Wednesday, April 26, 2017

On Wednesday, April 26, 2017 by Unknown in ,    






ஊராட்சி செயலாளர்களுக்கு இளநிலை உதவியாளருக்கு இணையான காலமுறை ஊதியத்தை அரசு கருவூலத்தில் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அவினாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் ஊராட்சி செயலாளர்கள் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம் நடத்தினார்கள். ஊராட்சி செயலாளர் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் நடராஜ் தலைமையில் நடந்த போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பரமேஸ்வரன் முன்னிலைவகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராமச்சந்திரன் விளக்க உரையாற்றினார். காங்கேயம், ஊத்துக்குளி,திருப்பூர் அவினாசி உள்ளிட்ட ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி செயலாளர்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டனர்

0 comments: