Showing posts with label உலகம். Show all posts
Showing posts with label உலகம். Show all posts

Monday, April 24, 2017

On Monday, April 24, 2017 by Unknown in ,    




கெனோஷா(யு.எஸ்): விஸ்கான்ஸின் மாநிலத்தின் கெனோஷா நகரில் ஸ்னாப் ஆன் டூல்ஸ் நிறுவன நிகழ்ச்சியில் அதிபர் ட்ரம்ப் பங்கேற்றார். அங்கிருந்தவாறே புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அமெரிக்கப் பொருட்களை வாங்குவோம், அமெரிக்கர்களை வேலையில் அமர்த்துவோம் (Buy American Hire American) என்று இந்த புதிய உத்தரவுக்கு பெயரிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு மூலம் தனியார் நிறுவனங்களுக்கோ, தனி நபருக்கோ அமெரிக்கப் பொருட்களைத் தான் வாங்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அமெரிக்க அரசுத் துறையில் வாங்கப்படும் பொருட்களுக்கு , அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை வாங்க நிர்ப்பந்திக்கப்படும் ஒவ்வொரு துறையிலும் , அனைத்து பிரிவுகளிலும் பின்பற்றப்படும் கொள்முதல் கொள்கைகளை மறு ஆய்வு செய்து அமெரிக்க பொருட்களை வாங்குவதற்கு ஏற்றவாறு மாற்றம் செய்யப்படும். அமெரிக்க அரசு காண்ட்ராக்டர்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும். அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் ஸ்டீல்களையே, அரசுத் துறை கட்டுமானப் பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும். ஹெச் 1 பி விசா கண்காணிப்பு குடியுரிமைத் துறை சார்பில் ஏற்கனவே கள ஆய்வுகள் மூலம் ஹெச் 1 பி விசா முறைகேடுகளை கண்டறிய துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. (ஒன் இந்தியா செய்தியைப் பார்க்க) அரசு சார்பிலும் ஹெச் 1 பி விசா முறைகேடுகளை தடுத்து நிறுத்த , சம்மந்தப்பட்ட துறைகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் பேசிய ட்ரம்ப் ஹெச்1 பி விசாவில் நடைபெற்று வரும் முறைகேடுகள் பற்றி கூறினார். அமெரிக்காவில் தகுதி வாய்ந்த உயர் தொழில் நுட்ப வல்லுனர்கள் கிடைக்காத பட்சத்தில் மட்டுமே வெளி நாட்டிலிருந்து ஹெச் 1 பி விசா மூலம் ஊழியர்களை பணியில் அமர்த்த வேண்டும். தற்போது ஹெச் 1 பி விசாக்கள் , முறைகேடாக குறைந்த ஊதியத்தில் வெளி நாட்டு ஊழியர்களை பணியில் அமர்த்தப் பயன்படுத்தப்படுகின்றன. குறைந்த ஊதியத்தில் வெளி நாட்டிலிருந்து ஹெச் 1 பி விசாவில் வருபவர்களால், அமெரிக்க ஊழியர்களின் வேலை பறிபோகிறது. அது மட்டுமல்லாமல், உயர் தொழில் நுட்ப வல்லுனர்கள் தேவைப்படும் நிறுவன்ங்களால் வெளி நாட்டு ஊழியர்களை பணியில் அமர்த்த முடியவில்லை. சம்மந்தப்பட்ட் அனைத்து துறைகளும் ஹெச் 1 பி விசா முறைகேடுகள் பற்றி தீவிரமாக ஆராய்ந்து தக்க முன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவு மூலம் ட்ரம்ப் கேட்டுள்ளார். ஆனாலும் ஹெச் 1 பி விசா எண்ணிக்கையை குறைப்பது பற்றியோ, புதிய சட்டங்கள் அல்லது சட்ட சீர்திருத்தம் பற்றி ஏதும் குறிப்பிடப் படவில்லை. குறைவான ஊதியத்துடன் ஹெச் 1 பி விசா விண்ணப்பிப்பவர்களுக்கு அனுமதி மறுக்கப்படும் என்று தெரிகிறது.அதே போல் விசாவில் குறிப்பிட்ட ஊதியத்தை வழங்காத நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை பாயும் எனவும் எதிர்பார்க்கப் படுகிறது. தனக்கு வாக்களித்தவர்களுக்க் தான் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றும் வகையில் ட்ரம்பின் சமீபத்திய நடவடிக்கைகள் இருந்து வருகின்றன. அடுத்த அதிபர் தேர்தலை மனதில் வைத்து இப்போதே, ட்ரம்ப் காய் நகர்த்தத் தொடங்கியுள்ளதாகவும் தெரிகிறது

On Monday, April 24, 2017 by Unknown in ,    

சிகாகோ(யு.எஸ்): அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா நான்கு மாத ஓய்வை முடித்துக் கொண்டு மீண்டும் மக்கள் பணிக்கு திரும்புகிறார்.
தீவிர அரசியல் இல்லாமல் சமுதாய மாற்றத்திற்கான புதிய களத்தில் ஒபாமா பணியாற்றுவார் என்று அவரது தனிச் செயலாளர் தெரிவித்துள்ளார்.



முதல் நிகழ்ச்சியாக சிகாகோ பல்கலைக் கழகத்தில் மாணவர்களுடன் வருகிற திங்கட்கிழமை உரையாற்றுகிறார். 'சமுதாய ஒருங்கிணைப்பும் சமூகப் பணிகளும்' என்ற தலைப்பில் ஒபாமா பேச உள்ளார்.
அதைத் தொடர்ந்து பாஸ்டனில் ஒரு விருது வழங்கும் விழாவில் பங்கேற்கிறார். இன்னும் சில தனியார் நிகழ்ச்சிகளிலும் பேச உள்ளார்.
ஐரோப்பா பயணம் மேற்கொள்ளும் ஒபாமா , ஜெர்மனி சான்சலர் ஏஞ்சலா மெர்கெலுடன் பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்கிறார்.
இந்த நிகழ்ச்சிகள் எதிலும் ஒபாமா அரசியல் பேசப் போவதில்லை என தெரிகிறது. அவரது ஆதரவாளர்கள், அதிபர் ட்ரம்புக்கு எதிராக ஒபாமா குரல் எழுப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர்.
ஆனால் ஒபாமா, ஒரு நேரத்தில் ஒரு அதிபர் தான் இருக்க முடியும். அதிபர் ட்ரம்புக்கு எதிரான அரசியல் செய்ய விரும்பவில்லை என்று முடிவெடுத்துள்ளாராம்.
ஆனாலும் ஜனநாயகக் கட்சி வளர்ச்சிக்காக தலைவர்களை ஊக்கப்படுத்தும் விதத்தில் அரசியல் தொடர்பான பயிற்சி முகாம்கள் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.
அடுத்த தலைமுறை இளைய தலைவர்களை உருவாக்கவும், மனித உரிமைகளுக்காவும் செயல்படுவார் என்று ஒபாமாவின் நெருங்கிய ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதிபர் ட்ரம்புக்கு எதிரான அரசியல் செய்யாமல், அடிப்படை மாற்றத்திற்கான வழிகளை நோக்கி தமது செயல்பாடுகளை அமைத்துக் கொள்ள ஒபாமா விரும்புகிறார்.
பொது மேடைகளிலோ அல்லது தனிப்பட்ட நிகழ்ச்சிகளிலோ அதிபர் ட்ரம்பை விமர்சித்து ஒபாமா பேச மாட்டார் என அவருடைய நெருக்கமான நட்பு வட்டாரத்தினர் தெரிவிக்கின்றனர்
சுயசரிதை எழுதும் ஒபாமா தம்பதியினர்
கடந்த நான்கு மாதங்களாக கரிபியின் தீவுகளில் குடும்பத்தினருடன் ஓய்வெடுத்து வந்த ஒபாமா , கால்ஃப் ஆடியும் கடற்கரையில் ஓய்வெடுத்தும் களித்துள்ளனர்.
தங்கள் வாழ்க்கை வரலாற்றை எழுதுவதற்கும் ஒபாமாவும் மிஷல் ஒபாமாவும் தயார் செய்து கொண்டிருக்கின்றனர். பெங்குயின் பதிப்பகத்தாரிடம் பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.
இருவரும் தனிப்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் உள்ளனர். இத்தகைய நிகழ்ச்சிகளில் பங்கேற்று பேசுவதற்கு குறிப்ப்ட தொகை வழங்கப்படும்.
பில் க்ளிண்டன் ஒரு நிகழ்ச்சிக்கு 200 ஆயிரம் டாலர்கள் வரை வாங்கி இருந்தார். ஜார்ஜ் டபுள்யூ புஷ்க்கு 100 ஆயிரம் முதல் 175 ஆயிரம் டாலர்கள் வரை ஒரு நிகழ்ச்சிக்கு வழங்கப்பட்டது.
ஒபாமாவுக்கு பில் க்ளிண்டனை விடவும் அதிகம் கொடுக்க வாய்ப்பு இருக்கிறது. பில் க்ளிண்டன் போலவே ஒபாமா அறக்கட்டளையும் தொடங்கவும் வாய்ப்புள்ளது.
இளைய மகள் சாஷா பள்ளிக்கல்வியை முடிக்கும் வரையிலும் தலை நகர் வாஷிங்டனில் தங்கி இருக்கவும் முடிவு செய்துள்ளனர். அதன் பிறகு சிகாகோவில் குடிபெயர்வார்கள் என தெரிகிறது
On Monday, April 24, 2017 by Unknown in ,    




லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்தும் தங்கியிருக்கும் வெளிநாட்டவர் குறித்து அந்நாட்டின் குடியேற்றத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். லெய்செஸ்டரில் 2 ஆடை தொழிற்சாலைகளில் இந்த சோதனை நடைபெற்றது.



இச்சோதனையில்தான் 9 பெண்கள் உட்பட 38 இந்தியர்கள் சிக்கினர். இதில் 31 பேர்தான் விசார காலம் முடிவடைந்தும் பிரிட்டனிலேயே தங்கியவர்கள் என்றும் 7 பேர் சட்டவிரோதமாக பிரிட்டனுக்குள் நுழைந்தவர்கள் எனவும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த இரு நிறுவனங்களும் சட்டவிரோதமாக பயன்படுத்திய ஒவ்வொரு தொழிலாளருக்கும் 20,000 பவுண்டுகள் அபராதம் கட்ட வேண்டிய நிலை உள்ளது

Saturday, September 24, 2016

On Saturday, September 24, 2016 by Unknown in    

லிபியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட இரண்டு தெலுங்கு பேராசிரியர்களும் இன்று ஐதராபாத் வந்து சேர்ந்து தங்கள் குடும்பத்தினரை சந்தித்தனர்.

ஐதராபாத்:

லிபியாவில் ஐ.எஸ். கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் இந்தியாவைச் சேர்ந்த 4 பேர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 29-ம் தேதி கடத்தப்பட்டனர். அவர்களில் கர்நாடகத்தைச் சேர்ந்த லட்சுமிகாந்த், விஜய் குமார் ஆகியோர் இரண்டு நாட்களில் விடுவிக்கப்பட்டனர். சிர்தே பல்கலைக்கழகத்தில் வேலை பார்த்து வரும் ஆந்திராவைச் சேர்ந்த கோபிகிருஷ்ணா, தெலுங்கானாவைச் சேர்ந்த பலராம் கிஷன் ஆகியோர் விடுவிக்கப்படவில்லை. 

இந்நிலையில் 414 நாட்கள் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த இரண்டு பேராசிரியர்களும் கடந்த 15-ம் தேதி விடுவிக்கப்பட்டனர். இதையடுத்து லிபிய ராணுவம் மற்றும் இந்திய வெளியுறவுத்துறை மூலம் அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

அதன்படி, தீவிரவாதிகள் பிடியில் இருந்து மீண்டு வந்த இரண்டு பேராசிரியர்களும் வெளியுறவுத்துறை அதிகாரிகளுடன் விமானம் மூலம் இன்று காலை ஐதராபாத் வந்து சேர்ந்தனர். அப்போது அவர்களின் குடும்பத்தினர் அவர்களை கண்ணீர்மல்க வரவேற்று மகிழ்ந்தனர்.

அப்போது தங்கள் குடும்பத்துடன் மீண்டும் இணைந்ததை நினைக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை என்றார் கோபிகிருஷ்ணா. மேலும், தங்களை விடுவித்து பாதுகாப்பாக நாடு திரும்ப நடவடிக்கை மேற்கொண்ட லிபிய ராணுவம் மற்றும் வெளியுறவு மந்திரி ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார். அதேசமயம், தன்னை சிறைப்பிடித்தது குறித்த தகவல் எதையும் அவர் தெரிவிக்க மறுத்துவிட்டார்.

Saturday, September 10, 2016

On Saturday, September 10, 2016 by Unknown in    

இந்திய பூர்வீகத்தை கொண்ட ஒருவரின் பெண், உலக ஜப்பான் அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஜப்பானில் கலப்பின பெண் ஒருவர், உலக ஜப்பான் அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது இது இரண்டாம் முறையாகும்.  

பிரியங்கா யோஷிகாவா

பிரியங்கா யோஷிகாவா என்னும் 22 வயது பெண்ணான அவர், யானைகளை பழக்கும் உரிமம் வைத்துள்ளார். மேலும் அவரின் இந்த வெற்றியை கலப்பினத்தவர்கள் குறித்த கண்ணோட்டத்தை மாற்றப் பயன்படுத்தப் போவதாகத் தெரிவித்துள்ளார்.

 

கடந்த வருடம், அரியானா மியமோடா என்னும் கலப்பின பெண் பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றார். இப்பட்டத்தை வென்ற முதல் கலப்பின பெண் இவராவார்.

 

முழுவதுமாக ஜப்பான் பூர்வீகத்தைக் கொண்ட பெண் தான் அப்பட்டத்தை வென்றிருக்க வேண்டும் என்று விமர்சனங்கள் அப்போது எழுந்தன.

 

ஒவ்வொரு வருடமும் ஜப்பானில் 2 சதவீதம் மட்டுமே கலப்பின குழந்தைகள் பிறக்கின்றன அவர்களை ஜப்பான் மொழியில் ''ஆஃபு'' என்று அழைப்பார்கள்; ஆங்கில் மொழியில் பாதி என்பதை குறிக்கும் ஆஃப் என்னும் வார்த்தையிலிருந்து வந்துள்ளது.

 

''நாங்கள் ஜப்பானியர்கள். எனது தந்தை இந்தியர் என்பதில் நான் பெருமை கொள்கிறேன். எனக்குள் இந்தியன் இருக்கிறது என்பதில் மகிழ்கிறேன். அதனால் நான் ஜப்பானியர் இல்லை என்று ஆகிவிடாது’’ என ஏஎஃப்பி செய்தி முகமையிடம் யோஷிகாவா தெரிவித்துள்ளார்.  

யோஷிகாவா, குத்துச் சண்டை வீரரும் ஆவார்

அவரின் இந்த வெற்றியை, தனக்கு முன்னர் இப்பட்டம் வென்ற மியமோடாவிற்கு அர்பணித்துள்ளார் யோஷிகாவா.

 

மியமோடாவிற்கு முன்னர் கலப்பின பெண்கள் ஜப்பான் சார்பில் போட்டிகளில் கலந்துக் கொள்ள முடியாது என்று தான் நினைத்ததாகவும் ஆனால் அரியானா மியமோடா இப்பட்டத்தை வென்று தன்னை போன்ற கலப்பின பெண்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்துள்ளார் என்றும் யோஷிகாவா தெரிவித்துள்ளார்.

 

கலப்பினத்தவர்களாக இருப்பதால் துன்புறும் பல நபர்களை தனக்குத் தெரியும் என்றும், தான் ஜப்பானுக்கு வந்த போது தன்னை அனைவரும் கிருமி போன்று பாவித்தார்கள் என்றும், தன்னை தொட்டால் ஏதோ கெடுதல் ஏற்படுவதை போல் அவர்கள் தொடுவார்கள் ஆனால் தன்னை இந்தளவு வலிமையாக்கியது அவர்கள் தான் என்றும் அவர்களுக்கு தனது நன்றி எனவும் தெரிவித்துள்ளார் யோஷிகாவா.

 

இந்திய பூர்வீகத்தை கொண்டதால் யோஷிகாவின் வெற்றியை எதிர்த்து சிலர் சமூக ஊடங்களில் அதிருப்தி தெரிவித்துள்ளனர்; ஆனால் சில இந்தியர்கள் அதிலிருந்து வெளியே வர அவர்களை அறிவுறுத்தியுள்ளனர்.

On Saturday, September 10, 2016 by Unknown in    

புகைபிடிப்பதால் ஏற்படும் மரணங்களைப் போல பத்து சதவீத இறப்புகளுக்கு காற்றுமாசு காரணமாக உள்ளது என உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது.  

 

உலகளவில் மரணங்கள் ஏற்படுவதற்கு நான்காவது பெரிய காரணமாக காற்று மாசு உள்ளது எனவும் உலக வங்கியின் அறிக்கை கூறுகிறது.

 

புகைபிடிப்பதால் ஏற்படும் மரணங்களைப் போல பத்து சதவீத இறப்புகளுக்கு காற்றுமாசு காரணமாக உள்ளது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மனித உழைப்பு நாட்களும் காற்று மாசு காரணமாக ஏற்படும் பிரச்சனைகளால் பாதிக்கப்படுகின்றன. இந்தியத் தலைநகர் டில்லியிலும் நிலைமை மோசமாகவே உள்ளது.

 

கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் எடுக்கப்பட்ட புள்ளி விபரங்களின் அடிப்படையில் உலக வங்கியின் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது

On Saturday, September 10, 2016 by Unknown in    

 ரஷ்யாவின், கபரோவ்ஸ் பகுதியில் ஒரு தாய் 104 ரூபய்க்கும், ஒரு மது பாட்டிலுக்கும் தனது 10 வயது மகளை ஒரு பலாத்காரனுக்கு விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு கட்டிடத்தில் 10 வயது சிறுமி ஒருவர் காலில் அடிபட்டு அழுது கொண்டிருப்பதை அவ்வழியே வந்த ஒருவர் பார்த்து காவல்துறைக்கும், அவசர சிகிச்சைக்கும் தகவல் அளித்தார். சிறுமிக்கு சிகிச்சை அளித்து சோதனை செய்ததில் அவர் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

 

பின்னர் இதுகுறித்து சிறுமியிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில், தன்னை தனது தாயே ஒரு நபரிடம் பலாத்காரம் செய்ய விற்றதாகவும், அந்த நபர் ஏற்கனவே ஒரு பெண்ணை பலாத்காரம் செய்தவர் எனவும் கூறினார்.

 

சிறிது பணமும் ஒரு மது பாட்டிலும் கொடுத்துவிட்டு எனது மகளை என்ன வேண்டுமானாலும் செய்துகொள் என அந்த சிறுமியின் தாய் கூறியுள்ளார். இதனையடுத்து அந்த கொடூரம் ஒரு மது பாட்டிலும், 104 ரூபாயும் அளித்துவிட்ட அந்த 10 வயது சிறுமியை பலாத்காரம் செய்துள்ளான்.

 

பலாத்காரம் செய்த நபரை காவல்துறையினர் தற்போது கைது செய்துள்ளனர். பெற்ற மகளையே பலாத்காரம் செய்ய அற்ப ஆசைகளுக்காக விற்பனை செய்த தாய் தலைமைறைவாக உள்ளார்.

Wednesday, September 07, 2016

On Wednesday, September 07, 2016 by Unknown in    

அன்னை தெரசா ஒரு ஏமாற்று பேர்வழி என்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஞாயிறு அன்று வாடிகனில் நடைபெற்ற  நிகழ்வில் போப் பிரான்சிஸ் அன்னை தெரசாவுக்கு 'புனிதர்' பட்டம் வழங்கி கவுரவித்தார். இந்நிலையில் முன்னாள்  உச்ச நீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு தன்னுடைய முகநூல் பதிவொன்றில், 'சந்தேகத்துக்கிடமான நபர்கள் மற்றும் அமைப்புகளிடம் இருந்து அன்னை தெரசாவின் சேவை அமைப்பு  அதிக அளவில் நிதியுதவி பெற்றது குறித்தும், உலகின் பல்வேறு பகுதிகளில் அவருடைய  சேவை அமைப்புகள் மூலம் 500-க்கும் மேற்பட்ட கல்வி நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளது குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார்.

பல்வேறு நிதி ஆவணங்கள் மற்றும் விசாரணை அமைப்புகளின் அறிக்கைகளை தன்னுடைய வாதத்திற்கு ஆதாரம் காட்டியுள்ள அவர், அன்னை தெரசாவை ஒரு அடிப்படைவாதி, ஏமாற்றுக்காரர் என்றும் விமர்சித்துள்ளார்.

கட்ஜுவின் இந்த கருத்து சமூக வலைத்தளத்தில் அவருக்கு கடுமையான  கண்டனங்களை பெற்றுத் தந்துள்ளதோடு, சர்ச்சைகளையும் கிளப்பியுள்ளது.

Sunday, May 03, 2015

On Sunday, May 03, 2015 by Unknown in ,    
பிரிட்டிஷ் இளவரசர் வில்லியமின் மனைவி கேட் மிடில்டன் சீமாட்டிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
 
இது அந்த தம்பதியரின் இரண்டாவது குழந்தையாகும்.
 
லண்டனிலுள்ள செயிண்ட் மேரிஸ் மருத்துவமனையில் இந்தப் பெண் குழந்தை உள்ளூர் நேரம் காலை 08.34 மணிக்கு சுகப்பிரசவத்தில் பிறந்தது.
 
குழந்தை பிறக்கும்போது இளவரசர் வில்லியம் அருகில் இருந்தார்.
 
தாயும் சேயும் நலம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
பிரிட்டிஷ் முடிக்குரிய வாரிசு வரிசையில் இந்தப் பெண் குழந்தை நான்காவது இடத்தில் உள்ளது.
 
பிறந்துள்ள பெண் குழந்தை சுமார் நான்கு கிலோ எடையுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இத்தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதை பிரிட்டிஷ் அரசி, அவரது கணவர் எடின்பரோ கோமகன், இளவரசர் வில்லியமின் தந்தையும் வேல்ஸ் இளவரசருமான சார்லஸ், அவரது மனைவி கார்ண்வால் சீமாட்டி, இளவரசர் ஹாரி மற்றும் இரு குடும்பத்தின் இதர உறுப்பினர்கள் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
 
வில்லியம்ஸ்-கேட் மிடில்டன் தம்பதியனரின் முதல் குழந்தையான இளவரசர் ஜார்ஜ் கடந்த 2013 ஆண்டு ஜூலை மாதம் பிறந்தார்.
On Sunday, May 03, 2015 by Unknown in ,    
நேபாளத்தை பெரும் நிலநடுக்கம் தாக்கி ஒரு வாரம் கடந்துள்ள நிலையில், இனிமேலும் உயிருடன் எவரும் மீட்கப்படக்கூடிய சாத்தியக்கூறு இல்லை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

 
பலியானோரின் எண்ணிக்கை 6600 ஐ தாண்டியுள்ளதாக உள்துறை அமைச்சின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
 
14000 பேர் காயடைந்துள்ளனர்.மேலும் பலர் காணாமல் போயுள்ளனர்.
 
பாதைகள் மூடப்பட்டுள்ள சில பகுதிகளுக்கு உதவிப்பணிகள் இதுவரை சென்றடையவில்லை. பெருமளவு சர்வதேச நிவாரணப் பொருட்கள் தலைநகர் காத்மண்டுவில் தேங்கிக் கிடக்கின்றன.
 
நேபாள அரசாங்கம்மீட்பு மற்றும் நிவாரண முயற்சிகளை முடிந்தவரை மேற்கொண்டுவருவதாக கறுகின்றது.
 
அதேநேரம், நிவாரணப் பொருட்களில் வந்துள்ள டூனா (மீன்), மயோனீஸ் (சுவையூட்டி) போன்ற சில உணவுப் பொருட்களால் பலனில்லை என்றும் நேபாள அரசாங்கம் கூறுகின்றது.
On Sunday, May 03, 2015 by Unknown in ,    
இந்தோனேஷியா அரசால் தூக்கிலிடப்பட்ட மயூரன் சுகுமாரன் இரத்தம் வடியும் இந்தோனேஷிய கொடியை தனது இறுதி ஓவியமாக வரைந்துள்ளார்.
 
போதைப்பொருட்கள் கடத்தல் வழக்கில் தூக்கிலிடப்பட்ட ஆஸ்திரேலியா நாட்டு குடியுரிமைப் பெற்ற இலங்கை தமிழரான மயூரன் சுகுமாரன் ஓவியம் வரைவதில் வல்லவர் என்பது அனைவரும் அறிந்த சேதிதான். இந்நிலையில், மரணத்தை எதிர்நோக்கிக் காத்திருந்த நாட்களில் மயூரன் சுகுமாரன் வரைந்த ஓவையம் அனைவரதும் கவனத்தை ஈர்த்துள்ளது.
 

 
தான் மரணத்தைத் தழுவுவதற்கு சில தினங்கள் முன்னதாக, தமது எண்ணங்களையும் உணர்வுகளையும் மயூரன் ஓவியமாக வடித்திருக்கிறார். இவற்றில், வெள்ளைத் தூரிகையில் இரத்தம் சொட்டும் வகையில் வரையப்பட்ட இந்தோனேஷிய கொடி பற்றிய சித்திரமும் அடங்கும்.
 

 
மேலும், தம்மீதான மரண தண்டனை நிறைவேற்றப்படுவது தொடர்பான 72 மணிநேர காலக்கெடு அறிவிக்கப்பட்ட தருணத்தில் இரத்தம் சொட்டும் இருதயத்தின் படத்திற்கு இந்தோனேஷிய பாஷா மொழியில் மயூரன் விளக்கம் எழுதியிருந்தார். ‘சாத்து ஹாத்தி, சாத்து ரசா, தி தலாம் சிந்தா’ (ஒரே இதயம், அன்பின் ஒரே உணர்வு) என்று ஓவியத்திற்கு தலைப்பிடப்பட்டிருந்தது.
On Sunday, May 03, 2015 by Unknown in ,    
சவுதி அரேபியாவில் போதைப்பொருள் கடத்திய நபர் ஒருவருக்கு தலைத் துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
 
சவுதி அரேபியாவில் கற்பழிப்பு, சமய எதிர்ப்பு, போதைப் பொருள் கடத்தல், கொலை உள்ளிட்ட குற்றங்களை புரிவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்பட்டு வருகிறது. மேலும், இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனையும் விதிக்கப்படுகிறது.
 

 
இந்நிலையில் சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் பாகிஸ்தானை சேர்ந்த ஷிரின் கான் அப்பாஸ் கான் என்ற நபர் மீது போதைப்பொருள் கடத்தியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனால், இவ்வழக்கில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
 
இதனையடுத்து, நேற்று அவரது தலைத் துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இவரையும் சேர்த்து, இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் மட்டும் சவுதியில் 73 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது 
On Sunday, May 03, 2015 by Unknown in ,    
ஆஸ்திரேலியா நாட்டில் தற்போது வரலாறு காணாத கன மழை பெய்து வருவதால் அங்கே இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய கடற்கரைப்பகுதியில் புயல் காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. மேலும் இப்புயலில் சிக்கி பலர் பாதிக்கப்பட்டுள்ளதால் அங்கே இயல்பு வாழ்க்கை முற்றிலும் ஸ்தம்பித்துள்ளது. புயலில் சிக்கி இதுவரை 5 பேர் பலியானதாக கூறப்படுகிறது. மேலும் பலர் படுகாயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.             
 
இப்புயலின் கோர தாண்டவத்தால் அந்நாட்டில் உள்ள பெரும்பாலான முக்கிய சாலைகள் சேதம் அடைந்துள்ளதால் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.

Saturday, May 02, 2015

On Saturday, May 02, 2015 by Unknown in ,    
நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் புதன் கிரகத்தை ஆராய அனுப்பிய மெசஞ்சர் விண்கலன் அதை நான்காண்டுகள் சுற்றி வந்தபின், எரி பொருள் தீர்ந்து போன நிலையில், அந்த கிரகத்தின் மீது மோதி தனது பயணத்தை முடித்துக்கொண்டது.

மெசஞ்சர் கலன் புதன் மீது மோதி தன் பயணத்தை முடித்தது

 
இந்த திட்டத்தின் கட்டுப்பாட்டு விஞ்ஞானிகள் இந்த கலன் புதன் கிரகத்தை சுற்றி வரும் போது அடுத்த பக்கத்திலிருந்து மீண்டும் திரும்பி வராத நிலையில், அது மோதி நொறுங்கிவிட்டதை உறுதி செய்து அறிவித்தனர்.
 
ஜிஎம்டி நேரப்படி வியாழக்கிழமை 2000 மணிக்கு ( இந்திய, இலங்கை நேரப்படி வெள்ளிக்கிழமை காலை 0130 மணி) இது மோதியதாக விஞ்ஞானிகள் கூறினர்.
 
மொத்தம் 10 ஆண்டுகள் விண்ணிலும், சுமார் நான்காண்டுகள் புதனைச் சுற்றி வந்த நிலையிலும், இந்த கலன் பல ஆய்வுகளை மேற்கொண்டது. இறுதியாக மணிக்கு 8,750 மைல்.
 
வேகத்தில் அது புதன் கிரகத்தின் மீது மோதி நொறுங்கியது. இது ஒலியின் வேகத்தை விட 12 மடங்கு அதிகமாகும்.
 
இந்தக் கலன் 513 கிலோ எடையும், சுமார் மூன்று மீட்டர் நீளமும் கொண்டது. இது மோதிய வேகத்தில், புதன் கிரகத்தின் மீது டென்னிஸ் மைதானம் அளவுக்கு ஒரு பள்ளம் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறும் விஞ்ஞானிகள் ஆனால் இந்த பள்ளத்தை பூமியிலிருந்து பார்க்க முடியாது என்று கூறுகிறார்கள்.
 
இந்த அளவுக்கு வேகமாக இந்தக் கலன் விழக்காரணம் புதனில் , பூமியில் இருப்பது போல மேல் பரப்பில் சூழல் இல்லாதுதான் ; பூமியின் மேற்சூழல் விண்ணிலிருந்து பூமிக்குள் வரும் எந்தப் பொருளையும், அங்கேயே எரித்துவிடுகிறது.
 
அத்தகைய சூழ்நிலை புதன் கிரகத்தில் இல்லாததால்,இந்தக் கலன் வேகமாக பாய்ந்து நொறுங்கியது. இது போல விண்ணிலிருந்து அவ்வப்போது விண்கற்கள் புதனின் மேற்பரப்பில் மோதுவதால்தான், புதன் கிரகத்தில் பல பள்ளங்கள் காணப்படுகின்றன.
On Saturday, May 02, 2015 by Unknown in ,    
முழுமையாக முகத்தை மறைக்கும் வகையிலான இஸ்லாமிய முகத்திரையை பொது இடங்களில் அணிந்து வருவதை காங்கோ ஜனநாயகக் குடியரசு தடை செய்துள்ளது.

முஸ்லிம்கள் முழுமையான முகத்திரையை அணிய காங்கோவில் தடை

 
அதேபோல வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் இரவு நேரத்தை பள்ளிவாசல்களில் செலவழிப்பதையும் அதிகாரிகள் தடை செய்துள்ளனர்.
 
தீவரவாத செயல்பாடுகளுக்கு எதிரான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே இந்த உத்தரவுகள் எனவும் அரசு கூறுகிறது.
 
அண்டை நாடான மத்திய ஆப்ரிக்க குடியரசில் இடம்பெறும் வன்முறைகள் காரணமாக அங்கிருந்து வெளியேறுபவர்கள் காங்கோ ஜனநாயகக் குடியரசுக்குள் வந்து அங்குள்ள பள்ளிவாசல்களில் அடைக்கலம் புகுந்துள்ளனர்.
 
காங்கோ பிராசிவில்லே நாட்டில் ஐந்து சதவீதத்துக்கும் குறைவாகவே முஸ்லிம்கள் உள்ளனர்.
On Saturday, May 02, 2015 by Unknown in ,    
இலங்கையின் வடக்கே ரயில்வே கடவைப் பகுதிகளில் விபத்துக்கள் அதிகரித்து வருவது குறித்து கவலைகள் எழுந்துள்ளன.

வட இலங்கையில் அதிகரிக்கும் ரயில் விபத்துக்கள்

 
வட பகுதியில் புதிதாக ரயில் பாதைகள் அமைக்கப்பட்டிருந்தாலும் பாதுகாப்பு தொடர்பில் போதிய கவனம் செலுத்தப்படவில்லை என்று பல்துறையினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.
 
ரயில்வே கடவைகளில் பாதுகாப்புகள் ஏற்பாடுகள் உடனடியாக மேம்பாடு செய்யப்படாவிட்டால் விபத்துக்கள் தொடரும் அபாயங்கள் உள்ளன என்று பணியாளர்கள் மட்டுமன்றி பொதுமக்களும் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
 
அண்மையில் அடுத்தடுத்து இடம்பெற்ற விபத்துக்களில் பலர் உயிரிழந்திருப்பதாகக் காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
சிலதினங்களுக்கு முன்னர் கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் கார் ஒன்று ரயில்வே கடவையைக் கடந்தபோது விரைவு ரயில் ஒன்று மோதியதில் 4 பேர் அந்த இடத்திலேயே மரணமடைந்தனர்.

வட இலங்கையில் அதிகரிக்கும் ரயில் விபத்துக்கள்

 
உரிய முறையில் திட்டமிடப்படாததன் காரணமாகவே இந்த விபத்துக்கள் நிகழ்ந்திருப்பதாக உள்ளூர்வாசிகளும் கடவைகளில் பணியாற்றுபவர்களும் கூறுகிறார்கள்.
 
அதேவேளை ரயில்வே கடவைகளில் பணியாற்றுகின்ற ஊழியர்கள் தற்காலிக ஊழியர்களாகவே கடமையாற்றி வருகின்றனர்.
 
வவுனியா மாவட்டத்தில் மாத்திரம் இவ்வாறு 75 ஊழியர்கள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் கடமையாற்றி வருவதாகவும், இவர்களுக்குக் காவல்துறையினரே நியமனம் வழங்கி நாட்கூலி அடிப்படையில் சம்பளம் வழங்கி வருவதாகவும் இந்த ஊழியர்களுக்கான சங்கத்தின் தலைவர் ரொகான் ராஜ்குமார் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
 
ரயல்வே கடவை காப்பாளர்கள் தங்களுக்கு விளக்குகள் கூட வழங்கப்படவில்லை என்று கூறுகிறார்கள். அதேபோல தங்குவதற்கு கூட போதிய இடமில்லை என்றும் அவர்களில் சிலர் பிபிசியிடம் தெரிவித்தனர்.

Friday, April 17, 2015

On Friday, April 17, 2015 by Unknown in ,    
செவ்வாய் கிரகத்தில் பல நாடுகள் ஆய்வுகள் மேற்கொண்டுள்ளன. அங்கு உயிரினங்கள் வாழும் சாத்தியக்கூறு உள்ளனவா? என தீவிரமான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
 

 
தற்போது அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தின் ‘கியூரியா சிட்டி’ விண்கலம் ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
 
அது எடுத்து அனுப்பிய போட்டோக்களின் அடிப்படையில் செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதை உறுதி செய்துள்ளது. இது அக்கிரகத்தின் மேற்பரப்பில் இருக்கலாம் என கருதப்படுகிறது.
 
செவ்வாய் கிரக மண்ணில் பெர் குளோரைட் என்ற ரசாயன பொருள் உள்ளது. இது உறையும் தன்மை குறைவானதாகும். எனவே ஐஸ்கட்டியாக தண்ணீர் உறைய கூடிய சூழ்நிலை இல்லை. ஆகவே, தண்ணீர் திரவ நிலையில் உள்ளது. தற்போது அது கடும் உப்பு தன்மை வாய்ந்ததாக உள்ளது.
 
அங்குள்ள மண்ணில் கால்சியம் பெர்குளோரைடும் உள்ளது. இது காற்று மண்டலத்தில் இருந்து நீராவியை உறிஞ்சும் தன்மை உடையது என்றும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்
On Friday, April 17, 2015 by Unknown in ,    
ஜெர்மனியின் ஸ்பான்டாவ் பகுதியில் ஆசிரியையாக வேலை செய்து வருபவர் அன்னெகிரெக் ராவ்நிக். 10 வருடங்களுக்கு முன் தனது 55வது வயதில் 13வது குழந்தை லேலியாவை பெற்றெடுத்தபோது தலைப்பு செய்தியில் இடம்பிடித்தார். தற்போது ஒன்பது வயதை எட்டியுள்ள லேலியா தனக்கு தம்பியோ, தங்கையோ வேண்டும் என்று தாயிடம் கூறினார்.
 

 
பெற்ற மகள் ஆசைப்படுகிறாளே என நினைத்த அன்னெகிரெக், அடுத்த குழந்தையை பெற்றெடுக்க தயாரானார். இதையடுத்து கர்ப்பம் தரிப்பதற்கான சிகிச்சை எடுத்துக்கொண்டதால் கர்ப்பமானார். சில மாதங்களுக்கு பின் கர்ப்பப்பையை ஸ்கேன் செய்து பார்த்தபோது அன்னெகிரெக் நான்கு குழந்தைகளை சுமப்பது தெரிந்தது. இதனால் மருத்துவர்களும், அன்னெகிரெக்கும் ஆச்சர்யம் அடைந்தனர். எனினும் 13 குழந்தைகளை பெற்றெடுத்த தனக்கு 4 குழந்தைகளை சுமப்பது பெரிய விஷயமல்ல என் அன்னெகிரெக் தெரிவித்தார்.
 
பெரும்பாலும் இவ்வாறு நான்கு குழந்தைகள் கர்ப்பம் தரித்தால், அவை குறை பிரசவத்தில் பிறக்க நேரிடும். அவ்வாறு பிறக்கும் போது குழந்தைகளின் நுரையீரல்கள் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். எனினும் தற்போது வரை நான்கு குழந்தைகளும் எவ்வித பிரச்சனையுமின்றி ஆரோக்கியமாக இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.
 
தனக்கு தம்பி மற்றும் தங்கை பிறக்க உள்ளதை எதிர்பார்த்து 13வது குழந்தையான லேலியா காத்திருக்கிறாள்.

Wednesday, April 15, 2015

On Wednesday, April 15, 2015 by Unknown in ,    
ஆஸ்திரேலியாவில் ஒரு பெண் இறந்து போன தன் கணவன் மூலமாக தாய்மை அடைந்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் ஒரு பெண் விபத்தில் அடிபட்டு இறந்து போன தன் கணவனிடமிருந்து குழந்தை பெற அடிலெய்டு உச்ச நீதிமன்றத்தின் அனுமதியை வேண்டினார். தன் காதலுக்காக கடுமையாக போராடி 48 மணி நேரத்தில் அனுமதி பெற்றார். ஆனால் இப்படி செய்வது அடிலெய்டில் சட்ட விரோதமானது என்பதால் கன்னிபரா மாகாணத்திற்கு சென்று, ஐ.வி.எப். எனப்படும் செயற்கைக் கருவூட்டல் முறையில் கணவரின் விந்தணுவை அவரது கருப்பைக்குள் செலுத்தும் சிகிச்சையை மேற்கொண்டார்.
வழக்கமாக இது போன்ற செயற்கை முறை கருத்தரிப்பில் முதல் முயற்சியிலேயே கருத்தரிப்பது அபூர்வம். இவருக்கு முதல் முயற்சியிலேயே கருப்பையில் உயிர் ஜனித்தது.
இறந்தவரின் உடலிலிருந்து விந்தணுவை எடுக்கும் இந்த சிகிச்சை முறை மூலமாக, 30 மணி நேரத்திற்குள் கருத்தரித்த பெண்ணுக்கு ஆரோக்கியமான குழந்தை பிறந்ததே, சாதனையாக இருந்து வந்த நிலையில் 48 மணி நேரத்திற்கு பிறகு கருத்தரித்த இவர் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். அந்தக் குழந்தைக்கு தற்போது ஒரு வயதாகிறது.
வழக்கறிஞர்களும் மருத்துவர்களும் இதை அசாதாரணமான வழக்கு என்கின்றனர். இந்த சிகிச்சையை மேற்கொண்ட ஆஸ்திரேலிய தேசிய மருத்துவ பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியரான ராப்சன், “என்னுடைய பார்வையில், இது ஒரு காதல் கதை, எல்லையற்ற அன்பும் தைரியமும் கொண்ட அந்த பெண்ணுக்கு நான் என்னால் முடிந்த உதவிகளைச் செய்தேன். இந்த பெண் கடந்து வந்த தடைகள், அசாதாரணமான பொறுமை, அவர் கணவர் மீதான காதல் இவையெல்லாம் என்னுடன் பணியாற்றியவர்களை பிரமிக்க வைத்தது.” என்கிறார் ராப்சன்.
On Wednesday, April 15, 2015 by Unknown in ,    
சீனத் தேசத்தைச் சேர்ந்த துறவி ஒருவர் இறந்து 17 வருடங்களுக்கு பிறகும் எந்தவித சேதமும் இல்லாமல் பாதுகாத்து வரப்படுகிறது.

17 வருடங்களுக்கு முன்பு இறந்த சீனாவின் புத்த துறவியான வூ யுங்கிங், மறைந்தபோதும் அவரது உடல் இன்று வரை கண்ணாடி பேழையில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. அவரது முக உறுப்புகளும், முகத்தில் உள்ள தசைகளும், தலைமுடி மற்றும் தாடியும் இப்போதும் எவ்வித சேதமுமின்றி அப்படியே உள்ளது.

வூ யுங்கிங் 1998 ஆம் ஆண்டில் மரணமடைந்தார். தங்களது குரு யுங்கிங்கின் உடலை பாதுகாக்க நினைத்த சீடர்கள், அவரது உடலை தாமரை நிலையில் வைத்து பெரிய பீங்கான் குவளையில் அடைத்தனர். பின்னர் அங்கிருந்து லிங்குவான் விகாரைக்கு கொண்டு வரப்பட்ட அவரது உடல், கண்ணாடி பேழையில் வைக்கப்பட்டது.

ஏறத்தாழ 17 வருடங்களாக கண்ணாடி பேழைக்குள் இருக்கும் யுங்கின் முகம், இன்றும் சிதையாமல் இருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனால் அங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது