Showing posts with label Break. Show all posts
Showing posts with label Break. Show all posts

Wednesday, April 26, 2017

On Wednesday, April 26, 2017 by Unknown in ,    




கோடநாடு எஸ்டேட் காவலாளியை கொன்ற கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா கூறினார். இதுகுறித்து நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா கூறியதாவது:–
கொலை
கோடநாடு எஸ்டேட்டுக்கு வாகனங்களில் சென்ற கும்பல் 10–வது நுழைவு வாயிலில் பணியில் இருந்த நேபாள நாட்டை சேர்ந்த காவலாளி ஓம் பகதூரை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். அவருடன் பணியில் இருந்த மற்றொரு காவலாளி கிருஷ்ண பகதூரை கத்தியால் வெட்டி தாக்குதல் நடத்தி உள்ளனர்.
பின்னர் அந்த கும்பல் பங்களாவின் கதவை உடைக்க முடியாததால் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். அதற்குள் சத்தம் கேட்டு ஊழியர்கள் அங்கு திரண்டதால், கொலையாளிகள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
5 தனிப்படைகள் அமைப்பு
இது தொடர்பாக சம்பவ இடத்துக்கு 15 மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டுள்ளது. கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். கொள்ளை முயற்சியில் இந்த கொலை நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். மேலும் ஆவணங்களை திருடிச்சென்றுள்ளனரா? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. ஆனால் எஸ்டேட்டுக்குள் இருந்து எந்த பொருளும் திருட்டு போகவில்லை. இந்த சம்பவங்கள் கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களுக்கு சென்று விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்
On Wednesday, April 26, 2017 by Unknown in , ,    






விழுப்புரம் அருகே உள்ள கக்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் சிங்காரம் (வயது 38). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக இருந்தார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சத்யா(30) என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 3½ வயதில் நித்தீஷ் என்ற குழந்தை உள்ளது.

வழக்கம்போல் நேற்று முன்தினம் சிங்காரம் ஓட்டலுக்கு சென்றார். இரவு வேலை முடிந்ததும் குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். அப்போது சத்யாவிற்கும், சிங்காரத்துக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

கழுத்தில் காயங்கள்

இந்த நிலையில் நேற்று காலையில் சிங்காரம் வீட்டில் இறந்து கிடந்தார். அவரது உடலில், விவசாய பூச்சி மருந்தின்(விஷம்) வாசம் வீசியது. உடனே சத்யா, தனது கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து சிங்காரத்தின் உடலை பார்த்து சென்றனர். மேலும் இது தொடர்பாக கெடார் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோசப்செல்வராஜ், சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்த் மற்றும் போலீசார் விரைந்து வந்து சிங்காரத்தின் உடலை பார்வையிட்டனர். அப்போது சிங்காரத்தின் கழுத்து பகுதியில் காயங்கள் இருந்தன. இதனால் அவர் கயிற்றால் கழுத்தை இறுக்கி படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.

எனவே சிங்காரத்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து, சிங்காரம் இறந்தது தொடர்பாக அக்கம்பக்கத்தில் வசிப்பவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

மனைவி கைது

அப்போது சத்யாவின் நடவடிக்கையை போலீசார் உன்னிப்பாக கவனித்தனர். அவரது நடவடிக்கையில் சந்தேகம் எழுந்ததால் சத்யாவை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சத்யா, தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து சிங்காரத்தை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து சத்யாவை போலீசார் கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
போலீசாரிடம் சத்யா அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

கள்ளக்காதல்

எனக்கும், சிங்காரத்துக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 5 ஆண்டுகளாக குழந்தை இல்லை. நான் எங்களது கிராமத்தில் உள்ள செங்கல் சூளையில் கூலி வேலைக்கு சென்றேன். அப்போது எனக்கும், அதே செங்கல் சூளையில் கூலிவேலை செய்த புதுப்பேட்டையை சேர்ந்த ரவி என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த பழக்கம் எங்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் நெருங்கி பழக ஆரம்பித்தோம். இருவரும் அடிக்கடி சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தோம். எனது கணவர் வேலைக்கு சென்றவுடன், ரவியை வீட்டிற்கு வரவழைப்பேன். வீட்டில் இருவரும் சந்தோஷமாக இருப்போம். ரவியின் மூலம் நான் கர்ப்பமானேன். தற்போது எனக்கு 3½ வயதில் நித்தீஷ் என்ற மகன் உள்ளான்.

குடிபோதையில் திட்டினார்

ரவி எனது வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றதால், கள்ளக்காதல் விவகாரம் அக்கம்பக்கத்தில் வசிப்பவர்களுக்கு தெரிந்து விட்டது. இவர்கள் மூலமாக எனது கணவர் சிங்காரத்துக்கும் தெரிந்து விட்டது. இதனால் எனது கணவர் என்னை கண்டித்தார். இனிமேல் செங்கல் சூளைக்கு செல்லக்கூடாது, ரவியுடன் பேசக்கூடாது, பழகக்கூடாது, வீட்டிற்கு அழைத்து வரக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தார். இது எனக்கு பிடிக்கவில்லை. 

வீட்டிலேயே இருந்தேன். கள்ளக்காதலனை சந்திக்க முடியாமல் தவித்தேன்.
இந்த நிலையில் 24-ந் தேதி(நேற்று முன்தினம்) இரவு குடிபோதையில் வீட்டுக்கு வந்த சிங்காரம், ரவியுடன் கள்ளக்காதல் வைத்திருப்பது தொடர்பாக என்னை ஆபாசமாக பேசினார். உடனடியாக நான், ரவியை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினேன். அப்போது, எனது கணவர் அடிக்கடி என்னை திட்டுகிறார். எனவே நான் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன் என்றேன்.

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொன்றேன்

அதற்கு ரவி, நீ ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும். நாம் இருவரும் சந்தோஷமாக வாழ வேண்டும். நமக்கு இடையூறாக உள்ள சிங்காரம் தான் சாக வேண்டும். எனவே நாம் இருவரும் சேர்ந்து சிங்காரத்தை கொலை செய்து விடலாம் என்றார். இதற்கு நான் சம்மதம் தெரிவித்தேன். உடனே ரவி, உன் கணவர் தூங்கியவுடன் எனக்கு செல்போன் மூலமாக தகவல் கொடு. உடனடியாக வந்துவிடுகிறேன் என்று கூறினார்.

எனது கணவர் சிங்காரம் இரவு 10.30 மணிக்கு தூங்கினார். உடனே நான், ரவிக்கு செல்போன் மூலமாக தகவல் தெரிவித்தேன். உடனடியாக ரவி எனது வீட்டிற்கு வந்தார். இதையடுத்து மாடு கட்டுவதற்காக வைத்திருந்த கயிற்றால் சிங்காரத்தின் கழுத்தை இறுக்கி கொலை செய்தோம்.

உடலில் விஷத்தை தெளித்தோம்

பின்னர் சிங்காரம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக அனைவரையும் நம்ப வைக்க இருவரும் முடிவு செய்தோம். அதற்காக ஏற்கனவே ரவி, விவசாய பயிர்களுக்கு தெளிப்பதற்கான மருந்தை(விஷம்) வாங்கி வந்திருந்தார். அதனை சிங்காரத்தின் உடல் முழுவதும் தெளித்தோம். பின்னர் ரவி, அங்கிருந்து சென்று விட்டார்.

மறுநாள் காலையில் எனது கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறி நாடகமாடினேன். இதனை எங்கள் கிராம மக்கள் நம்பி விட்டார்கள். ஆனால் போலீசார் நம்பவில்லை. போலீசாரிடம் சிக்கிக்கொண்டேன்
On Wednesday, April 26, 2017 by Unknown in ,    




காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும், விவசாயிகள் வங்கியில் வாங்கிய பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள். விவசாயிகளுக்கு ஆதரவாக அனைத்துக்கட்சிகள் சார்பில் நேற்று திருப்பூரில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது.
பனியன் தொழில் நகரான திருப்பூரில் முழு அடைப்பு போராட்டத்துக்கு திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கமான டீமா சங்கம் ஆதரவு தெரிவித்திருந்தன. மேலும் அனைத்து தொழிற்சங்கத்தினரும் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். முழு அடைப்பு போராட்டத்தையொட்டி நேற்றுகாலை திருப்பூரில் உள்ள பெரும்பாலான பின்னலாடை நிறுவனங்கள் மூடப்பட்டன. தொழிலாளர்கள் பணிக்கு செல்லவில்லை. இதன் காரணமாக பனியன் உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டன.
ரூ.85 கோடி
உற்பத்தி பாதிப்பு
பின்னலாடை தொழில் சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள், சாயப்பட்டறைகள், நிட்டிங் நிறுவனங்களும் நேற்று செயல்படவில்லை. பின்னலாடை தொழில் சார்ந்த 90 சதவீத நிறுவனங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றன. தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டதால் அந்த பகுதிகள் தொழிலாளர்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன. ஒரு சில பனியன் ஏற்றுமதி நிறுவனங்கள் மட்டும் ஆர்டர்களின் அவசரம் கருதி செயல்பட்டன. சில நிறுவனங்களில் வெளிமாநில தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டனர்.
திருப்பூர் காதர்பேட்டையில் உள்ள இரண்டாம் தர பின்னலாடை விற்பனை கடைகள் அனைத்தும் மூடப்பட்டதால் பனியன் விற்பனை பாதிக்கப்பட்டது. நேற்று நடந்த முழு அடைப்பு போராட்டம் காரணமாக திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி ரூ.85 கோடிக்கு பாதிக்கப்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்
On Wednesday, April 26, 2017 by Unknown in ,    






தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஊழியர் சங்கங்களின் போராட்டக்குழு சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்தம் நேற்று திருப்பூரில் நடந்தது. புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்சன் திட்டத்தை அனைவருக்கும் அமல்படுத்த வேண்டும், 8–வது ஊதிய மாற்றம் குறித்து சங்கங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி ஊதிய பகிர்வை வழங்க வேண்டும், 20 சதவீத இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்.
சத்துணவு, அங்கன்வாடி ஊழியர், வருவாய் கிராம உதவியாளர், ஊராட்சி செயலாளர், ஊர்ப்புற நூலகர் உள்ளிட்டவர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியத்தை ஒழித்து வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம், சட்டப்பூர்வ ஓய்வூதியம் வழங்க வேண்டும், தொகுப்பூதியம், மதிப்பூதியம், தினக்கூலி முறையிலான பணி நியமனங்களை ரத்து செய்து காலியாக உள்ள பணியிடத்தை காலமுறை ஊதியத்தில் ஊழியர்களை பணியமர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
இதன்தொடர்ச்சியாக அரசு ஊழியர் சங்கத்தின் திருப்பூர் வடக்கு மற்றும் திருப்பூர் தெற்கு வட்ட கிளைகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று மதியம் கலெக்டர் அலுவலகம் முன் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு திருப்பூர் தெற்கு வட்டக்கிளை தலைவர் பால்ராஜ் தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அம்சராஜ் கோரிக்கைகள் குறித்து பேசினார். இதில் கிராம சுகாதார செவிலியர்கள் சங்கம், சத்துணவு ஊழியர் சங்கம், வணிகவரி பணியாளர்கள் சங்கம், சாலைப்பணியாளர்கள் சங்கம், அங்கன்வாடி மற்றும் உதவியாளர் சங்கத்தினர் கலந்துகொண்டனர்.
அரசு ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், தாசில்தார் அலுவலகங்கள், கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களில் ஊழியர்கள் பெரும்பாலானவர்கள் நேற்று பணிக்கு வரவில்லை. இதனால் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. உதவியாளர் முதல் ஒன்றிய ஆணையாளர்கள், தாசில்தார் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் வரை வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனர்.
பணிகள் பாதிப்பு
இதேபோல் அரசு ஊழியர் சங்கம் அவினாசி வட்டக்கிளை சார்பில் அவினாசி தாசில்தார் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு ஊராட்சி செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார். இதில் அரசு ஊழியர்கள் கலந்துகொண்டனர். மாவட்டத்தில் உள்ள அந்தந்த வட்டக்கிளைகளிலும் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் சுமார் 8 ஆயிரம் பேர் பணியாற்றி வருகிறார்கள். நேற்று தொடங்கிய காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் 3 ஆயிரத்து 500–க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றதாக தெரிவித்தனர். இந்த வேலைநிறுத்த போராட்டம் காரணமாக மாவட்டத்தில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, சத்துணவுத்துறை, கருவூலத்துறை, வேளாண்மைத்துறை பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. இன்று (புதன்கிழமை) 2–வது நாளாக அரசு ஊழியர்கள் சார்பில் அந்தந்த வட்டக்கிளைகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளனர்
On Wednesday, April 26, 2017 by Unknown in ,    






காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும், விவசாயிகள் வாங்கிய பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தினர். தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியும் நேற்று தமிழகம் முழுவதும் முழுஅடைப்பு போராட்டத்துக்கு தி.மு.க. அழைப்பு விடுத்திருந்தது.
இதற்கு காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, உழவர் உழைப்பாளர் கட்சி உள்பட பல்வேறு கட்சியினர் ஆதரவு தெரிவித்து இருந்தனர். அதன்படி திருப்பூர் மாவட்டத்திலும் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது.
கடைகள் அடைப்பு
தாராபுரம், காங்கேயம், வெள்ளகோவில், முத்தூர், அலங்கியம், மூலனூர், குண்டடம் அதன் சுற்றுப்பகுதிகளில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன. காங்கேயம், தாராபுரத்தில் உள்ள தினசரி மார்க்கெட்கள் மூடப்பட்டு இருந்தன.
மருந்து கடைகள் மற்றும் மருத்துவ மனைகள் மட்டும் திறக்கப்பட்டிருந்தது. வாடகை ஆட்டோ, கார், லாரிகள் என எதுவும் இயக்கப்படவில்லை. திரையரங்குகளில் பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டிருந்தது. தாராபுரத்தில் உழவர் சந்தைக்கு விவசாயிகள் யாரும் காய்கறிகளை கொண்டுவராததால் உழவர்சந்தை வெறிச்சோடி கிடந்தது.
இயல்பு வாழ்க்கை பாதிப்பு
அரசு பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டன. தனியார் பஸ்கள் எதுவும் இயக்கப்படாததால் பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. கடையடைப்பு போராட்டத்தால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்தது. இதுபோல் பிற பகுதிகளில் பஸ்களில் கூட்டம் மிகவும் குறைவாக இருந்தது.
இந்த போராட்டம் காரணமாக தாராபுரம், காங்கேயம், வெள்ளகோவில், முத்தூர், அலங்கியம், மூலனூர் அதன் சுற்றுப்பகுதிகளில் உள்ள சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரியும் ஆங்காங்கே சாலை மறியல்களும் நடந்தன.
சாலைமறியல்
தாராபுரத்தில் தி.மு.க. நகர செயலாளர் தனசேகர் தலைமையில் பூக்கடை முக்கு பகுதியில் அனைத்து கட்சியினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. காளிமுத்து உள்பட காங்கிரஸ் கட்சியினர், தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சியினர், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியினர், ம.ம.க.வினர், கொங்கு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றின் நிர்வாகிகள் கலந்துகொண்டார்கள். இதுபோல், பொள்ளாச்சி ரோடு, குப்புச்சிபாளையம், காளிபாளையம் ஆகிய பகுதிகளிலும் அனைத்து கட்சியை சேர்ந்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மேலும் வெள்ளகோவில் மற்றும் முத்தூரில் தி.மு.க. இளைஞர் அணி மாநில செயலாளர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் அனைத்து கட்சியை சேர்ந்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அலங்கியத்தில் கனராவங்கி முன்பு திரண்ட அனைத்து கட்சியினர் சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தாராபுரத்துக்கு ஊர்வலமாக சென்றனர். அங்கு தாராபுரம் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். இதைத்தொடர்ந்து போலீஸ் நிலையம் அருகே அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
எம்.எல்.ஏ. உள்பட 967 பேர் கைது
காங்கேயத்தில் பஸ்நிலையம் அருகே நகர தி.மு.க. செயலாளர் மணிவண்ணன் தலைமையிலும், நத்தக்காடையூரில் தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் சிதம்பரம் தலைமையிலும், படியூரில் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் அப்புக்குட்டி தலைமையிலும், குண்டடம் பஸ்நிறுத்தம் அருகே ஒன்றிய தி.மு.க. செயலாளர் சந்திரசேகர் தலைமையிலும் சாலைமறியல் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் திரளான விவசாயிகள் அனைத்து கட்சியினர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்களை எழுப்பினார்கள்.
இதுதொடர்பாக தி.மு.க. மாநில செயலாளர் மு.பெ.சாமிநாதன், காங்கிரஸ் எம்.எல்.ஏ. காளிமுத்து உள்பட மொத்தம் 967 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் அந்தந்த பகுதியில் உள்ள திருமண மண்டபங்களில் தங்கவைக்கப்பட்டனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்
On Wednesday, April 26, 2017 by Unknown in ,    





விவசாயிகளுக்கு ஆதரவாக நடந்த போராட்டம் காரணமாக நேற்று திருப்பூர் மாவட்டம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதையொட்டி சாலைமறியலில் ஈடுபட்ட 2 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 2 ஆயிரத்து 143 பேர் கைது செய்யப்பட்டனர்.
முழு அடைப்பு போராட்டம்
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும், விவசாயிகள் வங்கியில் வாங்கிய பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள். விவசாயிகளுக்கு ஆதரவாக அனைத்துக்கட்சிகள் சார்பில் நேற்று திருப்பூரில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் பங்கேற்றனர்.
முழு அடைப்பு போராட்டம் காரணமாக திருப்பூர் பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், ரெயில் நிலையம், அவினாசி ரோடு, குமரன் ரோடு, காங்கேயம் ரோடு, தாராபுரம் ரோடு, பல்லடம் ரோடு, மங்கலம் ரோடு உள்பட மாநகரில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. மருந்துக்கடைகள் திறந்து இருந்தன.
கடைகள் மூடப்பட்டன
ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள், மளிகை மொத்த வியாபார கடைகள், அரிசிக்கடைகள் உள்ளிட்ட கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன. ஓட்டல்கள், உணவகங்கள், பேக்கரிகள், டீக்கடைகள் மூடப்பட்டு இருந்தன. மாநகரில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்ததால் பொதுமக்கள் பாதிப்படைந்தனர். வெளியூரில் இருந்து நேற்று திருப்பூர் வந்தவர்கள் சாப்பிடுவதற்கும், டீக்குடிப்பதற்கும் கூட அவதிப்பட்டனர்.
தள்ளுவண்டி கடைகளில் தயிர் சாதம், தக்காளி சாதம் வைத்து மாநகரில் ஆங்காங்கே வீதிகளில் வைத்து விற்பனை செய்தனர். அம்மா உணவகங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அதுபோல் சைக்கிளில் கேன்கள் வைத்து டீ விற்பனை செய்து வந்தனர். தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டதால் தொழிலாளர்கள் வீடுகள் மற்றும் அறைகளில் முடங்கி கிடந்தனர்.
உழவர் சந்தைகள்
திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டுக்கு தினமும் 100–க்கும் மேற்பட்ட விவசாயிகள் சுமார் 250 டன் காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம். இவற்றை மளிகை கடைக்காரர்கள், பொதுமக்கள் என்று ஆயிரக்கணக்கானவர்கள் வந்து வாங்கி செல்வார்கள். முழு அடைப்பு போராட்டத்துக்கு திருப்பூரில் உள்ள விவசாயிகள் தங்களது ஆதரவை தெரிவித்து இருந்தனர். நேற்று விவசாயிகள் காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வராததால் தென்னம்பாளையம் காய்கறி மார்க்கெட் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
இதேபோல் திருப்பூர் தெற்கு மற்றும் வடக்கு உழவர் சந்தைகளுக்கும் விவசாயிகள் காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வராததால் பொதுமக்கள் காய்கறி வாங்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். திருப்பூர் பழைய பஸ்நிலையம் எதிரில் உள்ள குமரன் தினசரி மார்க்கெட்டிலும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.
தியேட்டர்களில் காட்சிகள் ரத்து
திருப்பூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் செவ்வாய்கிழமைதோறும் சோளம், கம்பு, மக்காச்சோளம், ராகி உள்ளிட்ட விவசாய விளை பொருட்களுக்கான விற்பனை நடைபெறுவது வழக்கம். இங்கு பொதுமக்கள் வந்து பொருட்களை வாங்கிச்செல்வது வழக்கம். இந்த நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக நேற்று முழு அடைப்பு போராட்டம் நடந்ததால் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் சந்தை நடைபெறவில்லை. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் யாரும் இல்லாமல் சந்தை வெறிச்சோடி காணப்பட்டது.
முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றபோதிலும், திருப்பூரில் அரசு பஸ்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன. சில தனியார் பஸ்கள் மட்டும் ஓடவில்லை. மினிபஸ்கள் பெரும்பாலும் இயங்கவில்லை. தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் வேன், ஆட்டோக்கள் ஓடவில்லை. இதன்காரணமாக எப்போதும் பரபரப்பாக காணப்படும் அவினாசி ரோடு, குமரன் ரோடு நேற்று வாகன போக்குவரத்து குறைவாக இருந்தது. விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து திருப்பூரில் உள்ள தியேட்டர்களில் நேற்று காலை மற்றும் மதிய காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.
இதுபோல் அவினாசி, ஊத்துக்குளி, குன்னத்தூர், காங்கேயம், தாராபுரம், உடுமலை, மடத்துக்குளம், பல்லடம் பகுதிகளிலும் அனைத்து கடைகளும் நேற்று அடைக்கப்பட்டு இருந்தன.
சாலைமறியல்
முழு அடைப்பு போராட்டத்தையொட்டி, அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் அனைத்துக்கட்சிகள் சார்பில் திருப்பூர் தலைமை தபால் அலுவலகம் முன் சாலைமறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு தி.மு.க. திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் க.செல்வராஜ் தலைமை தாங்கினார். காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் கிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் காமராஜ், ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் சேகர், சி.ஐ.டி.யு. சார்பில் ரங்கராஜ், எச்.எம்.எஸ்., ஐ.என்.டி.யு.சி. சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திருப்பூர் பெரியார், அண்ணா சிலை முன்பிருந்து காலை 10 மணி அளவில் மறியல் போராட்டம் நடத்த தபால் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக சென்றார்கள். அதற்குள் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். இதைத்தொடர்ந்து தபால் அலுவலகம் அருகே உள்ள ரோட்டில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியல் போராட்டம் காரணமாக டவுன்ஹால், ரெயில்வே மேம்பாலம் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. திருப்பூர் மாநகர போலீஸ் துணை கமி‌ஷனர் திஷா மிட்டல் தலைமையிலான போலீசார், சாலைமறியலில் ஈடுபட்ட 5 பெண்கள் உள்பட 300 பேரை கைது செய்து வேனில் ஏற்றிச்சென்று ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
2,143 பேர் கைது
இதேபோல் மாவட்டத்தில் 30 இடங்களில் சாலைமறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெயராமகிருஷ்ணன், காங்கிரஸ் எம்.எல்.ஏ. காளிமுத்து, தி.மு.க. இளைஞர் அணி மாநில செயலாளர் மு.பெ.சாமிநாதன் உள்பட 1,843 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 41 பெண்கள் அடங்குவார்கள். திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மொத்தம் 2 ஆயிரத்து 143 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் மாலையில் அனைவரையும் விடுதலை செய்தனர்.
விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து திருப்பூர் மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன் நேற்று காலை நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாநில இணை செயலாளர் சித்திரைவேல், திருப்பூர் மாவட்ட செயலாளர் தங்கராஜ், பொருளாளர் பழனிச்சாமி, திருப்பூர் மாவட்ட பர்னிச்சர் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் வியாபாரிகள் சங்க தலைவர் ரத்னா மனோகர், தி திருப்பூர் வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் குட்டி உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டன
On Wednesday, April 26, 2017 by Unknown in ,    






ஊராட்சி செயலாளர்களுக்கு இளநிலை உதவியாளருக்கு இணையான காலமுறை ஊதியத்தை அரசு கருவூலத்தில் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அவினாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் ஊராட்சி செயலாளர்கள் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம் நடத்தினார்கள். ஊராட்சி செயலாளர் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் நடராஜ் தலைமையில் நடந்த போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பரமேஸ்வரன் முன்னிலைவகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராமச்சந்திரன் விளக்க உரையாற்றினார். காங்கேயம், ஊத்துக்குளி,திருப்பூர் அவினாசி உள்ளிட்ட ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி செயலாளர்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டனர்

Monday, April 24, 2017

On Monday, April 24, 2017 by Unknown in ,    




கெனோஷா(யு.எஸ்): விஸ்கான்ஸின் மாநிலத்தின் கெனோஷா நகரில் ஸ்னாப் ஆன் டூல்ஸ் நிறுவன நிகழ்ச்சியில் அதிபர் ட்ரம்ப் பங்கேற்றார். அங்கிருந்தவாறே புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அமெரிக்கப் பொருட்களை வாங்குவோம், அமெரிக்கர்களை வேலையில் அமர்த்துவோம் (Buy American Hire American) என்று இந்த புதிய உத்தரவுக்கு பெயரிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு மூலம் தனியார் நிறுவனங்களுக்கோ, தனி நபருக்கோ அமெரிக்கப் பொருட்களைத் தான் வாங்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அமெரிக்க அரசுத் துறையில் வாங்கப்படும் பொருட்களுக்கு , அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை வாங்க நிர்ப்பந்திக்கப்படும் ஒவ்வொரு துறையிலும் , அனைத்து பிரிவுகளிலும் பின்பற்றப்படும் கொள்முதல் கொள்கைகளை மறு ஆய்வு செய்து அமெரிக்க பொருட்களை வாங்குவதற்கு ஏற்றவாறு மாற்றம் செய்யப்படும். அமெரிக்க அரசு காண்ட்ராக்டர்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும். அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் ஸ்டீல்களையே, அரசுத் துறை கட்டுமானப் பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும். ஹெச் 1 பி விசா கண்காணிப்பு குடியுரிமைத் துறை சார்பில் ஏற்கனவே கள ஆய்வுகள் மூலம் ஹெச் 1 பி விசா முறைகேடுகளை கண்டறிய துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. (ஒன் இந்தியா செய்தியைப் பார்க்க) அரசு சார்பிலும் ஹெச் 1 பி விசா முறைகேடுகளை தடுத்து நிறுத்த , சம்மந்தப்பட்ட துறைகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் பேசிய ட்ரம்ப் ஹெச்1 பி விசாவில் நடைபெற்று வரும் முறைகேடுகள் பற்றி கூறினார். அமெரிக்காவில் தகுதி வாய்ந்த உயர் தொழில் நுட்ப வல்லுனர்கள் கிடைக்காத பட்சத்தில் மட்டுமே வெளி நாட்டிலிருந்து ஹெச் 1 பி விசா மூலம் ஊழியர்களை பணியில் அமர்த்த வேண்டும். தற்போது ஹெச் 1 பி விசாக்கள் , முறைகேடாக குறைந்த ஊதியத்தில் வெளி நாட்டு ஊழியர்களை பணியில் அமர்த்தப் பயன்படுத்தப்படுகின்றன. குறைந்த ஊதியத்தில் வெளி நாட்டிலிருந்து ஹெச் 1 பி விசாவில் வருபவர்களால், அமெரிக்க ஊழியர்களின் வேலை பறிபோகிறது. அது மட்டுமல்லாமல், உயர் தொழில் நுட்ப வல்லுனர்கள் தேவைப்படும் நிறுவன்ங்களால் வெளி நாட்டு ஊழியர்களை பணியில் அமர்த்த முடியவில்லை. சம்மந்தப்பட்ட் அனைத்து துறைகளும் ஹெச் 1 பி விசா முறைகேடுகள் பற்றி தீவிரமாக ஆராய்ந்து தக்க முன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவு மூலம் ட்ரம்ப் கேட்டுள்ளார். ஆனாலும் ஹெச் 1 பி விசா எண்ணிக்கையை குறைப்பது பற்றியோ, புதிய சட்டங்கள் அல்லது சட்ட சீர்திருத்தம் பற்றி ஏதும் குறிப்பிடப் படவில்லை. குறைவான ஊதியத்துடன் ஹெச் 1 பி விசா விண்ணப்பிப்பவர்களுக்கு அனுமதி மறுக்கப்படும் என்று தெரிகிறது.அதே போல் விசாவில் குறிப்பிட்ட ஊதியத்தை வழங்காத நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை பாயும் எனவும் எதிர்பார்க்கப் படுகிறது. தனக்கு வாக்களித்தவர்களுக்க் தான் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றும் வகையில் ட்ரம்பின் சமீபத்திய நடவடிக்கைகள் இருந்து வருகின்றன. அடுத்த அதிபர் தேர்தலை மனதில் வைத்து இப்போதே, ட்ரம்ப் காய் நகர்த்தத் தொடங்கியுள்ளதாகவும் தெரிகிறது

On Monday, April 24, 2017 by Unknown in ,    




ஊட்டி: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் காவலாளி ஓம்பகதூர் என்பவர் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மற்றொரு காவலாளி கிஷண்பகதூர் என்பவர் படுகாயங்களுடன் கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களாவில் அண்மையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. முக்கிய ஆவணங்கள் எரிக்கப்பட்டபோது இந்த தீ விபத்து நிகழ்ந்திருக்கலாம் என கூறப்பட்டது


இச்சம்பவம் நிகழ்ந்த சில நாட்களிலேயே ஜெயலலிதாவுக்கு சொந்தமான நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட்டில் காவலாளி ஓம்பகதூர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். மற்றொரு காவலாளி கிஷண்பகதூர் என்பவர் படுகாயங்களுடன் கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொடநாடு எஸ்டேட்டில் முக்கியமான ஆவணங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம். அந்த ஆவணங்களை அபகரிக்க முயன்றபோது இந்த சம்பவங்கள் நிகழ்ந்ததா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

On Monday, April 24, 2017 by Unknown in ,    

சிகாகோ(யு.எஸ்): அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா நான்கு மாத ஓய்வை முடித்துக் கொண்டு மீண்டும் மக்கள் பணிக்கு திரும்புகிறார்.
தீவிர அரசியல் இல்லாமல் சமுதாய மாற்றத்திற்கான புதிய களத்தில் ஒபாமா பணியாற்றுவார் என்று அவரது தனிச் செயலாளர் தெரிவித்துள்ளார்.



முதல் நிகழ்ச்சியாக சிகாகோ பல்கலைக் கழகத்தில் மாணவர்களுடன் வருகிற திங்கட்கிழமை உரையாற்றுகிறார். 'சமுதாய ஒருங்கிணைப்பும் சமூகப் பணிகளும்' என்ற தலைப்பில் ஒபாமா பேச உள்ளார்.
அதைத் தொடர்ந்து பாஸ்டனில் ஒரு விருது வழங்கும் விழாவில் பங்கேற்கிறார். இன்னும் சில தனியார் நிகழ்ச்சிகளிலும் பேச உள்ளார்.
ஐரோப்பா பயணம் மேற்கொள்ளும் ஒபாமா , ஜெர்மனி சான்சலர் ஏஞ்சலா மெர்கெலுடன் பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்கிறார்.
இந்த நிகழ்ச்சிகள் எதிலும் ஒபாமா அரசியல் பேசப் போவதில்லை என தெரிகிறது. அவரது ஆதரவாளர்கள், அதிபர் ட்ரம்புக்கு எதிராக ஒபாமா குரல் எழுப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர்.
ஆனால் ஒபாமா, ஒரு நேரத்தில் ஒரு அதிபர் தான் இருக்க முடியும். அதிபர் ட்ரம்புக்கு எதிரான அரசியல் செய்ய விரும்பவில்லை என்று முடிவெடுத்துள்ளாராம்.
ஆனாலும் ஜனநாயகக் கட்சி வளர்ச்சிக்காக தலைவர்களை ஊக்கப்படுத்தும் விதத்தில் அரசியல் தொடர்பான பயிற்சி முகாம்கள் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.
அடுத்த தலைமுறை இளைய தலைவர்களை உருவாக்கவும், மனித உரிமைகளுக்காவும் செயல்படுவார் என்று ஒபாமாவின் நெருங்கிய ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதிபர் ட்ரம்புக்கு எதிரான அரசியல் செய்யாமல், அடிப்படை மாற்றத்திற்கான வழிகளை நோக்கி தமது செயல்பாடுகளை அமைத்துக் கொள்ள ஒபாமா விரும்புகிறார்.
பொது மேடைகளிலோ அல்லது தனிப்பட்ட நிகழ்ச்சிகளிலோ அதிபர் ட்ரம்பை விமர்சித்து ஒபாமா பேச மாட்டார் என அவருடைய நெருக்கமான நட்பு வட்டாரத்தினர் தெரிவிக்கின்றனர்
சுயசரிதை எழுதும் ஒபாமா தம்பதியினர்
கடந்த நான்கு மாதங்களாக கரிபியின் தீவுகளில் குடும்பத்தினருடன் ஓய்வெடுத்து வந்த ஒபாமா , கால்ஃப் ஆடியும் கடற்கரையில் ஓய்வெடுத்தும் களித்துள்ளனர்.
தங்கள் வாழ்க்கை வரலாற்றை எழுதுவதற்கும் ஒபாமாவும் மிஷல் ஒபாமாவும் தயார் செய்து கொண்டிருக்கின்றனர். பெங்குயின் பதிப்பகத்தாரிடம் பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.
இருவரும் தனிப்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் உள்ளனர். இத்தகைய நிகழ்ச்சிகளில் பங்கேற்று பேசுவதற்கு குறிப்ப்ட தொகை வழங்கப்படும்.
பில் க்ளிண்டன் ஒரு நிகழ்ச்சிக்கு 200 ஆயிரம் டாலர்கள் வரை வாங்கி இருந்தார். ஜார்ஜ் டபுள்யூ புஷ்க்கு 100 ஆயிரம் முதல் 175 ஆயிரம் டாலர்கள் வரை ஒரு நிகழ்ச்சிக்கு வழங்கப்பட்டது.
ஒபாமாவுக்கு பில் க்ளிண்டனை விடவும் அதிகம் கொடுக்க வாய்ப்பு இருக்கிறது. பில் க்ளிண்டன் போலவே ஒபாமா அறக்கட்டளையும் தொடங்கவும் வாய்ப்புள்ளது.
இளைய மகள் சாஷா பள்ளிக்கல்வியை முடிக்கும் வரையிலும் தலை நகர் வாஷிங்டனில் தங்கி இருக்கவும் முடிவு செய்துள்ளனர். அதன் பிறகு சிகாகோவில் குடிபெயர்வார்கள் என தெரிகிறது
On Monday, April 24, 2017 by Unknown in ,    




லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்தும் தங்கியிருக்கும் வெளிநாட்டவர் குறித்து அந்நாட்டின் குடியேற்றத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். லெய்செஸ்டரில் 2 ஆடை தொழிற்சாலைகளில் இந்த சோதனை நடைபெற்றது.



இச்சோதனையில்தான் 9 பெண்கள் உட்பட 38 இந்தியர்கள் சிக்கினர். இதில் 31 பேர்தான் விசார காலம் முடிவடைந்தும் பிரிட்டனிலேயே தங்கியவர்கள் என்றும் 7 பேர் சட்டவிரோதமாக பிரிட்டனுக்குள் நுழைந்தவர்கள் எனவும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த இரு நிறுவனங்களும் சட்டவிரோதமாக பயன்படுத்திய ஒவ்வொரு தொழிலாளருக்கும் 20,000 பவுண்டுகள் அபராதம் கட்ட வேண்டிய நிலை உள்ளது

Wednesday, December 21, 2016

On Wednesday, December 21, 2016 by Unknown in ,    
திருப்பூர்
திருப்பூரில் இரட்டை கொலை வழக்கில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்து, 3½ ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
இரட்டை கொலைதிருப்பூர் முதலிபாளையம் சிட்கோ அருகே உள்ள மானூர் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவருடைய மனைவி வள்ளியம்மாள். பழனிச்சாமியின் தம்பி மனோகரனின் மகன்கள் மகேஸ்வரன், ரகுவரன்(வயது 39). பழனிச்சாமி குடும்பத்துக்கும், அவருடைய தம்பி மனோகரனின் குடும்பத்துக்கும் இடையே சொத்துத்தகராறு இருந்து வந்துள்ளது.
கடந்த 21–1–2010 அன்று ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த மனோகரனின் மகன்கள் மகேஸ்வரன், ரகுவரன் ஆகியோர் தங்களது பெரியப்பா பழனிச்சாமி, பெரியம்மா வள்ளியம்மாள் ஆகியோரை தாக்கி கொலை செய்ததாக தெரிகிறது. இது குறித்த புகாரின் பேரில் திருப்பூர் ஊரக போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேஸ்வரன், ரகுவரன் ஆகியோரை கைது செய்தனர்.
3½ ஆண்டுகளாக தலைமறைவுஇதுதொடர்பான வழக்கு திருப்பூர் 2–வது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கடந்த 3½ ஆண்டுகளுக்கு முன்னர் சிறையில் இருந்த அண்ணன், தம்பி இருவரும் ஜாமீனில் வெளியே வந்தனர். இவர்களில் மகேஸ்வரன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.
ஜாமீனில் வந்த ரகுவரன் வழக்கு விசாரணைக்கு கோர்ட்டில் ஆஜராகாமல் கடந்த 3½ ஆண்டாக தலைமறைவாக இருந்தார். இதனால் வழக்கு விசாரணை பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ரகுவரனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசாருக்கு நீதிபதி ஜியாவுதீன் உத்தரவிட்டார். அதன்பேரில், போலீசார் தனிப்படை அமைத்து ரகுவரனை தேடி வந்தனர். இந்தநிலையில் திருப்பூர் காசிப்பாளையம் பகுதியில் போலீசார் நேற்று காலை ரோந்து பணியில ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்தவழியாக ரகுவரன் நடந்து வந்து கொண்டிருந்தார். ரகுவரனை பார்த்த போலீசார் அவரை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
On Wednesday, December 21, 2016 by Unknown in ,    
திருப்பூர்
வாங்கிய கடனுக்கு தங்களுடைய நிலத்தை அபகரித்து தனியார் நிதி நிறுவனத்தினர் மோசடி செய்து விட்டதாக புகார் தெரிவித்தும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு தாய், மகன் தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தீக்குளிக்க முயற்சிதிருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை கலெக்டர் எஸ்.ஜெயந்தி தலைமையில் நடைபெற்றது. பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்கள் மூலமாக கலெக்டரிடம் தெரிவித்தனர். அவினாசி ஈட்டிவீரம்பாளையம் மொய்யாண்டாம்பாளையத்தை சேர்ந்த விவசாயி சண்முகசுப்பிரமணியம்(வயது 65), அவருடைய மனைவி ருக்குமணி(60), மகன் செந்தில்குமார்(45) ஆகியோர் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். திடீரென்று கலெக்டர் அலுவலகம் முன்பு ருக்குமணியும், செந்தில்குமாரும் மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உடனடியாக அவர்களை தடுத்து நிறுத்தி மண்எண்ணெய் கேன் மற்றும் தீப்பெட்டியை அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்தனர். இதனால் அங்கு பெரும்பரபரப்பு ஏற்பட்டது.
சம்பவம் இடத்துக்கு வந்த வீரபாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் ருக்குமணி, சண்முகசுப்பிரமணியம், செந்தில்குமார் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார்கள். பின்னர் ருக்குமணி கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:–
நிலத்தை அடமானம் வைத்து கடன்மொய்யாண்டாம்பாளையத்தில் எனது கணவருக்கு 5.35 ஏக்கர் நிலம், அதில் ஒரு வீடும் உள்ளது. எனது மூத்த மகனான செந்தில்குமாருக்கு தொழில் செய்ய பணம் தேவைப்பட்டதால் வீட்டை அடமானம் வைத்து ரூ.20 லட்சம் கடன் பெற திட்டமிட்டோம். இதற்காக திருப்பூர் டூம்லைட் மைதானத்தில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்துக்கு கடந்த 18–3–2013 அன்று சென்று அங்கிருந்த பிரகாஷ், கோவிந்தராஜ், தியாகராஜ் ஆகியோரை சந்தித்தோம்.
எங்களுடைய 35 சென்ட் அளவுள்ள இடத்தில் இருக்கும் வீட்டை அடமானமாக வைத்து கடன் தொகை கேட்டதற்கு அவர்கள் ரூ.13 லட்சம் மட்டுமே கடன் தருவதாக கூறினார்கள். இதைத்தொடர்ந்து 20–6–2013 அன்று பத்திரத்தை அடமானமாக வைத்தோம். எங்களுடைய உண்மை பத்திரத்தை பெற்று ரூ.13 லட்சத்தை வட்டிக்கு கொடுத்தனர். எங்களுடைய உண்மை பத்திரம் 5.35 ஏக்கர் நிலத்தையும் சேர்ந்து இருந்தது. 3 ஆண்டுகளாக வட்டி சரியாக கட்டி வந்தோம். கடந்த 3 மாதங்களாக எங்களால் வட்டி கட்ட முடியவில்லை.
நடவடிக்கை எடுக்க வேண்டும்இந்தநிலையில் கடந்த நவம்பர் மாதம் 2–ந் தேதி எங்களுடைய நிலத்தின் கிரைய நகலை பார்த்தபோது அது பிரகாஷ் என்பவர் பெயரில் கிரையம் செய்திருப்பதை அறிந்தோம். இது தொடர்பாக திருப்பூர் ஆர்.டி.ஓ.விடம் மனு கொடுத்தோம். அதன்பின்னர் கோவிந்தராஜ், பிரகாஷ் மற்றும் ஆளுங்கட்சியை சேர்ந்த கண்ணப்பன் உள்பட 200–க்கும் மேற்பட்டவர்கள் எங்கள் நிலத்துக்குள் வேலி போடுவதற்காக வந்தனர். அப்போது தடுக்கச்சென்ற எங்களை தாக்க முயன்றனர். இதுகுறித்து பெருமாநல்லூர் போலீஸ்நிலையத்தில் புகார் கொடுத்தோம். இந்த நிலையில் கடந்த 16–ந் தேதி எங்கள் வீட்டுக்கு செல்லும் பாதையை அடைத்து விட்டனர். எங்கள் நிலத்தை மோசடியாக அபகரிப்பு செய்த பிரகாஷ், கோவிந்தராஜ், தியாகராஜ் ஆகியோர் மீதும், தாக்குதல் நடத்தியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
On Wednesday, December 21, 2016 by Unknown in ,    
அவினாசி
அவினாசி ஒன்றியம் கருவலூர் ஊராட்சியில் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். கழிவுநீர் கால்வாய்களில் கழிவுநீர் தேங்கி சேறும் சகதியுமாக இருப்பதால் மக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது. அப்பகுதி முழுவதும் சாலைகள் பெயர்ந்து பொதுமக்களுக்கு பயன்பாடின்றி குண்டும் குழியுமாக உள்ளது. கருவலூர் இந்திராநகர், ஜோதிநகர், மற்றும் மூகாம்பிகை நகர் உள்ளிட்ட இடங்களில் கழிவுநீர் கால்வாய் வசதிகள் வேண்டும் என்பது உள்பட நீண்ட கால பிரச்சினைகளை தீர்க்கக்கோரியும், உடனே அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று அப்பகுதியை சேர்ந்த 80 பெண்கள் உள்பட திரளான பொதுமக்கள் கருவலூர் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு காலி குடங்களுடன் வந்து அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் விஜயராகவன் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட குழு உறுப்பினர் அருண், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் அருணாச்சலம், சற்குணம், தங்கவேல் ஆகியோர் முன்னிலைவகித்தனர்
On Wednesday, December 21, 2016 by Unknown in ,    
திருப்பூர்,
திருப்பூர் பூக்கடை வீதி சந்திப்பில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்தை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகர போலீசாருக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
போக்குவரத்து நெரிசல்திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட சாலை பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தொடர்பான ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் எஸ்.ஜெயந்தி தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில், திருப்பூர் மாநகர பகுதிகளில் சாலை பாதுகாப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய பராமரிப்பு பணிகளுக்காக வருகிற நிதியாண்டில் நிதிஒதுக்கீடு கோரி அரசிற்கு முன்மொழிவுகள் அனுப்பப்படும் என்று தீர்மானிக்கப்பட்டது. மேலும், திருப்பூர் மாநகர ரிங் ரோட்டில் வளைவுகள் அதிகமாக உள்ளதால், ஒளிரும் ஸ்டிக்கர்கள் மற்றும் எச்சரிக்கை பலகைகள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது.
திருப்பூர் மாநகர சாலைகளில் தெர்மோ பிளாஸ்டிக் பெயிண்ட் மூலம் கோடுகள், மேலும், காலேஜ் ரோடு, கோவை டிபார்ட்மெண்டல் ஸ்டோர் முதல் 15, வேலம்பாளையம் செல்லும் சாலையில் தடுப்பு சுவர்களை அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள திருப்பூர் நெடுஞ்சாலைத்துறையிடம் தெரிவிக்கப்பட்டது. திருப்பூர் மாநகரம், பூக்கடை வீதி சந்திப்பில் சாலையோர ஆக்கிரமிப்புகளால் கடும் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகிறார்கள். எனவே, இந்த இடங்களில் போக்குவரத்து நெரிசலை சீர் செய்திட திருப்பூர் மாநகர துணை போலீஸ் கமிஷனருக்கு தெரிவிக்கப்பட்டது.
அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்மேலும், திருப்பூர் மாநகரம், அனுப்பர்பாளையம் புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அருகே அமைந்துள்ள அவிநாசி சாலையில் வேகத்தடுப்பினை வைக்க நடவடிக்கை மேற்கொள்ளவும், அவிநாசி, பல்லடம், காங்கயம், தாராபுரம் மற்றும் உடுமலைப்பேட்டை வட்டங்களில் உள்ள ஊராட்சி சாலைகள் பிரதான சாலைகளை சந்திக்கும் இடங்களிலும், பொதுமக்கள் அதிகமாக உள்ள இடங்கள் மற்றும் பள்ளிகள் அமைந்துள்ள இடங்களில் வாகனத்தின் வேகத்தினை கட்டுப்படுத்தும் பொருட்டு வேகத்தடுப்பான்கள் அமைக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டன.
காங்கேயம்–திருப்பூர் ரோடு, வாய்க்கால் மேடு பகுதியில் உள்ள பாலத்தை அகலப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது. உடுமலை மொடக்குப்பட்டி கிராமம், மொடக்குப்பட்டி பகுதியில் உள்ள மொக்குபாலத்திற்கு தடுப்புச்சுவர் கட்ட உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும், சாலை போக்குவரத்தை சீர் செய்யவும், பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், குறிப்பாக போலீஸ், போக்குவரத்து துறையினர் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் உரிய நடவடிக்கைகள் எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டது
On Wednesday, December 21, 2016 by Unknown in ,    
திருப்பூர்,
திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் ‘ஸ்வைப் மெஷின்’ பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுகள் மூலமாக வரியினங்களை செலுத்துவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது என்று மாநகராட்சி ஆணையாளர் அசோகன் தெரிவித்துள்ளார்.
‘ஸ்வைப் மெஷின்’திருப்பூர் மாநகராட்சிக்கு சொத்துவரி, வீட்டு வரி, தண்ணீர் வரி உள்ளிட்ட வரியினங்களை மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் செலுத்தி வருகிறார்கள். பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் மூலம் வரி செலுத்தலாம் என்று கடந்த 15–ந் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது. இதனால் மாநகராட்சிக்கு ரூ.18½ கோடி வரி வசூலானது.
ஏ.டி.எம். எந்திரங்களில் நபர் ஒருவர் ரூ.2 ஆயிரத்தை மட்டுமே ஒருநாள் எடுக்க முடியும். அதுபோல் வங்கியில் இருந்து பணம் எடுப்பதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மாநகரில் உள்ள மக்களிடம் பணத்தட்டுப்பாடு நிலவி வருகிறது. இருப்பினும் மாநகராட்சிக்கு வரி வசூலை ஊக்கப்படுத்தும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் ‘ஸ்வைப் மெஷின்’ வசதியை ஏற்படுத்தி உள்ளது.
வரிவசூல் மையங்கள்திருப்பூர் மாநகராட்சி தலைமை அலுவலகம், வேலம்பாளையத்தில் உள்ள முதலாவது மண்டல அலுவலகம், செட்டிப்பாளையம், தொட்டிப்பாளையத்தில் உள்ள 2–வது மண்டல அலுவலகம், நெருப்செரிச்சல், நல்லூரில் உள்ள 3–வது மண்டல அலுவலகம், முத்தனம்பாளையம், மண்ணரை, ஆண்டிப்பாளையத்தில் உள்ள 4–வது மண்டல அலுவலகம், முருகம்பாளையம், வீரபாண்டி ஆகிய 11 இடங்களில் மாநகராட்சிக்கான வரி வசூல் மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த 11 மையங்களிலும் நேற்று முதல் ‘ஸ்வைப் மெஷின்’ வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்களுடைய டெபிட் கார்டு, கிரெடிட் கார்டுகள் மூலமாக ‘ஸ்வைப் மெஷினை’ பயன்படுத்தி தங்களுடைய வரியினங்களை செலுத்துவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளன. திருப்பூர் மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் ‘ஸ்வைப் மெஷின்’ எந்திரத்தின் செயல்பாட்டை செயற்பொறியாளர் தமிழ்செல்வன் தொடங்கி வைத்தார். இதில் உதவி ஆணையாளர் (கணக்கு) சந்தானநாராயணன், உதவி திட்ட அமைப்பாளர் சவுதாமணி, வருவாய் ஆய்வாளர் தங்கவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வரி செலுத்த வேண்டும்இதுகுறித்து மாநகராட்சி தனி அதிகாரியான ஆணையாளர் அசோகன் கூறும்போது, ‘பொதுமக்கள் தங்களின் வீட்டு வரி, சொத்துவரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்ட வரி இனங்களை பணபரிமாற்றம் இல்லாதவகையில் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மூலமாக செலுத்தலாம். பொதுமக்கள் இந்த வசதியை பயன்படுத்தி உரிய காலத்துக்குள் தங்களின் வரியை செலுத்த வேண்டும்’ என்றார்
On Wednesday, December 21, 2016 by Unknown in ,    
திருப்பூர்
திருப்பூர் வாலிபாளையம் பகுதியில் நள்ளிரவில் வாலிபர் ஒருவருடன் சுற்றிய மாணவிகளை பிடித்த போலீசார் அவர்களை எச்சரித்து பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.
மாணவிகள்திருப்பூர் வாலிபாளையம் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு சுமார் 12 மணியளவில் வாலிபர் ஒருவருடன் இரு இளம்பெண்கள் அங்கும் இங்குமாக சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ரோந்து போலீசார் அவர்களை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணான பதில் கூறினார்கள். மேலும் அந்த இளம்பெண்கள் தன்னுடைய சகோதரிகள் என்றும், தங்கள் வீட்டிற்கு சென்று கொண்டிருப்பதாகவும் உடன் வந்த வாலிபர் தெரிவித்தார்.
ஆனால் அவர்களின் பேச்சில் சந்தேகம் அடைந்த போலீசார் இளம்பெண்களுடன் வந்த வாலிபரை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த இளம்பெண்கள் திருப்பூரில் உள்ள மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவிகள் என்றும், அவர்கள் இந்த வாலிபருடன் இரவு நேரத்தில் வாலிபாளையம் பகுதியில் சுற்றியதும் தெரியவந்தது.
பெற்றோருடன் அனுப்பிய போலீசார்இதையடுத்து அவர்கள் 3 பேரையும் ஆட்டோவில் ஏற்றிய போலீசார் பெற்றோரிடம் ஒப்படைக்கும் படி கூட்டி சென்றனர். மாணவிகள் கூறிய முகவரிக்கு போலீசார் அவர்களை கூட்டி கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சென்ற பின்னரே மாணவிகள் கூறியது தவறான முகவரி என்று தெரியவந்தது. பின்னர் மாணவிகளிடம் இருந்து பெற்றோரின் செல்போன் எண்ணை வாங்கி அவர்களுடன் தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்தனர்.
பின்னர் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு வந்த அந்த மாணவிகளின் பெற்றோருடன் போலீசார் மாணவிகளை அனுப்பி வைத்தனர். வாலிபரையும் எச்சரித்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இளம் வயதிலேயே பல மாணவிகள் பல்வேறு தவறான பாதைகளில் செல்வதால் பெற்றோர் கவனத்துடன் இருந்து அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த முன்வரவேண்டும் என்று போலீசார் தெரிவித்தனர்

Wednesday, August 31, 2016

On Wednesday, August 31, 2016 by Unknown in


சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிர்ணயத்தை பொறுத்து எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது பெட்ரோல்,டீசல் விலையை உயர்த்தியும்,குறைத்தும் வருகின்றன.

இந்நிலையில் சர்வதேச சந்தையில் கச்சாஎண்ணெய்யின் விலை உயர்வால் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3.38 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.67 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும்.
On Wednesday, August 31, 2016 by Unknown in

நெமிலி அருகே உள்ள சயனாபுரத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. 
இந்த பள்ளியில் 760 மாணவ- மாணவிகள் படிக்கிறார்கள். தலைமை ஆசிரியர் உள்பட 18 ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள்.
பள்ளியில் கடந்த 2015-ம் ஆண்டு தலைமை ஆசிரியராக பென்ஜமின் என்பவர் நியமிக்கப்பட்டார். அவர் பணிக்கு வந்த பின்னர் பள்ளியில் பல மாறுதல்கள் கொண்டு வரப்பட்டு, நிர்வாகம் சிறப்பாக இருந்தது என்றும் மாணவ-மாணவிகளின் கல்வித்தரம் உயர்த்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
பொதுத் தேர்வுகளில் மாணவ-மாணவிகள் அதிக மதிப்பெண் எடுத்து வெற்றி பெற்றதாகவும் தெரிகிறது. இந்த நிலையில் தலைமை ஆசிரியர் பென்ஜமின் கடந்த வாரம் மாறுதல் பெற்று சென்றார்.
இது மாணவ-மாணவிகளையும் பெற்றோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவர்கள் பென்ஜமினை மீண்டும் தலைமை ஆசிரியராக நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
பென்ஜமினை தலைமை ஆசிரியராக நியமிக்காவிட்டால் நாங்கள் பள்ளிக்கு செல்லமாட்டோம் என்று கூறி இன்று காலை மாணவ- மாணவிகள் போராட்டத்தில் குதித்தனர்.
பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகள் இன்று காலை பள்ளிக்கு முன்பு திரண்டனர். பள்ளியின் கேட்டை பூட்டு போட்டு மூடினர். அவர்களின் போராட்டத்துக்கு மாணவ- மாணவிகளின் பெற்றோரும் ஆதரவு தெரிவித்தனர்.
பள்ளிக்கு வந்த ஆசிரியர்களையும் மாணவ- மாணவிகள் உள்ளே செல்ல விடாமல் தடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
மாணவ-மாணவிகளின் போராட்டம் குறித்து கல்வித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது..
On Wednesday, August 31, 2016 by Unknown in ,
கொல்கத்தா:

டாட்டா கார் தொழிற்சாலைக்காக சிங்கூரில் விவசாயிகளிடம் இருந்து கையகப்படுத்திய 1000 ஏக்கர் நிலத்தை 3 மாதங்களுக்குள் விவசாயிகளிடமே ஒப்படைக்குமாறு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தீர்ப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி 'சிங்கூர் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரலாற்று சிறப்பு வாய்ந்தது. இந்தத் தீர்ப்பிற்காக கடந்த பத்து வருடங்களாக நாங்கள் காத்திருந்தோம்.
நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து 26 நாட்கள் வரை நான் உண்ணாவிரதம் இருந்தேன். விவசாயிகளிடம் இருந்து நிலம் கையகப்படுத்தப்படுவதற்கு ஆரம்பத்தில் இருந்தே நாங்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தோம்.
மேலும், உச்ச நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்துவது குறித்து நாளை முக்கிய ஆலோசனை நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
சிங்கூரில் டாட்டா தொழிற்சாலைக்காக விவசாயிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட நிலம் அவர்களிடமே திருப்பி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மம்தா பானர்ஜி தன்னுடைய தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விவசாயிகளின் இந்த வெற்றி வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும். சிங்கூர் விவசாயிகளின் நிலத்தை அவர்களிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டிய ஒரு வேலை மட்டும் இதுநாள்வரை எனக்கு மிச்சமிருந்தது. தற்போது அதுவும் நிறைவேறி விட்டதால் இனி நான் நிம்மதியாக இறப்பேன்' என்று உருக்கமாகத் தெரிவித்தார்.