Wednesday, April 26, 2017
கோடநாடு எஸ்டேட் காவலாளியை கொன்ற கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா கூறினார். இதுகுறித்து நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா கூறியதாவது:–
கொலை
கோடநாடு எஸ்டேட்டுக்கு வாகனங்களில் சென்ற கும்பல் 10–வது நுழைவு வாயிலில் பணியில் இருந்த நேபாள நாட்டை சேர்ந்த காவலாளி ஓம் பகதூரை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். அவருடன் பணியில் இருந்த மற்றொரு காவலாளி கிருஷ்ண பகதூரை கத்தியால் வெட்டி தாக்குதல் நடத்தி உள்ளனர்.
பின்னர் அந்த கும்பல் பங்களாவின் கதவை உடைக்க முடியாததால் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். அதற்குள் சத்தம் கேட்டு ஊழியர்கள் அங்கு திரண்டதால், கொலையாளிகள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
5 தனிப்படைகள் அமைப்பு
இது தொடர்பாக சம்பவ இடத்துக்கு 15 மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டுள்ளது. கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். கொள்ளை முயற்சியில் இந்த கொலை நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். மேலும் ஆவணங்களை திருடிச்சென்றுள்ளனரா? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. ஆனால் எஸ்டேட்டுக்குள் இருந்து எந்த பொருளும் திருட்டு போகவில்லை. இந்த சம்பவங்கள் கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களுக்கு சென்று விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...

0 comments:
Post a Comment