Wednesday, September 17, 2014
விழுப்புரம் மாவட்டம் முழுவதும் இடி, மின்னலுடன் கன மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக செஞ்சியில் 57 மில்லிமீட்டர் மழை பதிவானது.
வெப்பச்சலனம்
விழுப்புரத்தில் கடந்த சில நாட்களாக மிதமான மழை பெய்து வருகின்றது. இந்நிலையில், வெப்பசலனம் காரணமாக கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படி நேற்று முன்தினம் இரவு விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. விழுப்புரத்தில் நேற்று முன்தினம் காலை முதல் மாலை வரையிலும் வானம் மழைக்கான அறிகுறி எதுவும் இன்றி தெளிவாக காணப்பட்டது. பின்னர் மாலை 7 மணி அளவில் பலத்த காற்று வீசியது. அதனை தொடர்ந்து லேசான மழை பெய்தது. தொடர்ந்து இடி-மின்னலுடன் கன மழை கொட்டியது. திடீர் மழையை எதிர்பார்க்காத சிலர் ஒதுங்க இடமின்றி நனைந்தபடிசென்றதை காணமுடிந்தது. தாழ்வான சாலைகளில் மழை நீர் தேங்கியது. இதனால் பிரதான சாலைகளில் வழக்கமாக செல்வதை காட்டிலும் வாகனங்கள் மிதமான வேகத்திலேயே சென்றது.
சுவர் இடிந்து விழுந்தது
இந்த கனமழையின் காரணமாக விழுப்புரம் கே.கே.ரோடு, பூந்தமல்லி தெரு, நேருஜி ரோடு ஆகியவற்றில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியதை காணமுடிந்தது. மேலும் கீழ்பெரும்பாக்கம் ரெயில்வே சுரங் கப்பாதையில் வெள்ள நீர் தேங்கி குளம் போல் காட்சியளித்தது. தாழ்வான பகுதியான மணி நகரில் சுமார் 50-க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும் நேருஜி சாலையில் கனமழைக்கு பொதுபணித்துறை அலுவலக மதில்சுவரானது இடிந்து விழுந்தது. நேற்று காலை 8.30 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த மழை அளவின் விபரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
வெப்பச்சலனம்
விழுப்புரத்தில் கடந்த சில நாட்களாக மிதமான மழை பெய்து வருகின்றது. இந்நிலையில், வெப்பசலனம் காரணமாக கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படி நேற்று முன்தினம் இரவு விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. விழுப்புரத்தில் நேற்று முன்தினம் காலை முதல் மாலை வரையிலும் வானம் மழைக்கான அறிகுறி எதுவும் இன்றி தெளிவாக காணப்பட்டது. பின்னர் மாலை 7 மணி அளவில் பலத்த காற்று வீசியது. அதனை தொடர்ந்து லேசான மழை பெய்தது. தொடர்ந்து இடி-மின்னலுடன் கன மழை கொட்டியது. திடீர் மழையை எதிர்பார்க்காத சிலர் ஒதுங்க இடமின்றி நனைந்தபடிசென்றதை காணமுடிந்தது. தாழ்வான சாலைகளில் மழை நீர் தேங்கியது. இதனால் பிரதான சாலைகளில் வழக்கமாக செல்வதை காட்டிலும் வாகனங்கள் மிதமான வேகத்திலேயே சென்றது.
சுவர் இடிந்து விழுந்தது
இந்த கனமழையின் காரணமாக விழுப்புரம் கே.கே.ரோடு, பூந்தமல்லி தெரு, நேருஜி ரோடு ஆகியவற்றில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியதை காணமுடிந்தது. மேலும் கீழ்பெரும்பாக்கம் ரெயில்வே சுரங் கப்பாதையில் வெள்ள நீர் தேங்கி குளம் போல் காட்சியளித்தது. தாழ்வான பகுதியான மணி நகரில் சுமார் 50-க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும் நேருஜி சாலையில் கனமழைக்கு பொதுபணித்துறை அலுவலக மதில்சுவரானது இடிந்து விழுந்தது. நேற்று காலை 8.30 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த மழை அளவின் விபரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...

0 comments:
Post a Comment