Saturday, May 02, 2015
திமுக ஆட்சியைப் பிடிக்கும் என்று அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.ராசா பேசினார்.
திருப்பூர் மாநகர திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி வெள்ளியங்காடு நான்கு சாலை சந்திப்பில் வியாழக்கிழமை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு, மாநகர துணைச் செயலாளர் கணேசன் தலைமை வகித்தார். இதில், திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் க.செல்வராஜ், எல்.பி.எப். மாநில துணைத் தலைவர் கோவிந்தசாமி, மாநகரச் செயலாளர் டி.கே.டி. நாகராஜ், பொருளாளர் ரத்தினசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டச் செயலாளர் நந்தகோபால் வரவேற்றார்.
இதில், ஆ.ராசா பேசியது: கடந்த திமுக ஆட்சியில் தமிழக அரசின் கடன் ரூ. 75 ஆயிரம் கோடி. ஆனால் தற்போதைய அதிமுக ஆட்சியில் தமிழக அரசின் கடன் ரூ. 2 லட்சம் கோடியாக உள்ளது என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அரசு ஊழியர்கள், போக்குவரத்து ஊழியர்கள், சத்துணவு ஊழியர்கள் என அனைத்து துறை ஊழியர்களும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
அதேபோல் மத்தியில் ஆளும் பாஜக அரசும், இந்தியாவை இந்து நாடாக அறிவிக்கும் நோக்கில் செயல்படுகிறது. நிலம் கையகச் சட்டம் என்பது பொதுத்துறை நிறுவனங்களுக்காக கொண்டு வரப்பட்டது. தற்போது அந்தச் சட்டத்தை தனியார் முதலாளிகளுக்கு ஆதரவாக கொண்டு வர மத்திய அரசு முனைப்புக் காட்டி வருகிறது. வரும் சட்டப் பேரவைத் தேர்தல் மூலமாக திமுக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து செப்.9-இல் கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப் போவதாக கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு அறிவித்துள...
-
கரூரில் 2 இடத்தில் "ஏஸி' நிழற்கூடம் அவசியம் இல்லை என அதிருப்தி கரூர் மாவட்டத்தில், 24 லட்சம் மதிப்பில், இரு இடங்களில்"ஏ...
.jpg)
0 comments:
Post a Comment