Wednesday, April 15, 2015
ஆஸ்திரேலியாவில் ஒரு பெண் இறந்து போன தன் கணவன் மூலமாக தாய்மை அடைந்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் ஒரு பெண் விபத்தில் அடிபட்டு இறந்து போன தன் கணவனிடமிருந்து குழந்தை பெற அடிலெய்டு உச்ச நீதிமன்றத்தின் அனுமதியை வேண்டினார். தன் காதலுக்காக கடுமையாக போராடி 48 மணி நேரத்தில் அனுமதி பெற்றார். ஆனால் இப்படி செய்வது அடிலெய்டில் சட்ட விரோதமானது என்பதால் கன்னிபரா மாகாணத்திற்கு சென்று, ஐ.வி.எப். எனப்படும் செயற்கைக் கருவூட்டல் முறையில் கணவரின் விந்தணுவை அவரது கருப்பைக்குள் செலுத்தும் சிகிச்சையை மேற்கொண்டார்.
வழக்கமாக இது போன்ற செயற்கை முறை கருத்தரிப்பில் முதல் முயற்சியிலேயே கருத்தரிப்பது அபூர்வம். இவருக்கு முதல் முயற்சியிலேயே கருப்பையில் உயிர் ஜனித்தது.
இறந்தவரின் உடலிலிருந்து விந்தணுவை எடுக்கும் இந்த சிகிச்சை முறை மூலமாக, 30 மணி நேரத்திற்குள் கருத்தரித்த பெண்ணுக்கு ஆரோக்கியமான குழந்தை பிறந்ததே, சாதனையாக இருந்து வந்த நிலையில் 48 மணி நேரத்திற்கு பிறகு கருத்தரித்த இவர் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். அந்தக் குழந்தைக்கு தற்போது ஒரு வயதாகிறது.
வழக்கறிஞர்களும் மருத்துவர்களும் இதை அசாதாரணமான வழக்கு என்கின்றனர். இந்த சிகிச்சையை மேற்கொண்ட ஆஸ்திரேலிய தேசிய மருத்துவ பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியரான ராப்சன், “என்னுடைய பார்வையில், இது ஒரு காதல் கதை, எல்லையற்ற அன்பும் தைரியமும் கொண்ட அந்த பெண்ணுக்கு நான் என்னால் முடிந்த உதவிகளைச் செய்தேன். இந்த பெண் கடந்து வந்த தடைகள், அசாதாரணமான பொறுமை, அவர் கணவர் மீதான காதல் இவையெல்லாம் என்னுடன் பணியாற்றியவர்களை பிரமிக்க வைத்தது.” என்கிறார் ராப்சன்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
0 comments:
Post a Comment