Wednesday, April 26, 2017
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும், விவசாயிகள் வங்கியில் வாங்கிய பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள். விவசாயிகளுக்கு ஆதரவாக அனைத்துக்கட்சிகள் சார்பில் நேற்று திருப்பூரில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது.
பனியன் தொழில் நகரான திருப்பூரில் முழு அடைப்பு போராட்டத்துக்கு திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கமான டீமா சங்கம் ஆதரவு தெரிவித்திருந்தன. மேலும் அனைத்து தொழிற்சங்கத்தினரும் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். முழு அடைப்பு போராட்டத்தையொட்டி நேற்றுகாலை திருப்பூரில் உள்ள பெரும்பாலான பின்னலாடை நிறுவனங்கள் மூடப்பட்டன. தொழிலாளர்கள் பணிக்கு செல்லவில்லை. இதன் காரணமாக பனியன் உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டன.
ரூ.85 கோடி
உற்பத்தி பாதிப்பு
பின்னலாடை தொழில் சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள், சாயப்பட்டறைகள், நிட்டிங் நிறுவனங்களும் நேற்று செயல்படவில்லை. பின்னலாடை தொழில் சார்ந்த 90 சதவீத நிறுவனங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றன. தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டதால் அந்த பகுதிகள் தொழிலாளர்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன. ஒரு சில பனியன் ஏற்றுமதி நிறுவனங்கள் மட்டும் ஆர்டர்களின் அவசரம் கருதி செயல்பட்டன. சில நிறுவனங்களில் வெளிமாநில தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டனர்.
திருப்பூர் காதர்பேட்டையில் உள்ள இரண்டாம் தர பின்னலாடை விற்பனை கடைகள் அனைத்தும் மூடப்பட்டதால் பனியன் விற்பனை பாதிக்கப்பட்டது. நேற்று நடந்த முழு அடைப்பு போராட்டம் காரணமாக திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி ரூ.85 கோடிக்கு பாதிக்கப்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
திருச்சி திருச்சி ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத் துறை சார்பில் ஊராட்சி பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருச்சி ஜோ...
-
சிங்கவால் குரங்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மட்டும் வாழ்ந்து வரக்கூடிய குரங்கினமாகும். வால்பாறை பகுதியில் அய்யர்பாடி, ரொட்டிக்கடை,...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
.திருச்சி பெங்களூரில் இருந்து சிறப்பு விமானம் மூலம் பயணிகள் திருச்சி வருகை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு கர்நாடகா மாநிலம் பெங்களூரி...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
0 comments:
Post a Comment