Wednesday, December 21, 2016

On Wednesday, December 21, 2016 by Unknown in ,    
திருப்பூர்
வாங்கிய கடனுக்கு தங்களுடைய நிலத்தை அபகரித்து தனியார் நிதி நிறுவனத்தினர் மோசடி செய்து விட்டதாக புகார் தெரிவித்தும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு தாய், மகன் தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தீக்குளிக்க முயற்சிதிருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை கலெக்டர் எஸ்.ஜெயந்தி தலைமையில் நடைபெற்றது. பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்கள் மூலமாக கலெக்டரிடம் தெரிவித்தனர். அவினாசி ஈட்டிவீரம்பாளையம் மொய்யாண்டாம்பாளையத்தை சேர்ந்த விவசாயி சண்முகசுப்பிரமணியம்(வயது 65), அவருடைய மனைவி ருக்குமணி(60), மகன் செந்தில்குமார்(45) ஆகியோர் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். திடீரென்று கலெக்டர் அலுவலகம் முன்பு ருக்குமணியும், செந்தில்குமாரும் மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உடனடியாக அவர்களை தடுத்து நிறுத்தி மண்எண்ணெய் கேன் மற்றும் தீப்பெட்டியை அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்தனர். இதனால் அங்கு பெரும்பரபரப்பு ஏற்பட்டது.
சம்பவம் இடத்துக்கு வந்த வீரபாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் ருக்குமணி, சண்முகசுப்பிரமணியம், செந்தில்குமார் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார்கள். பின்னர் ருக்குமணி கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:–
நிலத்தை அடமானம் வைத்து கடன்மொய்யாண்டாம்பாளையத்தில் எனது கணவருக்கு 5.35 ஏக்கர் நிலம், அதில் ஒரு வீடும் உள்ளது. எனது மூத்த மகனான செந்தில்குமாருக்கு தொழில் செய்ய பணம் தேவைப்பட்டதால் வீட்டை அடமானம் வைத்து ரூ.20 லட்சம் கடன் பெற திட்டமிட்டோம். இதற்காக திருப்பூர் டூம்லைட் மைதானத்தில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்துக்கு கடந்த 18–3–2013 அன்று சென்று அங்கிருந்த பிரகாஷ், கோவிந்தராஜ், தியாகராஜ் ஆகியோரை சந்தித்தோம்.
எங்களுடைய 35 சென்ட் அளவுள்ள இடத்தில் இருக்கும் வீட்டை அடமானமாக வைத்து கடன் தொகை கேட்டதற்கு அவர்கள் ரூ.13 லட்சம் மட்டுமே கடன் தருவதாக கூறினார்கள். இதைத்தொடர்ந்து 20–6–2013 அன்று பத்திரத்தை அடமானமாக வைத்தோம். எங்களுடைய உண்மை பத்திரத்தை பெற்று ரூ.13 லட்சத்தை வட்டிக்கு கொடுத்தனர். எங்களுடைய உண்மை பத்திரம் 5.35 ஏக்கர் நிலத்தையும் சேர்ந்து இருந்தது. 3 ஆண்டுகளாக வட்டி சரியாக கட்டி வந்தோம். கடந்த 3 மாதங்களாக எங்களால் வட்டி கட்ட முடியவில்லை.
நடவடிக்கை எடுக்க வேண்டும்இந்தநிலையில் கடந்த நவம்பர் மாதம் 2–ந் தேதி எங்களுடைய நிலத்தின் கிரைய நகலை பார்த்தபோது அது பிரகாஷ் என்பவர் பெயரில் கிரையம் செய்திருப்பதை அறிந்தோம். இது தொடர்பாக திருப்பூர் ஆர்.டி.ஓ.விடம் மனு கொடுத்தோம். அதன்பின்னர் கோவிந்தராஜ், பிரகாஷ் மற்றும் ஆளுங்கட்சியை சேர்ந்த கண்ணப்பன் உள்பட 200–க்கும் மேற்பட்டவர்கள் எங்கள் நிலத்துக்குள் வேலி போடுவதற்காக வந்தனர். அப்போது தடுக்கச்சென்ற எங்களை தாக்க முயன்றனர். இதுகுறித்து பெருமாநல்லூர் போலீஸ்நிலையத்தில் புகார் கொடுத்தோம். இந்த நிலையில் கடந்த 16–ந் தேதி எங்கள் வீட்டுக்கு செல்லும் பாதையை அடைத்து விட்டனர். எங்கள் நிலத்தை மோசடியாக அபகரிப்பு செய்த பிரகாஷ், கோவிந்தராஜ், தியாகராஜ் ஆகியோர் மீதும், தாக்குதல் நடத்தியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

0 comments: