Wednesday, September 17, 2014
வேலூர் மாவட்ட தி.மு.க. செயலாளராக உள்ள முன்னாள் எம்.எல்.ஏ, ஆர்.காந்தி, ராணிப்பேட்டையில் வசித்து வருகிறார். இவருக்கு உதவியாளராக ராணிப்பேட்டையை சேர்ந்த பாலாஜி பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை பாலாஜியின் அண்ணன் தியாகராஜன் என்பவரின் செல்போனுக்கு யாரோ ஒருவர் பேசினார்.
தியாகராஜன் பேசிய போது, எதிர்முனையில் பேசியவர், ‘‘உன் தம்பி பாலாஜியை இன்று இரவிற்குள் கொலை செய்து விடுவார்கள்’’ என கூறியுள்ளார். போனில் பேசிய நபரை நீயார் என கேட்டதற்கு, ‘‘எனக்கு பாலாஜியை தெரியும், பாலாஜிக்கும் என்னை தெரியும் பாலாஜியைத்தான் தொடர்பு கொள்ள முயன்றேன் அவர் போனை எடுக்கவில்லை’’ என கூறியுள்ளார்.
கொலை செய்வதற்கு பாலாஜி என்ன செய்தார் என கேட்டதற்கு போனில் பேசிய மர்ம நபர் மீண்டும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
மர்ம நபரின் இந்த மிரட்டல் தொடர்பாக தியாகராஜன் நேற்று முன்தினம் ராணிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். புகாரின் பேரில் ராணிப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து செப்.9-இல் கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப் போவதாக கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு அறிவித்துள...
-
கரூரில் 2 இடத்தில் "ஏஸி' நிழற்கூடம் அவசியம் இல்லை என அதிருப்தி கரூர் மாவட்டத்தில், 24 லட்சம் மதிப்பில், இரு இடங்களில்"ஏ...

0 comments:
Post a Comment