Saturday, May 02, 2015

பெண் பார்க்கும் படலத்திற்காக பெண் வீட்டுக்குச் சென்ற மாப்பிளை அங்கு வைத்து கடுமையாகத் தாக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
இலங்கை யாழ்ப்பாணத்தை அடுத்த மீசாலையில் காப்புறுதி நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கும் நபர் ஒருவர், ஏராளமான சீதனத்துடன் தரகர் மூலம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணைப் பார்ப்பதற்காக தனது உறவினர்கள் சகிதம் பெண் வீட்டுக்குச் சென்றுள்ளார்.
பெண் வீட்டுக்குச் சென்றவரை அங்கு நின்ற பெண்ணின் தூரத்து உறவினர் ஒருவர் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். ஏனெனில் காப்புறுதி முகவராக தொழில் புரிந்த அவரது மகளை ஏற்கனவே அந்த நபர் காதலித்து ஏமாற்றியுள்ளார். இதனால் அவர்களுக்கிடையில் அங்கு பெரும் சண்டை நடந்ததுள்ளது.
மேலும், அந்த குறித்த நபர் ஏற்கனவே ஏராளமான பெண்களுடன் மன்மத விளையாட்டுக்களை புரிந்து அவர்களைக் காதலிப்பதாக கூறி ஏமாற்றியவர் என தெரியவந்தது. எனவே, பெண் பார்க்க வந்தவரை நெருங்கிய உறவினர், அங்கு நின்றவர்களுக்கு தெரிவிக்கவே பெண் வீட்டுக்காரர்கள் மாப்பிளையை தாக்கியுள்ளனர்.
அடிமேல் அடிவிழ அவர் தனது கைப்பேசியை அங்கேயே போட்டுவிட்டு தனது தாய், தந்தை உறவினர்களை விட்டுவிட்டு ஓடித் தப்பியுள்ளார். பெண்ணின் உறவினர்களிடத்தில் சிக்கிய மாப்பிளையின் உறவுகள் பலத்த கெஞ்சல்களுக்கு மத்தியில் தாக்குதலில் இருந்து தப்பி வெளியேறியுள்ளனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மாவட்ட மேலாளரை உடனடியாக மாற்ற வேண்டும் டாஸ்மாக் ஊழியர்கள் கதறல்? விஜிலென்ஸ் எங்கே போனது? 24.3.2020. கணக்கு பார்த்து பணம்கட்டியிருந்த...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
0 comments:
Post a Comment