Wednesday, September 17, 2014
விழுப்புரம் மாவட்டம் முழுவதும் இடி, மின்னலுடன் கன மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக செஞ்சியில் 57 மில்லிமீட்டர் மழை பதிவானது.
வெப்பச்சலனம்
விழுப்புரத்தில் கடந்த சில நாட்களாக மிதமான மழை பெய்து வருகின்றது. இந்நிலையில், வெப்பசலனம் காரணமாக கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படி நேற்று முன்தினம் இரவு விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. விழுப்புரத்தில் நேற்று முன்தினம் காலை முதல் மாலை வரையிலும் வானம் மழைக்கான அறிகுறி எதுவும் இன்றி தெளிவாக காணப்பட்டது. பின்னர் மாலை 7 மணி அளவில் பலத்த காற்று வீசியது. அதனை தொடர்ந்து லேசான மழை பெய்தது. தொடர்ந்து இடி-மின்னலுடன் கன மழை கொட்டியது. திடீர் மழையை எதிர்பார்க்காத சிலர் ஒதுங்க இடமின்றி நனைந்தபடிசென்றதை காணமுடிந்தது. தாழ்வான சாலைகளில் மழை நீர் தேங்கியது. இதனால் பிரதான சாலைகளில் வழக்கமாக செல்வதை காட்டிலும் வாகனங்கள் மிதமான வேகத்திலேயே சென்றது.
சுவர் இடிந்து விழுந்தது
இந்த கனமழையின் காரணமாக விழுப்புரம் கே.கே.ரோடு, பூந்தமல்லி தெரு, நேருஜி ரோடு ஆகியவற்றில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியதை காணமுடிந்தது. மேலும் கீழ்பெரும்பாக்கம் ரெயில்வே சுரங் கப்பாதையில் வெள்ள நீர் தேங்கி குளம் போல் காட்சியளித்தது. தாழ்வான பகுதியான மணி நகரில் சுமார் 50-க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும் நேருஜி சாலையில் கனமழைக்கு பொதுபணித்துறை அலுவலக மதில்சுவரானது இடிந்து விழுந்தது. நேற்று காலை 8.30 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த மழை அளவின் விபரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
வெப்பச்சலனம்
விழுப்புரத்தில் கடந்த சில நாட்களாக மிதமான மழை பெய்து வருகின்றது. இந்நிலையில், வெப்பசலனம் காரணமாக கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படி நேற்று முன்தினம் இரவு விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. விழுப்புரத்தில் நேற்று முன்தினம் காலை முதல் மாலை வரையிலும் வானம் மழைக்கான அறிகுறி எதுவும் இன்றி தெளிவாக காணப்பட்டது. பின்னர் மாலை 7 மணி அளவில் பலத்த காற்று வீசியது. அதனை தொடர்ந்து லேசான மழை பெய்தது. தொடர்ந்து இடி-மின்னலுடன் கன மழை கொட்டியது. திடீர் மழையை எதிர்பார்க்காத சிலர் ஒதுங்க இடமின்றி நனைந்தபடிசென்றதை காணமுடிந்தது. தாழ்வான சாலைகளில் மழை நீர் தேங்கியது. இதனால் பிரதான சாலைகளில் வழக்கமாக செல்வதை காட்டிலும் வாகனங்கள் மிதமான வேகத்திலேயே சென்றது.
சுவர் இடிந்து விழுந்தது
இந்த கனமழையின் காரணமாக விழுப்புரம் கே.கே.ரோடு, பூந்தமல்லி தெரு, நேருஜி ரோடு ஆகியவற்றில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியதை காணமுடிந்தது. மேலும் கீழ்பெரும்பாக்கம் ரெயில்வே சுரங் கப்பாதையில் வெள்ள நீர் தேங்கி குளம் போல் காட்சியளித்தது. தாழ்வான பகுதியான மணி நகரில் சுமார் 50-க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும் நேருஜி சாலையில் கனமழைக்கு பொதுபணித்துறை அலுவலக மதில்சுவரானது இடிந்து விழுந்தது. நேற்று காலை 8.30 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த மழை அளவின் விபரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
-
3 ஏழைகளின் மருத்துவ சிகிச்சைக்காக தனது 40வது மாத ஊதியத்தை அளித்த அதிமுக எம்.எல்.ஏ காமராஜ் கரூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராயபுரம் சட்டசபைத...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருப்பூர் மாவட்டம் திருப்பூர் மற்றும் பல்லடம் வட்ட பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள் திறப்பு நிகழ்ச்சி...
-
பொது நல வழக்கறிஞர் வேங்கை ராஜாவின் பிறந்த நாள் எளிமையான முறையில் கொண்டாடப்பட்டது பொதுநல வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான ஆர் வேங்கை ராஜாவின் பி...

0 comments:
Post a Comment