Wednesday, December 21, 2016

On Wednesday, December 21, 2016 by Unknown in ,    
திருப்பூர்
திருப்பூரில் இரட்டை கொலை வழக்கில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்து, 3½ ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
இரட்டை கொலைதிருப்பூர் முதலிபாளையம் சிட்கோ அருகே உள்ள மானூர் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவருடைய மனைவி வள்ளியம்மாள். பழனிச்சாமியின் தம்பி மனோகரனின் மகன்கள் மகேஸ்வரன், ரகுவரன்(வயது 39). பழனிச்சாமி குடும்பத்துக்கும், அவருடைய தம்பி மனோகரனின் குடும்பத்துக்கும் இடையே சொத்துத்தகராறு இருந்து வந்துள்ளது.
கடந்த 21–1–2010 அன்று ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த மனோகரனின் மகன்கள் மகேஸ்வரன், ரகுவரன் ஆகியோர் தங்களது பெரியப்பா பழனிச்சாமி, பெரியம்மா வள்ளியம்மாள் ஆகியோரை தாக்கி கொலை செய்ததாக தெரிகிறது. இது குறித்த புகாரின் பேரில் திருப்பூர் ஊரக போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேஸ்வரன், ரகுவரன் ஆகியோரை கைது செய்தனர்.
3½ ஆண்டுகளாக தலைமறைவுஇதுதொடர்பான வழக்கு திருப்பூர் 2–வது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கடந்த 3½ ஆண்டுகளுக்கு முன்னர் சிறையில் இருந்த அண்ணன், தம்பி இருவரும் ஜாமீனில் வெளியே வந்தனர். இவர்களில் மகேஸ்வரன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.
ஜாமீனில் வந்த ரகுவரன் வழக்கு விசாரணைக்கு கோர்ட்டில் ஆஜராகாமல் கடந்த 3½ ஆண்டாக தலைமறைவாக இருந்தார். இதனால் வழக்கு விசாரணை பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ரகுவரனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசாருக்கு நீதிபதி ஜியாவுதீன் உத்தரவிட்டார். அதன்பேரில், போலீசார் தனிப்படை அமைத்து ரகுவரனை தேடி வந்தனர். இந்தநிலையில் திருப்பூர் காசிப்பாளையம் பகுதியில் போலீசார் நேற்று காலை ரோந்து பணியில ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்தவழியாக ரகுவரன் நடந்து வந்து கொண்டிருந்தார். ரகுவரனை பார்த்த போலீசார் அவரை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

0 comments: