Saturday, May 02, 2015
இலங்கையின் வடக்கே ரயில்வே கடவைப் பகுதிகளில் விபத்துக்கள் அதிகரித்து வருவது குறித்து கவலைகள் எழுந்துள்ளன.

வட பகுதியில் புதிதாக ரயில் பாதைகள் அமைக்கப்பட்டிருந்தாலும் பாதுகாப்பு தொடர்பில் போதிய கவனம் செலுத்தப்படவில்லை என்று பல்துறையினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.
ரயில்வே கடவைகளில் பாதுகாப்புகள் ஏற்பாடுகள் உடனடியாக மேம்பாடு செய்யப்படாவிட்டால் விபத்துக்கள் தொடரும் அபாயங்கள் உள்ளன என்று பணியாளர்கள் மட்டுமன்றி பொதுமக்களும் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
அண்மையில் அடுத்தடுத்து இடம்பெற்ற விபத்துக்களில் பலர் உயிரிழந்திருப்பதாகக் காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிலதினங்களுக்கு முன்னர் கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் கார் ஒன்று ரயில்வே கடவையைக் கடந்தபோது விரைவு ரயில் ஒன்று மோதியதில் 4 பேர் அந்த இடத்திலேயே மரணமடைந்தனர்.

உரிய முறையில் திட்டமிடப்படாததன் காரணமாகவே இந்த விபத்துக்கள் நிகழ்ந்திருப்பதாக உள்ளூர்வாசிகளும் கடவைகளில் பணியாற்றுபவர்களும் கூறுகிறார்கள்.
அதேவேளை ரயில்வே கடவைகளில் பணியாற்றுகின்ற ஊழியர்கள் தற்காலிக ஊழியர்களாகவே கடமையாற்றி வருகின்றனர்.
வவுனியா மாவட்டத்தில் மாத்திரம் இவ்வாறு 75 ஊழியர்கள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் கடமையாற்றி வருவதாகவும், இவர்களுக்குக் காவல்துறையினரே நியமனம் வழங்கி நாட்கூலி அடிப்படையில் சம்பளம் வழங்கி வருவதாகவும் இந்த ஊழியர்களுக்கான சங்கத்தின் தலைவர் ரொகான் ராஜ்குமார் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
ரயல்வே கடவை காப்பாளர்கள் தங்களுக்கு விளக்குகள் கூட வழங்கப்படவில்லை என்று கூறுகிறார்கள். அதேபோல தங்குவதற்கு கூட போதிய இடமில்லை என்றும் அவர்களில் சிலர் பிபிசியிடம் தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி திருச்சி ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத் துறை சார்பில் ஊராட்சி பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருச்சி ஜோ...
-
சிங்கவால் குரங்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மட்டும் வாழ்ந்து வரக்கூடிய குரங்கினமாகும். வால்பாறை பகுதியில் அய்யர்பாடி, ரொட்டிக்கடை,...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
.திருச்சி பெங்களூரில் இருந்து சிறப்பு விமானம் மூலம் பயணிகள் திருச்சி வருகை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு கர்நாடகா மாநிலம் பெங்களூரி...
0 comments:
Post a Comment