Sunday, September 21, 2014
உடுமலை அருகே உள்ள ஸ்ரீராம் நகர் நகரைச்சேர்ந்தவர் கனகராஜ். இவர் உடுமலையில் அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இரவு கனகராஜ் வீட்டின் மாடியில் உள்ள அறையில் தூங்கினார். அவரது மனைவி மகேஸ்வரி கீழ் வீட்டில் அறையில் தூங்கினார். இரவு வீட்டின் பின்பக்க கதவு பூட்டப்படவில்லை என்று கூறப்படுகிறது.
அதிகாலை 3.45 மணியளவில் மகேஸ்வரி படுத்திருந்த படுக்கை அறையில் ஏதோ சத்தம் கேட்டதும் அவர் எழுந்துள்ளார். அப்போது அங்கு பீரோ பக்கத்தில் யாரோ மர்ம நபர் நின்று கொண்டிருந்தார். உடனே மகேஸ்வரி யாரது என்று சத்தம் போட்டதும் அந்த நபர் வேகமாக பின்புறக்கதவு வழியாக தப்பிச்சென்றுள்ளார். அதன் பின்பு மகேஸ்வரி வீட்டிற்குள் சென்று பார்த்த போது 5¼ பவுன் செயினை காணவில்லை. இதன் மதிப்பு சுமார் ரூ.1 லட்சம் இருக்கும். இது குறித்து மகேஸ்வரி உடுமலை போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் குற்றப்பிரிவு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து நகையை திருடிச்சென்ற மர்ம மனிதனை வலைவீசி தேடி வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment