Sunday, September 21, 2014
உடுமலை அருகே உள்ள ஸ்ரீராம் நகர் நகரைச்சேர்ந்தவர் கனகராஜ். இவர் உடுமலையில் அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இரவு கனகராஜ் வீட்டின் மாடியில் உள்ள அறையில் தூங்கினார். அவரது மனைவி மகேஸ்வரி கீழ் வீட்டில் அறையில் தூங்கினார். இரவு வீட்டின் பின்பக்க கதவு பூட்டப்படவில்லை என்று கூறப்படுகிறது.
அதிகாலை 3.45 மணியளவில் மகேஸ்வரி படுத்திருந்த படுக்கை அறையில் ஏதோ சத்தம் கேட்டதும் அவர் எழுந்துள்ளார். அப்போது அங்கு பீரோ பக்கத்தில் யாரோ மர்ம நபர் நின்று கொண்டிருந்தார். உடனே மகேஸ்வரி யாரது என்று சத்தம் போட்டதும் அந்த நபர் வேகமாக பின்புறக்கதவு வழியாக தப்பிச்சென்றுள்ளார். அதன் பின்பு மகேஸ்வரி வீட்டிற்குள் சென்று பார்த்த போது 5¼ பவுன் செயினை காணவில்லை. இதன் மதிப்பு சுமார் ரூ.1 லட்சம் இருக்கும். இது குறித்து மகேஸ்வரி உடுமலை போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் குற்றப்பிரிவு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து நகையை திருடிச்சென்ற மர்ம மனிதனை வலைவீசி தேடி வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
-
திருச்சி முசிறி முசிறி அருகே தா.பேட்டை சலவைத் தொழிலாளர் சங்கத்தினர் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக 1200 நபர்களுக்கு இலவசமாக முக கவசங...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...

0 comments:
Post a Comment