Monday, April 24, 2017
கெனோஷா(யு.எஸ்): விஸ்கான்ஸின் மாநிலத்தின் கெனோஷா நகரில் ஸ்னாப் ஆன் டூல்ஸ் நிறுவன நிகழ்ச்சியில் அதிபர் ட்ரம்ப் பங்கேற்றார். அங்கிருந்தவாறே புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அமெரிக்கப் பொருட்களை வாங்குவோம், அமெரிக்கர்களை வேலையில் அமர்த்துவோம் (Buy American Hire American) என்று இந்த புதிய உத்தரவுக்கு பெயரிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு மூலம் தனியார் நிறுவனங்களுக்கோ, தனி நபருக்கோ அமெரிக்கப் பொருட்களைத் தான் வாங்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அமெரிக்க அரசுத் துறையில் வாங்கப்படும் பொருட்களுக்கு , அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை வாங்க நிர்ப்பந்திக்கப்படும் ஒவ்வொரு துறையிலும் , அனைத்து பிரிவுகளிலும் பின்பற்றப்படும் கொள்முதல் கொள்கைகளை மறு ஆய்வு செய்து அமெரிக்க பொருட்களை வாங்குவதற்கு ஏற்றவாறு மாற்றம் செய்யப்படும். அமெரிக்க அரசு காண்ட்ராக்டர்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும். அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் ஸ்டீல்களையே, அரசுத் துறை கட்டுமானப் பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும். ஹெச் 1 பி விசா கண்காணிப்பு குடியுரிமைத் துறை சார்பில் ஏற்கனவே கள ஆய்வுகள் மூலம் ஹெச் 1 பி விசா முறைகேடுகளை கண்டறிய துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. (ஒன் இந்தியா செய்தியைப் பார்க்க) அரசு சார்பிலும் ஹெச் 1 பி விசா முறைகேடுகளை தடுத்து நிறுத்த , சம்மந்தப்பட்ட துறைகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் பேசிய ட்ரம்ப் ஹெச்1 பி விசாவில் நடைபெற்று வரும் முறைகேடுகள் பற்றி கூறினார். அமெரிக்காவில் தகுதி வாய்ந்த உயர் தொழில் நுட்ப வல்லுனர்கள் கிடைக்காத பட்சத்தில் மட்டுமே வெளி நாட்டிலிருந்து ஹெச் 1 பி விசா மூலம் ஊழியர்களை பணியில் அமர்த்த வேண்டும். தற்போது ஹெச் 1 பி விசாக்கள் , முறைகேடாக குறைந்த ஊதியத்தில் வெளி நாட்டு ஊழியர்களை பணியில் அமர்த்தப் பயன்படுத்தப்படுகின்றன. குறைந்த ஊதியத்தில் வெளி நாட்டிலிருந்து ஹெச் 1 பி விசாவில் வருபவர்களால், அமெரிக்க ஊழியர்களின் வேலை பறிபோகிறது. அது மட்டுமல்லாமல், உயர் தொழில் நுட்ப வல்லுனர்கள் தேவைப்படும் நிறுவன்ங்களால் வெளி நாட்டு ஊழியர்களை பணியில் அமர்த்த முடியவில்லை. சம்மந்தப்பட்ட் அனைத்து துறைகளும் ஹெச் 1 பி விசா முறைகேடுகள் பற்றி தீவிரமாக ஆராய்ந்து தக்க முன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவு மூலம் ட்ரம்ப் கேட்டுள்ளார். ஆனாலும் ஹெச் 1 பி விசா எண்ணிக்கையை குறைப்பது பற்றியோ, புதிய சட்டங்கள் அல்லது சட்ட சீர்திருத்தம் பற்றி ஏதும் குறிப்பிடப் படவில்லை. குறைவான ஊதியத்துடன் ஹெச் 1 பி விசா விண்ணப்பிப்பவர்களுக்கு அனுமதி மறுக்கப்படும் என்று தெரிகிறது.அதே போல் விசாவில் குறிப்பிட்ட ஊதியத்தை வழங்காத நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை பாயும் எனவும் எதிர்பார்க்கப் படுகிறது. தனக்கு வாக்களித்தவர்களுக்க் தான் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றும் வகையில் ட்ரம்பின் சமீபத்திய நடவடிக்கைகள் இருந்து வருகின்றன. அடுத்த அதிபர் தேர்தலை மனதில் வைத்து இப்போதே, ட்ரம்ப் காய் நகர்த்தத் தொடங்கியுள்ளதாகவும் தெரிகிறது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
கொரோனா தடுப்பு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு திருச்சிராப்பள்ளி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் மாண்புமிகு நகராட்சி நிர்வா...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
திருச்சி : மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி பேட்டி : அக்டோர் 7ம் தேதி கூடுதல் மழை பெய்யும் என்பதால் மாவட்டத்தை பொறுத்தவரை வடகிழக்கு எதிர்க...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தினார். தமாக...
-
திருச்சி 10.01.16 திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்க கூட்டு இயக்கம் கண்டன ஆர்பாட்டம் ...
-
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் செயல்பட்டு வந்த பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனம் கடந்த 2011–ம் ஆண்டு சட்ட விரோதமாக கிரானைட் கற்களை வெட்டியதாக ...
-
காவல்துறைக்கு சவாலாக ELFIN சகோதரர்கள் புதுகை சத்தியமூர்த்தியின் அடுத்த வீடியோ. எல்ஃபின் கணக்குகள் முடக்கப்பட்டு இருந்தாலும் த...
-
திருச்சியில் ஜிஎஸ்டி ஆலோசகர்களின் மாநில முகவரி மாநாடு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது நடைப...
-
சமயபுரம் மாரியம்மன் கோவில் திருத்தல வரலாறு கண்ணனூர், கண்ணபுரம், விக்ரமபுரம், மாகாளிபுரம் என்றெல்லாம் அழைக்கப்படும் சமயபுரம் ஸ்ரீமா...
0 comments:
Post a Comment