Saturday, May 02, 2015
திருப்பூரில் சர்வதேசக் கோடை கால பின்னலாடைக் கண்காட்சி மே 6-ஆம் தேதி தொடங்கி 8-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், இந்திய பின்னலாடைக் கண்காட்சி அமைப்பு, ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம் ஆகிய அமைப்புகள் சார்பில் திருமுருகன்பூண்டியில் உள்ள ஐ.கே.எப். கண்காட்சி வளாகத்தில் கோடை கால பின்னலாடைக் கண்காட்சி நடைபெறவுள்ளது. இதில், 50 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
2016-ஆம் ஆண்டுக்கான பின்னலாடைகளை தயாரிப்பதற்கு, வெளிநாட்டு வர்த்தகர்களிடம் இருந்து ஆர்டர்களைப் பெறும் வகையில் இக்கண்காட்சி நடத்தப்படுகிறது.
இது குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் ஏ.சக்திவேல் செய்தியாளர்களிடம் கூறியது:
இக்கண்காட்சியில் பங்கேற்குமாறு சர்வதேச அளவில் 2,000-க்கும் மேற்பட்ட வர்த்தகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இக்கண்காட்சியை ஆயத்த ஆடை மேம்பாட்டுக் கழகத் தலைவர் வீரேந்தர் உப்பல் துவக்கி வைக்கிறார். இதில், ஃபேஷன் ஷோ, ஏற்றுமதியாளர்கள் சந்திப்புக் கூட்டம் நடைபெறவுள்ளது.
திருப்பூர், மும்பை, கேரளம், பெங்களூரு, அரியானா உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த, பின்னலாடை தயாரிப்பில் ஈடுபட்டு வரும் முன்னணி நிறுவனங்கள் அரங்குகள் அமைக்கவுள்ளன.
திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் கடந்த 2012-13-ஆம் ஆண்டில் ரூ. 13,000 கோடி, 2013-14-ஆம் ஆண்டில் ரூ. 18,000 கோடி, 2014-15-ஆம் ஆண்டில் ரூ. 21,000 கோடி என வளர்ச்சி அடைந்துள்ளது. தமிழகத்தில் ஏற்றுமதி வர்த்தகம் ரூ. 1.60 லட்சம் கோடி. இதில், திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் மட்டும் ரூ. 21,000 கோடி அளவில் உள்ளது. தமிழக அளவில் 15 சதவீத ஏற்றுமதி வர்த்தகத்தை திருப்பூர் மாநகரம் வழங்கி வருகிறது. தற்போது பின்னலாடை ஏற்றுமதிக்கு சாதகமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதே நிலை இன்னும் 5 ஆண்டுகள் நீடிக்கும் என்று நம்புகிறோம்.
கனடா நாட்டுடன் இந்தியா புதிய ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் காரணமாக, அங்கிருந்து பின்னலாடை தயாரிப்புக்கான ஒப்பந்தங்கள் திருப்பூருக்கு கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கனடாவைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவுடனும் ஒப்பந்தம் விரைவில் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
இது போன்ற சாதகமான சூழ்நிலைகளால் அடுத்த 3 ஆண்டுகளில் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் 20 முதல் 25 சதவீதம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
-
3 ஏழைகளின் மருத்துவ சிகிச்சைக்காக தனது 40வது மாத ஊதியத்தை அளித்த அதிமுக எம்.எல்.ஏ காமராஜ் கரூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராயபுரம் சட்டசபைத...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருப்பூர் மாவட்டம் திருப்பூர் மற்றும் பல்லடம் வட்ட பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள் திறப்பு நிகழ்ச்சி...
-
பொது நல வழக்கறிஞர் வேங்கை ராஜாவின் பிறந்த நாள் எளிமையான முறையில் கொண்டாடப்பட்டது பொதுநல வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான ஆர் வேங்கை ராஜாவின் பி...
0 comments:
Post a Comment