Saturday, May 02, 2015
நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் புதன் கிரகத்தை ஆராய அனுப்பிய மெசஞ்சர் விண்கலன் அதை நான்காண்டுகள் சுற்றி வந்தபின், எரி பொருள் தீர்ந்து போன நிலையில், அந்த கிரகத்தின் மீது மோதி தனது பயணத்தை முடித்துக்கொண்டது.

இந்த திட்டத்தின் கட்டுப்பாட்டு விஞ்ஞானிகள் இந்த கலன் புதன் கிரகத்தை சுற்றி வரும் போது அடுத்த பக்கத்திலிருந்து மீண்டும் திரும்பி வராத நிலையில், அது மோதி நொறுங்கிவிட்டதை உறுதி செய்து அறிவித்தனர்.
ஜிஎம்டி நேரப்படி வியாழக்கிழமை 2000 மணிக்கு ( இந்திய, இலங்கை நேரப்படி வெள்ளிக்கிழமை காலை 0130 மணி) இது மோதியதாக விஞ்ஞானிகள் கூறினர்.
மொத்தம் 10 ஆண்டுகள் விண்ணிலும், சுமார் நான்காண்டுகள் புதனைச் சுற்றி வந்த நிலையிலும், இந்த கலன் பல ஆய்வுகளை மேற்கொண்டது. இறுதியாக மணிக்கு 8,750 மைல்.
வேகத்தில் அது புதன் கிரகத்தின் மீது மோதி நொறுங்கியது. இது ஒலியின் வேகத்தை விட 12 மடங்கு அதிகமாகும்.
இந்தக் கலன் 513 கிலோ எடையும், சுமார் மூன்று மீட்டர் நீளமும் கொண்டது. இது மோதிய வேகத்தில், புதன் கிரகத்தின் மீது டென்னிஸ் மைதானம் அளவுக்கு ஒரு பள்ளம் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறும் விஞ்ஞானிகள் ஆனால் இந்த பள்ளத்தை பூமியிலிருந்து பார்க்க முடியாது என்று கூறுகிறார்கள்.
இந்த அளவுக்கு வேகமாக இந்தக் கலன் விழக்காரணம் புதனில் , பூமியில் இருப்பது போல மேல் பரப்பில் சூழல் இல்லாதுதான் ; பூமியின் மேற்சூழல் விண்ணிலிருந்து பூமிக்குள் வரும் எந்தப் பொருளையும், அங்கேயே எரித்துவிடுகிறது.
அத்தகைய சூழ்நிலை புதன் கிரகத்தில் இல்லாததால்,இந்தக் கலன் வேகமாக பாய்ந்து நொறுங்கியது. இது போல விண்ணிலிருந்து அவ்வப்போது விண்கற்கள் புதனின் மேற்பரப்பில் மோதுவதால்தான், புதன் கிரகத்தில் பல பள்ளங்கள் காணப்படுகின்றன.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தமிழகத்தில் தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான், பொங்கல் என பல பண்டிகைகள் முக்கியமானதாக கொண்டாடப்பட்டு வருகிறது. பண்டிகைகள் மட்டும் இன்றி பிறந்த...
-
திருச்சி திருச்சியில் அங்கீகாரம் இல்லாத குடிநீர் ஆலைகளுக்கு சீல் வைத்த நிலத்தடி நீர் பிரிவு அதிகாரிகள் ...
-
மணப்பாறை அருகே அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை. உயரதிகாரிகள...
-
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் கிருமிநாசினி தெளிக்கும் பணி இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை திருச்சி ஆட்சியர் சிவ...
-
திருச்சி டிச 17 கோரிக்கை வலியுறுத்தி விவசாய சங்கத்தினர் தொடர் போராட்டம் - போலீஸ் அனுமதி இல்லை என்றால் தடை மீறி நடத்தப்படும் - தேசிய தெ...
-
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி சமத்துவ மக்கள் கட்சியின் ஆலோசனை கூட்டம் சாத்தான்குளத்தில் நடைபெற்றது. தென் மண்டல அமைப்...
-
திருப்பூர்,பட்டாகேட்டு, 63 வேலம்பாளையம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ரேஷன்கார்டு, ஆதார் அட்டை போன்ற ஆவணங்களை ஒப்படைக்க கலெக்டர் அலுவலகத்துக...
-
மதுரை மாநகராட்சி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த திமுக கவுன்சிலர்கள் பொதுமக்கள் உருவ பொம்மைக்கு நாமம் போட்டு வினோத ஆர்ப்பாட்டத்தை ம...
0 comments:
Post a Comment