது? சரக்குகளை மாற்று இடத்துக்கு கொண்டு வரும்பொழுது தணிக்கை(auditing) செய்கிறார்கள் தணிக்கையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகளிலும் சுமார் 1000 ஆயிரத்திலிருந்து பல லட்சம் வரை  வித்தியாசம் வருகிறது துறையூருக்கு அருகில் உள்ள ஆதனூர் கடையில் சரக்குகளே இல்லை அனைத்தும் பிளாக்கில் விற்கப்பட்டுள்ளன.

   இது அனைத்தும் மாவட்ட மேலாளர் வெளியிடவில்லை என்ன காரணம் என்று தெரியவில்லை ?

பணியாளர்களிடம் கடிதம் பெற்றுக்கொண்டு தவறு செய்யும் நபர்களை பாதுகாத்து வருகிறார் அதன் படி  அரசியல் தலைவர்களும் உடந்தையாக இருக்கிறார்களா? பார் எடுக்கும் அரசியல்வாதிகள் தான் பணியாளர்களை மிரட்டுகிறார்களாம்

திருச்சி மாவட்டத்தில் அதிகமாக சரக்கு வெளியில் வர காரணம் மாவட்ட மேலாளர் வண்டி வாடகை தராததால் பணியாளர்களே வண்டிக்கு வாடகை தருவதற்கு சரக்குகளை பணியாளர்களே
 வெளியே மதுபானங்களைவிற்கிறார்களாம்  காவலுக்கு வரும் காவல்துறையினரும் சரக்குகளை வாங்கிக் கொள்கிறார்களாம். இப்படிப்பட்ட அவல நிலையில் பணியாளர்கள் ஒன்றும் செய்ய முடியவில்லை என்பது வருத்தத்திற்குறிய விஷயமாக உள்ளது. சரக்குகளைப் பாதுகாப்பதற்கு பணியாளர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. இப்படி சரக்குகளைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு கொரோனவில் இறந்தாலும் சமூக விரோதிகளால் தாக்கப்பட்டாலும் மன அழுத்தத்தால் இயற்கையாக இறந்தாலும் பணியாளர்களின் நிலை மிகவும் மோசமாகத்தான் உள்ளது இப்படி நிலை நீடித்தால் வருங்காலத்தில் என்ன தான் தீர்வு?


சமீபத்தில் திருச்சி கலையரங்கத்தில்  மாவட்டத்தில் உள்ள சில கடைகளில் இருந்து மதுபானங்களை பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது . இந்த மதுபானங்களை சூப்பர்வைசர்கள் சிலர் கள்ளத்தனமாக மது பாட்டில்களை எடுத்து வந்து மது அருந்தி உள்ளனர் இந்த விஷயம் மேலாளருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது மேலும் காவல்துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாம்.

 இவர்கள் எந்த இடத்தில் 8 பேரும்  மது அருந்தி உள்ளனர் என்றும் அருந்திய பிராண்டும் மேலாலருக்கு  தெரியுமாம்.

ஆனால் அவர்களை எச்சரித்து மட்டும் விட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது உள்ளே பேரம் பேசப் பட்டதா என்று தெரியவில்லை? சில பத்திரிக்கை ஊடகவியாளர்கள் அந்த எட்டு பேர் சரக்கு அடிப்பதை  போட்டோ வீடியோ எடுத்து வைத்து பேரம் பேசப்பட்ட தாகவும் கூறப்படுகிறது. அதில் ஒரு தலித் சமூகத்தை சேர்ந்த சூப்பர்வைசர் மன உளைச்சலில் மாரடைப்பினால் இறந்துள்ளார்  உண்மை என்ன நடந்தது என்ற விசாரணையை காவல்துறை அதிகாரிகள் தான் விசாரிக்க வேண்டும்

இப்படி ஊழல் செய்தவர்களை அழைத்து விஜிலென்ஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினால் தான்  உண்மை வெளிவரும் என  சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மணப்பாறை தாலுகா உள்ள ஒரு கடையில் இருப்பு சரி பார்த்ததில் 7 லட்சம் வரை மதுபான பாட்டில்கள் கணக்கில் காணவில்லை என்பதும் மேலும் திருச்சி துவாக்குடி ஒரு பகுதியில் உள்ள கடையில் 7 லட்சம் வரை மதுபான பாட்டில்கள் கணக்கில் காணவில்லை என்பது அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது?


On Thursday, April 23, 2020 by Tamilnewstv in    
திருச்சி 

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அம்மா உணவகத்தில் இலவச உணவு -  துவக்கி வைத்து அமைச்சர் 1.50 லட்சம் நிதி வழங்கினார்.

 தமிழகம் முழுவதும் கொரனா தொற்று நோயை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு உத்தரவை வரும் மே மாதம் 3ம் தேதி அரசு அறிவித்துள்ளது.

இந்நாட்களில் ஏழை எளிய மக்கள் உணவுக்கு அவதிப்படும் நிலையை கருத்தில் கொண்டு அம்மா  உணவகத்தில் இலவச உணவு வழங்கும்  திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் வெல்லமண்டி நடராஜன்
திருச்சி கிழக்கு சட்டமன்றத்திற்குட்பட்ட 7அம்மா உணவகத்திலும் காலை, மதியம் மற்றும் இரவு, மூன்று வேளைகளும் இலவச உணவு வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்து அதற்காக ரூபாய் 1.50லட்சத்துக்கான காசோலையை .
மாநகராட்சி ஆணையர் சிவசுப்ரமணிடத்தில்
வழங்கினார்.
கடந்த 2 நாட்கள் க்கு முன்பு 300 மூட்டை அரிசி அம்மா உணவகத்திற்காக வழங்கியது அடுத்து இன்று இதர மிளக பொருட்கள் மற்றும் காய்கறி வாங்குவதற்கான இத்தொகையை  வழங்கினார்.
பின்னர்  செய்தியாளரிடம் பேசிய அவர் ஊரடங்கு உத்தரவை தளர்த்தும் வரையில் தினந்தோறும் அனைத்து திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட அனைத்து அம்மா உணவகத்தில் மூன்று வேளையும் இலவச உணவு வழங்க அறிவுறுத்தி உள்ளேன். இதனை ஏழை எளிய மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.


Wednesday, April 22, 2020

On Wednesday, April 22, 2020 by Tamilnewstv in    
திருச்சி

மத்திய அரசு மாநில அரசு கொரோனா தொற்று பரவாமல் இருக்க மக்களை தொற்றிலிருந்து பாதுகாக்க பல்வேறு முயற்சிகள் எடுத்து வரும் நிலையில் தமிழகத்தில் காவல்துறை முக்கியப் பங்கு வகித்து வருகிறது
திருச்சியில் காவல்துறை அதிகாரிகளால் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்  வகையில் எளிமையான புரிந்து கொள்ளும் தன்மையுடன்  வீடியோ வெளியிட்டுள்ளது. அதில் மக்களிடையே காவல்துறையினர் பணிகள் சமூக இடைவெளி விழிப்புணர்வு போன்றவைகளை வீடியோவில் பதிவிட்டு உள்ளது. 


இது போன்ற நிகழ்வுகள் பொதுமக்களுக்கு எளிதாக புரிந்து கொள்ளும் வகையிலும் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

திருச்சி காவல்துறை மிக்க நன்றி

Tuesday, April 21, 2020

On Tuesday, April 21, 2020 by Tamilnewstv in    
தனி ஒருவர் வெளியில் நடமாடும் பொழுது முக கவசம் அணிய வேண்டும் என்று மாண்புமிகு பாரதப் பிரதமர் மாண்புமிகு தமிழக முதல்வர் வலியுறுத்தி உள்ளனர்

                     
அறம் மக்கள் நலச்சங்கம் என்ற பனியன் அணிந்து இருக்கும் பொழுது ஏன் முக கவசம் அணிய வில்லை? சமூக இடைவெளி பின்பற்றவில்லை? இது அந்த நிறுவன தலைவருக்கு பொதுச் செயலாளருக்கு தெரியாதா?  பொதுச் செயலாளருடன் நின்று புகைப்படமும் எடுத்து உள்ளனர் இது முறையா? மக்கள் நல சங்கம் என்ற பெயரில் அரசு விதிமுறைகளை பின்பற்றாதது ஏன்? 




அரசு அனுமதி இல்லாமல் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டதா? அரசு அதிகாரிகள் யாராவது உடன் இருந்தார்களா நலத்திட்ட உதவிகள் வழங்கும் பொழுது? பொது இடத்தில் பொது மக்களுக்காக நிவாரணப் பொருட்கள் வழங்கும் பொழுது முக கவசம் அணியாமல் நலத்திட்ட உதவிகளில் கலந்து கொள்ளலாமா?


தமிழகத்தில் தொடர்ச்சியாக பல மாவட்டங்களிலும் பல ஊர்களிலும் பொதுமக்களை ஏமாற்றி வந்த நிறுவனம்தான் எல் பின் இந்த நிறுவனம் தமிழக மக்களை தொடர்ச்சியாக பல்வேறு கவர்ச்சி திட்டங்களை அறிவித்து தமிழகம் முழுவதும் மக்களை ஏமாற்றி பல்வேறு மாவட்டங்களிலும் திருச்சியிலும் தஞ்சையிலும்  வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இந்த போலி நிறுவனத்தின் இயக்குனர்களான ராஜா என்கிற அழகர்சாமி பொதுச் செயலாளர் எஸ்ஆர்கே என்கிற ரமேஷ் க்குமார் சில நாட்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து 50 லட்ச ரூபாய் கொடுத்தனர். மேலும் இவர்கள் தங்கள் தங்கியுள்ள வீட்டின் அருகே பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதாக கூறி தங்களின் தங்கியுள்ள வீட்டில் முன்பு 500க்கும் மேற்பட்ட நபர்கள் குவிந்ததால் அதன் சுற்றியுள்ள பகுதியில் மக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு காவல்துறையால் மக்கள் விரட்டி அடிக்கப்பட்டனர் இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மத்திய அரசு மாநில அரசு கொரோனா தொற்று பரவாமல் இருக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வரும் நிலையில் இன்றுகூட திருச்சி மாநகர காவல் துறையின் சார்பில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பது குறித்து சிறப்பு குறும்படம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதையெல்லாம் கண்டுகொள்ளாத எல்பின் நிறுவனத்தினர் இலவச பொருட்கள் நாங்கள் தருகிறோம் என விளம்பரப்படுத்திக் கொள்கிறார்கள்.

உண்மையில் கஷ்டப்படுபவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்றால் முறைப்படி மாஸ்க்  மற்றும் கையுறை அணிந்து சமூக இடைவெளி விட்டு நின்று பொது மக்களுக்கு நிவாரண பொருட்கள் அளிக்கலாம், ஆனால் உண்மையில் வைரஸ் பரவுவதை பற்றி ஒன்றும் அறியாத அந்தநல்லூர் மருதாண்டா குறிச்சி கிராம மக்களை ஒன்று கூட்டி வைரஸ் பரவ செய்கிறார்களா என்ற சந்தேகம் எழுகின்றது ? முறையாக காவல்துறையிடம் அனுமதி பெற்றார்கள் என்பது தெரியவில்லை? தொடர்ச்சியாக சமூக இடைவெளி இல்லாமல் இவர்கள் செயல்படுவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

 இதற்கு உதாரணம் இன்று மருதண்டகுறிசி ஊராட்சியில் எஸ்,ஆர்,கே,ரமேஷ், பால்ராஜ், மக்கள் ராஜ்யம் பிஆர்ஓ கோவிந்தன் சில பிரபல கட்சி நிர்வாகிகள்  நலத்திட்ட பொருட்கள் மற்றும் தலைக்கு ரூபாய் 100 வழங்கியுள்ளனர்.

 இது பொதுமக்களும் அரசாங்கத்தின் சமூக இடைவெளி கடைபிடிக்காமல் இருந்துள்ளனர் .

 சமீபத்தில் இவர்கள் துபாய் சென்று வந்து இருந்தனர் இதைப்பற்றி நாம் செய்தி வெளியிட்ட பின்பு மாவட்ட ஆட்சித்தலைவர் நடவடிக்கை எடுத்து  அனைவரையும் 15 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தி வைத்திருந்தார். இவர்களுக்கு கொரோனா  தொற்று இல்லை என்று எத்தனை சோதனை  செய்ய பட்டு உள்ளது என்று தெரியவில்லை ?

இவர்கள் அனைவரையும் மீண்டும் புதிய ரேபிட் கிட் மூலம் பரிசோதனை செய்ய வலியுறுத்தப்பட்டு உள்ளதா என்றும் தெரியவில்லை? வைரஸ் தொற்று இல்லை என்று  அறிந்த பின்பு  பொதுமக்களுக்கு நேரடியாக வந்து உதவி செய்ய மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்று உள்ளார்களா? என்று தெரியவில்லை? காவல் துறையிடம் அனுமதி பெற்றுதான் செய்திருக்க வேண்டும் அனுமதி பெற்றார்களா அதுவும் தெரியவில்லை?

அப்படி அனுமதி இல்லாமல் உதவி என்ற பெயரில் வைரசை பற்றி விழிப்புணர்வு இல்லாத பொதுமக்களிடம் சமூக இடைவெளியில்லாமல் நலத்திட்ட உதவி வழங்கியதற்கு இவர்கள் மீது காவல்துறை  வழக்குப்பதிவு செய்து உடனடி நடவேடிக்கை எடுத்து அப்பாவி பொதுமக்களை காக்க வேண்டும். கொரோனா பரவினால் மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் நோயை  தடுக்க படும் கஷ்டங்கள் அனைத்து  வீணாகும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
On Tuesday, April 21, 2020 by Tamilnewstv in    
காகம் மற்றும் எலிகள் தவிர்த்து மற்ற எந்த விலங்குகள், பறவைகள், வண்ணத்துப்பூச்சிகள் மற்றும் பாம்பு ஆகிய எதை பிடிக்க முயற்சித்தாலும், வேட்டையாடினாலும் குற்றமே என்பதன் அடிப்படையில்

திருச்சி வனச்சரகர் பழனிவேல் தலைமையில்,வனவா்கள்,மதன்ராஜ், சரவணன்   மற்றும் வனக்காப்பாளர்கள்
சரவணன், ரவி, ஞானசம்மந்தம்  ஆகியோர்  (வனத்துறையின்) ரோந்து பணி சோதனை மேற்கொண்டபொழுது மணச்சநல்லுா், வலையூர் கிராமத்தை சாா்ந்த 1. ஜெயபாலன் (35), 2.கோபிநாத் (38), மற்றும்
3.கோபிநாதன் (35) ஆகிய மூன்று நபர்கள் விவசாய நிலத்தில் முயல் பிடிக்க கன்னி சரம்(Trap) வைத்திருந்தது தெரிய வந்தது. மேற்கண்ட மூவர்களை பிடித்து விசாரணை செய்த போது வேட்டைக்காக கன்னி வைத்த குற்றத்தை ஒப்புக்கொண்டனா்.

மேற்காணும் சம்பவம் தொடா்பாக  வன உயிரின பாதுகாப்பு சட்ட பிரிவுகளின்  படி வேட்டையாட முயற்சித்த குற்றத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து பின்னர் மாவட்ட வன அலுவலர், சுஜாதா IFS  உத்தரவின் படி ரூபாய்.15,000/- இனக்க கட்டணம் வசூலிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனா்.

Monday, April 20, 2020

On Monday, April 20, 2020 by Tamilnewstv in    
Dear Canpals,

*Canpal Activity - Madurai Region*

Today we had provided good amount of essential  food items to *"Bharathi old age home"* at Palanganatham  Madurai.

The response from those elders was heart melting. And a 90+ grand old mother blessed us and our CBOA.

*We thank each and every Canpal who contributed and stood for the humanity*



Our service to the poor and needy continues.......

*CBOA - Team Madurai*



TRICHY


*Dear Friends,*
*⭐HELPING HANDS NEVER HESITATE... TO HELP EVER...⭐ THE SENTENCE HAS MORE MEANINGFUL WHEN THE ACTIONS HAPPEN...*

UNDER THE LEADERSHIP OF OUR *ENERGETIC & GOOD HEARTED GS, SRI.G V MANIMARAN,*


Our Canpals are actively engaging themselves in helping the poor, needy, health workers, sanitation workers, police officials and above all our   
customers in the best way in throughout the country.

In *Trichy Region our RS, RAJAGOPAL R has done in excellent way and engaged him in regular social activities to help all.*


Today, our *CBOA, TEAM TRICHY has extended another step to help Police officials. We handed over sizable number of Masks, Gloves and Sanitizers to TRICHY DIG,               Sri. V. BALAKRISHNAN, IPS in his office.*

*SRI.V BALAKRISHNAN, IPS had welcomed  our office bearers and expressed his sincere thanks to our GS. He remembered his great memories with our GS, GVM and convey his best wishes to TEAM TRICHY for our social activities in this pandemic.*

Friends, we sincerely express our thanks to our  canpals who had voluntarily contributed to COVID -19 relief measures.
1. Sri. Rajasekar, Trichy Collectorate.
2. Smt. Manonmani, RO.
3. Sri. Swaminathan, Thirumanthurai.
4. Sri.Dharmaraj, RO.
5. Sri. Suresh, Perambalur CC.
6. Sri. R Arivazhagan, RO.

*DEVOTED TO HELP ALL*

*CBOA ZINDABAD*
*GVM ZINDABAD*

THIAGARAJAN L
DS, CBOA, TRICHY.
On Monday, April 20, 2020 by Tamilnewstv in    
*மே- 3 வரை அம்மா உணவகங்களில் 3 வேளை உணவு இலவசம்*

திருச்சி மேற்கு, திருவெறும்பூர் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளிலுள்ள

 1. *புத்தூர்* ( _அபிஷேகபுரம் கோட்ட அலுவலகம் அருகில்_ ),
 2. *தென்னூர் உழவர் சந்தை* ,
3. *உறையூர் சாலை ரோடு* ,
4. *ஜங்சன் ராக்கின்ஸ் சாலை* ,
5. *கல்கண்டார்கோட்டை* ,
6. *அரியமங்கலம் ஜெகநாதபுரம்*

ஆகிய 6 இடங்களிலுள்ள அம்மா உணவகங்களில், வரும் மே 3-தேதி வரை காலை, மதியம், இரவு என மூன்று வேளைகளும் இலவசமாக உணவு வழங்குவதற்கான செலவினை திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக ஏற்றுக்கொண்டுள்ளது.

இதற்கான தொகையை மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியனிடம் அதிமுக மாநகர் மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்.பியுமான ப.குமார் இன்று வழங்கினார்.
On Monday, April 20, 2020 by Tamilnewstv in    
*காவலர்களுக்கு கொரோனா சோதனை*

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி மாநகரில் பணிபுரியும் காவல் துறையைச் சேர்ந்த 19 பேர், ஊர்க்காவல் படையை சேர்ந்த 6 பேர் என 25 பேருக்கு இன்று நடத்தப்பட்ட கரோனா வைரஸ் பரிசோதனையில், அவர்களுக்கு நோய்த்தொற்று இல்லை என தெரிய வந்துள்ளது. ஏற்கனவே  11 பேருக்கு நேற்று இச்சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
On Monday, April 20, 2020 by Tamilnewstv in    

                     

திருச்சி கொரோனா தொற்று பாதிப்பினால் இறந்த மருத்துவர்களை பொதுமக்கள்  யாரும் இழிவு செய்ய வேண்டாம் திருச்சி மருத்துவர் ரொஹையா பேட்டி

                         


திருச்சி மகப்பேறு மருத்துவர் ரொஹையா தனியார் மருத்துவமனை நடத்தி வருகிறார். அவர் மனவேதனையுடன் கூறியபொழுது
கொரானா தொற்று என்பது ஒரு போராக நடந்து வருகிறது.

மருத்துவர்களுக்கு வாழ்த்து கூறுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறீர்கள் அது எங்களுக்கு தேவை இல்லை ஒவ்வொரு மனிதனும் நாம் இறக்கும் பொழுது இறுதியாத்திரை அவர்களுடைய மத சடங்குகள் படி நடக்க வேண்டும் என்றுதான் நினைப்பார்கள் நேற்று நரம்பியல் நிபுணர் ஒருவர் இறந்தார் அவர் பல விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றி உள்ளார். ஒரு நபர் ஏதோ ஒரு விபத்தில் சிக்கியவருக்கு சிகிச்சை அளித்ததில்  கொரோனா தொற்று பாதிப்பு அடைந்துள்ளது அந்த பாதிப்பினால் நரம்பியல் மருத்துவர் இறந்து போனார் .

அவரை சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்லும் வழியில் பொதுமக்கள் கூடி அவரை புதைக்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் கொண்டுபோன அமரர் ஊர்தியை அடித்து உடைத்துள்ளனர்.ஆம்புலன்ஸ் டிரைவரை அடித்துள்ளனர் இப்படியெல்லாம் செய்வது நீங்கள் மருத்துவருக்கு செய்யக்கூடிய மரியாதையா நீங்கதான் எங்களை காப்பாற்ற கூடியவர் நீங்கள் தான் கடவுள் போன்றவர் என்று கூறும் மக்கள் இப்படி ஒரு மருத்துவரின் இறுதி சடங்கில் இப்படிப்பட்ட செயல்கள் செய்துள்ளது மனதுக்கு வேதனை அளிக்கிறது.

நானும் கடந்த மாதம் ஏழு பிரசவங்கள் அறுவை சிகிச்சை செய்துள்ளேன் ஒருவேளை அதைப் போன்ற தொற்று என்னையும் பாதித்தால் எனக்கும் இந்த நிலை தானே இது எல்லாம் நினைக்கும் பொழுது மருத்துவர்கள் வேலைக்கு வருவது பற்றி யோசித்தால் மக்களின் நிலை என்ன ஆவது?

மருத்துவர்கள் மருத்துவமனைக்கு வருவது மிகவும் கவலை அளித்து வருகிறது.

இதுநாள் வரை 12  மருத்துவர்கள் தமிழகத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர் தொற்று பாதிப்பு அடைந்தவர்களுக்கு நாங்கள் சிகிச்சை அளிக்கும்போது எங்களுக்கும் இந்த பாதிப்பு வரும் என்பது எங்களுக்கு தெரியும்,
இப்படிப்பட்ட நடவடிக்கைகள் பொதுமக்கள் மேற்கொள்ளும் பொழுது நாங்கள் மருத்துவமனைக்கு வர மாட்டோம் என்று மருத்துவர்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டால் மக்களின் நிலை என்ன
மருத்துவர் இறந்துவிட்டால் அவரை மயானத்தில் இறுதி சடங்கு செய்ய பொதுமக்கள் அனுமதி அளியுங்கள் 
அவரவர்கள் மதத்தின் படி இறுதி சடங்குகள் மேற்கொள்ள வழிவிடுங்கள் மருத்துவர்கள் நாங்கள் எதற்கு என்று ஒதுங்கிக் கொண்டாள் மக்களின் நிலை மிகவும் மோசம் அடையும் அதனை கவனத்தில் கொண்டு பொதுமக்கள் மருத்துவர்களின் இறப்பின் பொழுது அவர்களை இழிவுபடுத்தும் வகையில் பொதுமக்கள் யாரும் நடக்க வேண்டாம் என்று மருத்துவர் ரொஹையா மன வேதனையுடன் தெரிவித்தார்