Saturday, May 02, 2015
திமுக ஆட்சியைப் பிடிக்கும் என்று அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.ராசா பேசினார்.
திருப்பூர் மாநகர திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி வெள்ளியங்காடு நான்கு சாலை சந்திப்பில் வியாழக்கிழமை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு, மாநகர துணைச் செயலாளர் கணேசன் தலைமை வகித்தார். இதில், திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் க.செல்வராஜ், எல்.பி.எப். மாநில துணைத் தலைவர் கோவிந்தசாமி, மாநகரச் செயலாளர் டி.கே.டி. நாகராஜ், பொருளாளர் ரத்தினசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டச் செயலாளர் நந்தகோபால் வரவேற்றார்.
இதில், ஆ.ராசா பேசியது: கடந்த திமுக ஆட்சியில் தமிழக அரசின் கடன் ரூ. 75 ஆயிரம் கோடி. ஆனால் தற்போதைய அதிமுக ஆட்சியில் தமிழக அரசின் கடன் ரூ. 2 லட்சம் கோடியாக உள்ளது என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அரசு ஊழியர்கள், போக்குவரத்து ஊழியர்கள், சத்துணவு ஊழியர்கள் என அனைத்து துறை ஊழியர்களும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
அதேபோல் மத்தியில் ஆளும் பாஜக அரசும், இந்தியாவை இந்து நாடாக அறிவிக்கும் நோக்கில் செயல்படுகிறது. நிலம் கையகச் சட்டம் என்பது பொதுத்துறை நிறுவனங்களுக்காக கொண்டு வரப்பட்டது. தற்போது அந்தச் சட்டத்தை தனியார் முதலாளிகளுக்கு ஆதரவாக கொண்டு வர மத்திய அரசு முனைப்புக் காட்டி வருகிறது. வரும் சட்டப் பேரவைத் தேர்தல் மூலமாக திமுக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி 14.7.16 சபரிநாதன் 9443086297 திருச்சி புறநகர் மாவட்டம் சார்பில் திருச்சி புறநகர் மாவட்ட கழக செயலாளர் கழக நாட...
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
: மதுரை மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நவ., 25 காலை 11 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது. இதில் விவசாயம் சார்ந்த அனைத்து ...
-
திருச்சி கனரா வங்கி மண்டல அலுவலகத்தில் இன்று நடைபெற்ற வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் விழிப்புணர்வு கூட்டத்தில் கனரா வங்கி அதிகாரிகள் சங்க பொ...
-
கரூரில் மன நலம் பாதித்தவர் தூக்கிட்டுத் தற்கொலை க.பரமத்தி, : கரூர் மாவட்டம், க.பரமத்தி அ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி 23.1.17 திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப்பணியாளர்கள் ச...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
.jpg)
0 comments:
Post a Comment