Saturday, May 02, 2015
நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் புதன் கிரகத்தை ஆராய அனுப்பிய மெசஞ்சர் விண்கலன் அதை நான்காண்டுகள் சுற்றி வந்தபின், எரி பொருள் தீர்ந்து போன நிலையில், அந்த கிரகத்தின் மீது மோதி தனது பயணத்தை முடித்துக்கொண்டது.

இந்த திட்டத்தின் கட்டுப்பாட்டு விஞ்ஞானிகள் இந்த கலன் புதன் கிரகத்தை சுற்றி வரும் போது அடுத்த பக்கத்திலிருந்து மீண்டும் திரும்பி வராத நிலையில், அது மோதி நொறுங்கிவிட்டதை உறுதி செய்து அறிவித்தனர்.
ஜிஎம்டி நேரப்படி வியாழக்கிழமை 2000 மணிக்கு ( இந்திய, இலங்கை நேரப்படி வெள்ளிக்கிழமை காலை 0130 மணி) இது மோதியதாக விஞ்ஞானிகள் கூறினர்.
மொத்தம் 10 ஆண்டுகள் விண்ணிலும், சுமார் நான்காண்டுகள் புதனைச் சுற்றி வந்த நிலையிலும், இந்த கலன் பல ஆய்வுகளை மேற்கொண்டது. இறுதியாக மணிக்கு 8,750 மைல்.
வேகத்தில் அது புதன் கிரகத்தின் மீது மோதி நொறுங்கியது. இது ஒலியின் வேகத்தை விட 12 மடங்கு அதிகமாகும்.
இந்தக் கலன் 513 கிலோ எடையும், சுமார் மூன்று மீட்டர் நீளமும் கொண்டது. இது மோதிய வேகத்தில், புதன் கிரகத்தின் மீது டென்னிஸ் மைதானம் அளவுக்கு ஒரு பள்ளம் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறும் விஞ்ஞானிகள் ஆனால் இந்த பள்ளத்தை பூமியிலிருந்து பார்க்க முடியாது என்று கூறுகிறார்கள்.
இந்த அளவுக்கு வேகமாக இந்தக் கலன் விழக்காரணம் புதனில் , பூமியில் இருப்பது போல மேல் பரப்பில் சூழல் இல்லாதுதான் ; பூமியின் மேற்சூழல் விண்ணிலிருந்து பூமிக்குள் வரும் எந்தப் பொருளையும், அங்கேயே எரித்துவிடுகிறது.
அத்தகைய சூழ்நிலை புதன் கிரகத்தில் இல்லாததால்,இந்தக் கலன் வேகமாக பாய்ந்து நொறுங்கியது. இது போல விண்ணிலிருந்து அவ்வப்போது விண்கற்கள் புதனின் மேற்பரப்பில் மோதுவதால்தான், புதன் கிரகத்தில் பல பள்ளங்கள் காணப்படுகின்றன.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
வாஷிங்டன், அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஒபாமவை சந்தித்தார். வெள்ளை மாளிகையில்,...
-
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சத்தியமங்கலம், பு.புளியம்பட்டி, பவானிசாகர் மற்றும் வனப்ப...
-
பொங்கலூர் அருகே உள்ள எஸ்.வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகன் நடராஜ்(வயது46). இவர் கடந்த 2–ந்தேதி விஷம் குடித்துள்ளார். இதன...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
ஐகோர்ட்டில், ‘டைம்ஸ் ஆப் இந்தியா‘ பத்திரிகை சென்னை பதிப்பு ஆசிரியர் சுனில் நாயர், வெளியீட்டாளர் சந்தானகோபால் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுவ...
-
'ஐ' பட இசை வெளியீடு பற்றித்தான் தற்போது தென்னிந்தியத் திரையுலகமே பேசிக் கொண்டிருக்கிறது. எப்படியாவது விழாவில் கலந்து கொள்ள வேண்...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
0 comments:
Post a Comment