Showing posts with label விழுப்புரம். Show all posts
Showing posts with label விழுப்புரம். Show all posts

Wednesday, April 26, 2017

On Wednesday, April 26, 2017 by Unknown in , ,    






விழுப்புரம் அருகே உள்ள கக்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் சிங்காரம் (வயது 38). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக இருந்தார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சத்யா(30) என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 3½ வயதில் நித்தீஷ் என்ற குழந்தை உள்ளது.

வழக்கம்போல் நேற்று முன்தினம் சிங்காரம் ஓட்டலுக்கு சென்றார். இரவு வேலை முடிந்ததும் குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். அப்போது சத்யாவிற்கும், சிங்காரத்துக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

கழுத்தில் காயங்கள்

இந்த நிலையில் நேற்று காலையில் சிங்காரம் வீட்டில் இறந்து கிடந்தார். அவரது உடலில், விவசாய பூச்சி மருந்தின்(விஷம்) வாசம் வீசியது. உடனே சத்யா, தனது கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து சிங்காரத்தின் உடலை பார்த்து சென்றனர். மேலும் இது தொடர்பாக கெடார் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோசப்செல்வராஜ், சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்த் மற்றும் போலீசார் விரைந்து வந்து சிங்காரத்தின் உடலை பார்வையிட்டனர். அப்போது சிங்காரத்தின் கழுத்து பகுதியில் காயங்கள் இருந்தன. இதனால் அவர் கயிற்றால் கழுத்தை இறுக்கி படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.

எனவே சிங்காரத்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து, சிங்காரம் இறந்தது தொடர்பாக அக்கம்பக்கத்தில் வசிப்பவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

மனைவி கைது

அப்போது சத்யாவின் நடவடிக்கையை போலீசார் உன்னிப்பாக கவனித்தனர். அவரது நடவடிக்கையில் சந்தேகம் எழுந்ததால் சத்யாவை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சத்யா, தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து சிங்காரத்தை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து சத்யாவை போலீசார் கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
போலீசாரிடம் சத்யா அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

கள்ளக்காதல்

எனக்கும், சிங்காரத்துக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 5 ஆண்டுகளாக குழந்தை இல்லை. நான் எங்களது கிராமத்தில் உள்ள செங்கல் சூளையில் கூலி வேலைக்கு சென்றேன். அப்போது எனக்கும், அதே செங்கல் சூளையில் கூலிவேலை செய்த புதுப்பேட்டையை சேர்ந்த ரவி என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த பழக்கம் எங்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் நெருங்கி பழக ஆரம்பித்தோம். இருவரும் அடிக்கடி சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தோம். எனது கணவர் வேலைக்கு சென்றவுடன், ரவியை வீட்டிற்கு வரவழைப்பேன். வீட்டில் இருவரும் சந்தோஷமாக இருப்போம். ரவியின் மூலம் நான் கர்ப்பமானேன். தற்போது எனக்கு 3½ வயதில் நித்தீஷ் என்ற மகன் உள்ளான்.

குடிபோதையில் திட்டினார்

ரவி எனது வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றதால், கள்ளக்காதல் விவகாரம் அக்கம்பக்கத்தில் வசிப்பவர்களுக்கு தெரிந்து விட்டது. இவர்கள் மூலமாக எனது கணவர் சிங்காரத்துக்கும் தெரிந்து விட்டது. இதனால் எனது கணவர் என்னை கண்டித்தார். இனிமேல் செங்கல் சூளைக்கு செல்லக்கூடாது, ரவியுடன் பேசக்கூடாது, பழகக்கூடாது, வீட்டிற்கு அழைத்து வரக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தார். இது எனக்கு பிடிக்கவில்லை. 

வீட்டிலேயே இருந்தேன். கள்ளக்காதலனை சந்திக்க முடியாமல் தவித்தேன்.
இந்த நிலையில் 24-ந் தேதி(நேற்று முன்தினம்) இரவு குடிபோதையில் வீட்டுக்கு வந்த சிங்காரம், ரவியுடன் கள்ளக்காதல் வைத்திருப்பது தொடர்பாக என்னை ஆபாசமாக பேசினார். உடனடியாக நான், ரவியை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினேன். அப்போது, எனது கணவர் அடிக்கடி என்னை திட்டுகிறார். எனவே நான் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன் என்றேன்.

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொன்றேன்

அதற்கு ரவி, நீ ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும். நாம் இருவரும் சந்தோஷமாக வாழ வேண்டும். நமக்கு இடையூறாக உள்ள சிங்காரம் தான் சாக வேண்டும். எனவே நாம் இருவரும் சேர்ந்து சிங்காரத்தை கொலை செய்து விடலாம் என்றார். இதற்கு நான் சம்மதம் தெரிவித்தேன். உடனே ரவி, உன் கணவர் தூங்கியவுடன் எனக்கு செல்போன் மூலமாக தகவல் கொடு. உடனடியாக வந்துவிடுகிறேன் என்று கூறினார்.

எனது கணவர் சிங்காரம் இரவு 10.30 மணிக்கு தூங்கினார். உடனே நான், ரவிக்கு செல்போன் மூலமாக தகவல் தெரிவித்தேன். உடனடியாக ரவி எனது வீட்டிற்கு வந்தார். இதையடுத்து மாடு கட்டுவதற்காக வைத்திருந்த கயிற்றால் சிங்காரத்தின் கழுத்தை இறுக்கி கொலை செய்தோம்.

உடலில் விஷத்தை தெளித்தோம்

பின்னர் சிங்காரம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக அனைவரையும் நம்ப வைக்க இருவரும் முடிவு செய்தோம். அதற்காக ஏற்கனவே ரவி, விவசாய பயிர்களுக்கு தெளிப்பதற்கான மருந்தை(விஷம்) வாங்கி வந்திருந்தார். அதனை சிங்காரத்தின் உடல் முழுவதும் தெளித்தோம். பின்னர் ரவி, அங்கிருந்து சென்று விட்டார்.

மறுநாள் காலையில் எனது கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறி நாடகமாடினேன். இதனை எங்கள் கிராம மக்கள் நம்பி விட்டார்கள். ஆனால் போலீசார் நம்பவில்லை. போலீசாரிடம் சிக்கிக்கொண்டேன்

Wednesday, September 17, 2014

On Wednesday, September 17, 2014 by farook press in ,    
விழுப்புரம் மாவட்டம் முழுவதும் இடி, மின்னலுடன் கன மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக செஞ்சியில் 57 மில்லிமீட்டர் மழை பதிவானது.

வெப்பச்சலனம்

விழுப்புரத்தில் கடந்த சில நாட்களாக மிதமான மழை பெய்து வருகின்றது. இந்நிலையில், வெப்பசலனம் காரணமாக கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படி நேற்று முன்தினம் இரவு விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. விழுப்புரத்தில் நேற்று முன்தினம் காலை முதல் மாலை வரையிலும் வானம் மழைக்கான அறிகுறி எதுவும் இன்றி தெளிவாக காணப்பட்டது. பின்னர் மாலை 7 மணி அளவில் பலத்த காற்று வீசியது. அதனை தொடர்ந்து லேசான மழை பெய்தது. தொடர்ந்து இடி-மின்னலுடன் கன மழை கொட்டியது. திடீர் மழையை எதிர்பார்க்காத சிலர் ஒதுங்க இடமின்றி நனைந்தபடிசென்றதை காணமுடிந்தது. தாழ்வான சாலைகளில் மழை நீர் தேங்கியது. இதனால் பிரதான சாலைகளில் வழக்கமாக செல்வதை காட்டிலும் வாகனங்கள் மிதமான வேகத்திலேயே சென்றது.

சுவர் இடிந்து விழுந்தது

இந்த கனமழையின் காரணமாக விழுப்புரம் கே.கே.ரோடு, பூந்தமல்லி தெரு, நேருஜி ரோடு ஆகியவற்றில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியதை காணமுடிந்தது. மேலும் கீழ்பெரும்பாக்கம் ரெயில்வே சுரங் கப்பாதையில் வெள்ள நீர் தேங்கி குளம் போல் காட்சியளித்தது. தாழ்வான பகுதியான மணி நகரில் சுமார் 50-க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும் நேருஜி சாலையில் கனமழைக்கு பொதுபணித்துறை அலுவலக மதில்சுவரானது இடிந்து விழுந்தது. நேற்று காலை 8.30 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த மழை அளவின் விபரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

On Wednesday, September 17, 2014 by farook press in ,    
ரிஷிவந்தியம் அருகே பிரபல ரவுடி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிணற்றில் பிணம்

விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே பகண்டை கூட்டு சாலை ஓடியந்தல் கிராமத்தை சேர்ந்தவர் ராஜி. விவசாயி. இவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் நேற்று மாலை சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் கழுத்து அறுபட்ட நிலையில் பிணமாக மிதந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ராஜி, பகண்டை கூட்டு சாலை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற் கு விரைந்து சென்றனர். அங்கு கிணற்றில் பிணமாக மிதந்த, உடலை பொதுமக்கள் உதவியுடன் மீட்டு, விசாரணை நடத்தினர்.

கொலை செய்யப்பட்டவர் ரவுடி

விசாரணையில், கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டவர் ஓடியந்தல் கிராமத்தை சேர்ந்த கண்ணையன் மகன் அருளானந்தபாண்டியன்(வயது 50) என்பதும், பல்வேறு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடைய பிரபல ரவுடி என்பதும் தெரியவந்தது.

இது குறித்த தகவலின் பேரில் அருளானந்தபாண்டியன் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு கழுத்து அறுபட்ட நிலையில் பிணமாக கிடந்த அருளானந்த பாண்டியனின் உடலை பார்த்து கதறி அழுதனர். பிரபல ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவம் காட்டுத்தீ போல, அப்பகுதி முழுவதும் பரவியது. எனவே கொலை செய்யப்பட்டு கிடந்த இடத்தில் பொதுமக்கள் ஏராளமானோர் கூடினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்

இதையடுத்து அருளானந்தபாண்டியனின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து அருளானந்தபாண்டியன் கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணையை தொடங்கினர். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

கழுத்தை அறுத்து படு கொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி அருளானந்த பாண்டியன் மீது, நிலத்தகராறு காரணமாக பக்கத்து வீட்டை சேர்ந்த விவசாயி கண்ணன் என்பவரை கடந்த 23-9-2009 அன்று கொலை செய்தது, குடிபோதை தகராறில் கடந்த 14-10-2010 அன்று அரியலூர் கிராமத்தை சேர்ந்த புகைப்படகலைஞர் பீட்டர் என்பவரை கொலை செய்தது ஆகிய 2 வழக்குகளும் பகண்டை கூட்டு சாலை போலீஸ் நிலையத்திலும், புதுச்சேரி போலீஸ் நிலையத்தில் ஒரு கொலை வழக்கும், வடபொன்பரப்பி போலீஸ் நிலையத்தில் நகை அடகு கடைக்காரர் சீனுவாசனை கடத்த முயன்ற வழக்கும், மோட்டார் சைக்கிள் திருட்டு, வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட 7 வழக்குகளும், சங்கராபுரம், திருக்கோவிலூர், செஞ்சி, புதுச்சேரி போலீஸ் நிலையங்களில் கொலை, கொள்ளை, அடிதடி வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

காரணம் என்ன?

மேலும் இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதால் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் பகண்டை கூட்டு சாலை போலீசாரால் கடந்த 18-11-2009 அன்று குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து ஓராண்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சிறை தண்டனையை அனுபவித்து விட்டு வெளியே வந்த அருளானந்தபாண்டியன் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தார்.

எனவே அவரது செயலால் பாதிக்கப்பட்டவர்கள் யாரேனும் அருளானந்த பாண்டியனின் தலையில் தாக்கி, கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, பிணத்தை கிணற்றில் வீசி சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே அது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மர்ம கும்பலுக்கு வலைவீச்சு

இந்த கொலை சம்பவம் குறித்த புகாரின் பேரில் பகண்டை கூட்டு சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, அருளானந்த பாண்டியனை கொலை செய்து விட்டு, பிணத்தை கிணற்றில் வீசி சென்ற மர்ம கும்பலை தேடி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட அருளானந்தபாண்டியனுக்கு மீரா(45) என்ற மனைவியும், சிந்துஜா(21) என்ற மகளும், கார்த்தி(19) என்ற மகனும் உள்ளனர்.