Saturday, May 02, 2015
திமுக ஆட்சியைப் பிடிக்கும் என்று அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.ராசா பேசினார்.
திருப்பூர் மாநகர திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி வெள்ளியங்காடு நான்கு சாலை சந்திப்பில் வியாழக்கிழமை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு, மாநகர துணைச் செயலாளர் கணேசன் தலைமை வகித்தார். இதில், திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் க.செல்வராஜ், எல்.பி.எப். மாநில துணைத் தலைவர் கோவிந்தசாமி, மாநகரச் செயலாளர் டி.கே.டி. நாகராஜ், பொருளாளர் ரத்தினசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டச் செயலாளர் நந்தகோபால் வரவேற்றார்.
இதில், ஆ.ராசா பேசியது: கடந்த திமுக ஆட்சியில் தமிழக அரசின் கடன் ரூ. 75 ஆயிரம் கோடி. ஆனால் தற்போதைய அதிமுக ஆட்சியில் தமிழக அரசின் கடன் ரூ. 2 லட்சம் கோடியாக உள்ளது என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அரசு ஊழியர்கள், போக்குவரத்து ஊழியர்கள், சத்துணவு ஊழியர்கள் என அனைத்து துறை ஊழியர்களும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
அதேபோல் மத்தியில் ஆளும் பாஜக அரசும், இந்தியாவை இந்து நாடாக அறிவிக்கும் நோக்கில் செயல்படுகிறது. நிலம் கையகச் சட்டம் என்பது பொதுத்துறை நிறுவனங்களுக்காக கொண்டு வரப்பட்டது. தற்போது அந்தச் சட்டத்தை தனியார் முதலாளிகளுக்கு ஆதரவாக கொண்டு வர மத்திய அரசு முனைப்புக் காட்டி வருகிறது. வரும் சட்டப் பேரவைத் தேர்தல் மூலமாக திமுக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
0 comments:
Post a Comment