Wednesday, April 26, 2017
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஊழியர் சங்கங்களின் போராட்டக்குழு சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்தம் நேற்று திருப்பூரில் நடந்தது. புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்சன் திட்டத்தை அனைவருக்கும் அமல்படுத்த வேண்டும், 8–வது ஊதிய மாற்றம் குறித்து சங்கங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி ஊதிய பகிர்வை வழங்க வேண்டும், 20 சதவீத இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்.
சத்துணவு, அங்கன்வாடி ஊழியர், வருவாய் கிராம உதவியாளர், ஊராட்சி செயலாளர், ஊர்ப்புற நூலகர் உள்ளிட்டவர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியத்தை ஒழித்து வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம், சட்டப்பூர்வ ஓய்வூதியம் வழங்க வேண்டும், தொகுப்பூதியம், மதிப்பூதியம், தினக்கூலி முறையிலான பணி நியமனங்களை ரத்து செய்து காலியாக உள்ள பணியிடத்தை காலமுறை ஊதியத்தில் ஊழியர்களை பணியமர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
இதன்தொடர்ச்சியாக அரசு ஊழியர் சங்கத்தின் திருப்பூர் வடக்கு மற்றும் திருப்பூர் தெற்கு வட்ட கிளைகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று மதியம் கலெக்டர் அலுவலகம் முன் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு திருப்பூர் தெற்கு வட்டக்கிளை தலைவர் பால்ராஜ் தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அம்சராஜ் கோரிக்கைகள் குறித்து பேசினார். இதில் கிராம சுகாதார செவிலியர்கள் சங்கம், சத்துணவு ஊழியர் சங்கம், வணிகவரி பணியாளர்கள் சங்கம், சாலைப்பணியாளர்கள் சங்கம், அங்கன்வாடி மற்றும் உதவியாளர் சங்கத்தினர் கலந்துகொண்டனர்.
அரசு ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், தாசில்தார் அலுவலகங்கள், கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களில் ஊழியர்கள் பெரும்பாலானவர்கள் நேற்று பணிக்கு வரவில்லை. இதனால் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. உதவியாளர் முதல் ஒன்றிய ஆணையாளர்கள், தாசில்தார் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் வரை வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனர்.
பணிகள் பாதிப்பு
இதேபோல் அரசு ஊழியர் சங்கம் அவினாசி வட்டக்கிளை சார்பில் அவினாசி தாசில்தார் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு ஊராட்சி செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார். இதில் அரசு ஊழியர்கள் கலந்துகொண்டனர். மாவட்டத்தில் உள்ள அந்தந்த வட்டக்கிளைகளிலும் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் சுமார் 8 ஆயிரம் பேர் பணியாற்றி வருகிறார்கள். நேற்று தொடங்கிய காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் 3 ஆயிரத்து 500–க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றதாக தெரிவித்தனர். இந்த வேலைநிறுத்த போராட்டம் காரணமாக மாவட்டத்தில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, சத்துணவுத்துறை, கருவூலத்துறை, வேளாண்மைத்துறை பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. இன்று (புதன்கிழமை) 2–வது நாளாக அரசு ஊழியர்கள் சார்பில் அந்தந்த வட்டக்கிளைகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி திருச்சி ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத் துறை சார்பில் ஊராட்சி பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருச்சி ஜோ...
-
சிங்கவால் குரங்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மட்டும் வாழ்ந்து வரக்கூடிய குரங்கினமாகும். வால்பாறை பகுதியில் அய்யர்பாடி, ரொட்டிக்கடை,...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
.திருச்சி பெங்களூரில் இருந்து சிறப்பு விமானம் மூலம் பயணிகள் திருச்சி வருகை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு கர்நாடகா மாநிலம் பெங்களூரி...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
0 comments:
Post a Comment