Sunday, September 21, 2014
உடுமலை அருகே உள்ள ஸ்ரீராம் நகர் நகரைச்சேர்ந்தவர் கனகராஜ். இவர் உடுமலையில் அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இரவு கனகராஜ் வீட்டின் மாடியில் உள்ள அறையில் தூங்கினார். அவரது மனைவி மகேஸ்வரி கீழ் வீட்டில் அறையில் தூங்கினார். இரவு வீட்டின் பின்பக்க கதவு பூட்டப்படவில்லை என்று கூறப்படுகிறது.
அதிகாலை 3.45 மணியளவில் மகேஸ்வரி படுத்திருந்த படுக்கை அறையில் ஏதோ சத்தம் கேட்டதும் அவர் எழுந்துள்ளார். அப்போது அங்கு பீரோ பக்கத்தில் யாரோ மர்ம நபர் நின்று கொண்டிருந்தார். உடனே மகேஸ்வரி யாரது என்று சத்தம் போட்டதும் அந்த நபர் வேகமாக பின்புறக்கதவு வழியாக தப்பிச்சென்றுள்ளார். அதன் பின்பு மகேஸ்வரி வீட்டிற்குள் சென்று பார்த்த போது 5¼ பவுன் செயினை காணவில்லை. இதன் மதிப்பு சுமார் ரூ.1 லட்சம் இருக்கும். இது குறித்து மகேஸ்வரி உடுமலை போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் குற்றப்பிரிவு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து நகையை திருடிச்சென்ற மர்ம மனிதனை வலைவீசி தேடி வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
தென்னை வளர்ச்சி வாரியம், மடத்துக்குளம் தென்னை உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு ஆகியவற்றின் சார்பில் தென்னை மரங்களின் நண்பர்கள் பயிற்சி முகாம் ...

0 comments:
Post a Comment