Saturday, May 02, 2015
திருப்பூரில் சர்வதேசக் கோடை கால பின்னலாடைக் கண்காட்சி மே 6-ஆம் தேதி தொடங்கி 8-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், இந்திய பின்னலாடைக் கண்காட்சி அமைப்பு, ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம் ஆகிய அமைப்புகள் சார்பில் திருமுருகன்பூண்டியில் உள்ள ஐ.கே.எப். கண்காட்சி வளாகத்தில் கோடை கால பின்னலாடைக் கண்காட்சி நடைபெறவுள்ளது. இதில், 50 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
2016-ஆம் ஆண்டுக்கான பின்னலாடைகளை தயாரிப்பதற்கு, வெளிநாட்டு வர்த்தகர்களிடம் இருந்து ஆர்டர்களைப் பெறும் வகையில் இக்கண்காட்சி நடத்தப்படுகிறது.
இது குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் ஏ.சக்திவேல் செய்தியாளர்களிடம் கூறியது:
இக்கண்காட்சியில் பங்கேற்குமாறு சர்வதேச அளவில் 2,000-க்கும் மேற்பட்ட வர்த்தகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இக்கண்காட்சியை ஆயத்த ஆடை மேம்பாட்டுக் கழகத் தலைவர் வீரேந்தர் உப்பல் துவக்கி வைக்கிறார். இதில், ஃபேஷன் ஷோ, ஏற்றுமதியாளர்கள் சந்திப்புக் கூட்டம் நடைபெறவுள்ளது.
திருப்பூர், மும்பை, கேரளம், பெங்களூரு, அரியானா உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த, பின்னலாடை தயாரிப்பில் ஈடுபட்டு வரும் முன்னணி நிறுவனங்கள் அரங்குகள் அமைக்கவுள்ளன.
திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் கடந்த 2012-13-ஆம் ஆண்டில் ரூ. 13,000 கோடி, 2013-14-ஆம் ஆண்டில் ரூ. 18,000 கோடி, 2014-15-ஆம் ஆண்டில் ரூ. 21,000 கோடி என வளர்ச்சி அடைந்துள்ளது. தமிழகத்தில் ஏற்றுமதி வர்த்தகம் ரூ. 1.60 லட்சம் கோடி. இதில், திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் மட்டும் ரூ. 21,000 கோடி அளவில் உள்ளது. தமிழக அளவில் 15 சதவீத ஏற்றுமதி வர்த்தகத்தை திருப்பூர் மாநகரம் வழங்கி வருகிறது. தற்போது பின்னலாடை ஏற்றுமதிக்கு சாதகமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதே நிலை இன்னும் 5 ஆண்டுகள் நீடிக்கும் என்று நம்புகிறோம்.
கனடா நாட்டுடன் இந்தியா புதிய ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் காரணமாக, அங்கிருந்து பின்னலாடை தயாரிப்புக்கான ஒப்பந்தங்கள் திருப்பூருக்கு கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கனடாவைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவுடனும் ஒப்பந்தம் விரைவில் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
இது போன்ற சாதகமான சூழ்நிலைகளால் அடுத்த 3 ஆண்டுகளில் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் 20 முதல் 25 சதவீதம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மாவட்ட மேலாளரை உடனடியாக மாற்ற வேண்டும் டாஸ்மாக் ஊழியர்கள் கதறல்? விஜிலென்ஸ் எங்கே போனது? 24.3.2020. கணக்கு பார்த்து பணம்கட்டியிருந்த...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
0 comments:
Post a Comment