Tuesday, November 18, 2014
3 ஏழைகளின் மருத்துவ சிகிச்சைக்காக தனது 40வது மாத ஊதியத்தை அளித்த அதிமுக எம்.எல்.ஏ காமராஜ்கரூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராயபுரம் சட்டசபைத் தொகுதி உறுப்பினராக தேர்ந்தெடுக்கபட்டவர் அதிமுகவைச் சேர்ந்த காமராஜ். இவர் உறுப்பினராக தேர்ந்தெடுக்கபட்டதிலிருந்து தனது எம்.எல்.ஏ. பதவிக்கான மாதச் சம்பளத்தை ஒவ்வொரு மாதமும் கரூர் மாவட்டதிற்குட்பட்ட பகுதியில் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மாணவர்கள், கட்சியின் மூத்த உறுப்பினர்கள், மாநிலத்தில் முதலிடம் பிடித்த ஏழை மாணவனின் மருத்துவபடிப்புக்கு ஊக்கநிதி, மனநலம் பாதித்த குழந்தைகளுக்கான உதவி என மாதா மாதம் வழங்கி வருகிறார்.
இடையில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டபோது தனது மாதச் சம்பளத்தை கோவில்களுக்கும், பிறவற்றுக்கும் தானமாக அளிக்கவும் செய்தார்.இந்த நிலையில், இன்று ஆத்தூரில் வசிக்கும் சுகன்யா என்பவருக்கு ஹிரண்யா அறுவை சிகிச்சைக்காகவும், தீபக் என்பவருக்கு மூலநோய் மேல் சிகிச்சைக்காவும், விஜயலட்சுமி என்பவருக்கு புற்றுநோய் மேல் சிகிச்சைக்காவும் தனது 40வது மாத ஊதியத்தை வழங்கி ஆறுதல் தெரிவித்தார் எம்.எல்.ஏ காமராஜ்.
நிதி உதவியை பெற்று கொண்ட பயனாளிகள் தமிழக முதல்வருக்கும், எம்.எல்.ஏவுக்கும் நன்றி தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி அருகே பெருகமணி கிராமத்தில் தஞ்சை டாக்டர். எம். எஸ்.சுவாமிநாதன் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் இறுதியாண்டு மாணவி...
-
திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்ற தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் பீரங்கி சுப்பிரமணியம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரு...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருப்பூரில் அங்கம்மாள் முத்துசாமி நினைவு அறக்கட்டளை சார்பில் பெண் எழுத்தாளர்களுக்கான 2014ம் ஆண்டு இலக்கியப் பரிசுகள் வழங்கப்பட்டன. ...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
திருப்பூர் மாவட்டத்தில் அவினாசி பல்லடம் உடுமலை தாராபுரம் மற்றும் காங்கயம் உட்கோட்டங்களில் விநாயகர் 2014.சதுர்த்தி விழாவினை முன்னிட்ட...
-
குடத்தில் குடிநீர் கொண்டுவர அபாயகரமான கிணற்றில் இறங்கும் பள்ளிச்சிறுமி. பள்ளி செல்ல வேண்டிய குழந்தைகள் குடிநீருக்காக கிணற்றில் இறக்கி...
-
திருச்சிராப்பள்ளி மாவட்டம் முக்கொம்பு அணையிலிருந்து பிரியும் பெருவளை வாய்க்காலில் பாலம் பகுதியிலிருந்து ஒருபக்க கைப்புறச்சுவர் இடிந...
0 comments:
Post a Comment