Wednesday, April 26, 2017
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும், விவசாயிகள் வங்கியில் வாங்கிய பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள். விவசாயிகளுக்கு ஆதரவாக அனைத்துக்கட்சிகள் சார்பில் நேற்று திருப்பூரில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது.
பனியன் தொழில் நகரான திருப்பூரில் முழு அடைப்பு போராட்டத்துக்கு திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கமான டீமா சங்கம் ஆதரவு தெரிவித்திருந்தன. மேலும் அனைத்து தொழிற்சங்கத்தினரும் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். முழு அடைப்பு போராட்டத்தையொட்டி நேற்றுகாலை திருப்பூரில் உள்ள பெரும்பாலான பின்னலாடை நிறுவனங்கள் மூடப்பட்டன. தொழிலாளர்கள் பணிக்கு செல்லவில்லை. இதன் காரணமாக பனியன் உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டன.
ரூ.85 கோடி
உற்பத்தி பாதிப்பு
பின்னலாடை தொழில் சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள், சாயப்பட்டறைகள், நிட்டிங் நிறுவனங்களும் நேற்று செயல்படவில்லை. பின்னலாடை தொழில் சார்ந்த 90 சதவீத நிறுவனங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றன. தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டதால் அந்த பகுதிகள் தொழிலாளர்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன. ஒரு சில பனியன் ஏற்றுமதி நிறுவனங்கள் மட்டும் ஆர்டர்களின் அவசரம் கருதி செயல்பட்டன. சில நிறுவனங்களில் வெளிமாநில தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டனர்.
திருப்பூர் காதர்பேட்டையில் உள்ள இரண்டாம் தர பின்னலாடை விற்பனை கடைகள் அனைத்தும் மூடப்பட்டதால் பனியன் விற்பனை பாதிக்கப்பட்டது. நேற்று நடந்த முழு அடைப்பு போராட்டம் காரணமாக திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி ரூ.85 கோடிக்கு பாதிக்கப்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
-
3 ஏழைகளின் மருத்துவ சிகிச்சைக்காக தனது 40வது மாத ஊதியத்தை அளித்த அதிமுக எம்.எல்.ஏ காமராஜ் கரூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராயபுரம் சட்டசபைத...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருப்பூர் மாவட்டம் திருப்பூர் மற்றும் பல்லடம் வட்ட பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள் திறப்பு நிகழ்ச்சி...
-
பொது நல வழக்கறிஞர் வேங்கை ராஜாவின் பிறந்த நாள் எளிமையான முறையில் கொண்டாடப்பட்டது பொதுநல வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான ஆர் வேங்கை ராஜாவின் பி...

0 comments:
Post a Comment