Wednesday, April 26, 2017
கோடநாடு எஸ்டேட் காவலாளியை கொன்ற கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா கூறினார். இதுகுறித்து நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா கூறியதாவது:–
கொலை
கோடநாடு எஸ்டேட்டுக்கு வாகனங்களில் சென்ற கும்பல் 10–வது நுழைவு வாயிலில் பணியில் இருந்த நேபாள நாட்டை சேர்ந்த காவலாளி ஓம் பகதூரை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். அவருடன் பணியில் இருந்த மற்றொரு காவலாளி கிருஷ்ண பகதூரை கத்தியால் வெட்டி தாக்குதல் நடத்தி உள்ளனர்.
பின்னர் அந்த கும்பல் பங்களாவின் கதவை உடைக்க முடியாததால் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். அதற்குள் சத்தம் கேட்டு ஊழியர்கள் அங்கு திரண்டதால், கொலையாளிகள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
5 தனிப்படைகள் அமைப்பு
இது தொடர்பாக சம்பவ இடத்துக்கு 15 மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டுள்ளது. கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். கொள்ளை முயற்சியில் இந்த கொலை நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். மேலும் ஆவணங்களை திருடிச்சென்றுள்ளனரா? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. ஆனால் எஸ்டேட்டுக்குள் இருந்து எந்த பொருளும் திருட்டு போகவில்லை. இந்த சம்பவங்கள் கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களுக்கு சென்று விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
உடுமலை,உடுமலை நகராட்சி வாரச்சந்தையை புதுப்பொலிவுபெறும் வகையில் புனரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், அ...
-
இளமை பருவத்தை நான் அனுபவித்தில்லை. அப்போதும் இசையில்தான் நேரத்தை செலவிட்டேன் என்றார் ஏ.ஆர்.ரகுமான்.இதுபற்றி அவர் கூறியதாவது:...
-
ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் தன்னாட்சிக் கல்லூரி இருபத்தி மூன்றாம் ஆண்டு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரி செயலர...
-
வைகை அணையில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால், இன்னும் இரு மாதங்களுக்கு மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யக் கூடிய நிலை ஏற்பட்டிருக்கிறத...
-
திருச்சி மன்னார்புரத்தில் முன்னாள் வேலைவாய்ப்பு அலுவலகம் இயங்கி வந்த இடத்தில் எல்பின் என்கிற மோசடி நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இ...
-
அம்மா மக்கள் முன்னேற்ற கழக திருச்சி நாடாளுமன்ற வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆஸ்ரமத்தின் 12-வது ஜீயர் ஸ்ரீவ...
-
சத்தி வனப்பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால், பெருக்கெடுத்து ஓடும் வன ஓடைகளில் யானைகள் குளித்து கும்மாளம் போடுகின சத்தியமங்கலம் புலிகள் கா...
0 comments:
Post a Comment