Saturday, May 02, 2015
உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்களில் வன விலங்குகள் கணக்கெடுப்புப் பணிகள் துவங்கியுள்ளன.
ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உள்பட்ட உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்களில் புலி, சிறுத்தை, யானை, மான், காட்டெருமை, செந்நாய் உள்ளிட்ட வன விலங்கினங்கள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில், ஆண்டுதோறும் இந்த வனச்சரகங்களில் யானைகள் குறித்த கணக்கெடுப்பு நடைபெறுவது வழக்கம்.
கடந்த ஆண்டு கணக்கெடுப்புப்படி, உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்களில் சுமார் 300 யானைகள் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. 216 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட உடுமலை, அமராவதி வனச்சரகங்களில் யானைகள் குறித்த கணக்கெடுப்புப் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இதற்காக, வனத் துறை அலுவலர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்ட வன அலுவலர் தன்ராஜ், வனச் சரகர்கள் தங்கராஜ் பன்னீர்செல்வம் (உடுமலை) மாரியப்பன்(அமராவதி) ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியது:
ஆண்டுதோறும் யானைகள் கால் தடம், நடமாட்டம் உள்ளிட்ட விசயங்களை அடிப்படையாக வைத்துக் கணக்கெடுப்புப் பணிகள் நடைபெறுவது வழக்கம். இதற்காக, நிகழாண்டில் புதிய முறை அமல்படுத்தப்படுகிறது. அதாவது யானைகளின் சாணத்தை வைத்து ஆய்வு நடத்தப்படுகிறது. 20 நாள்களுக்கு ஒரு முறை என 140 நாள்களுக்கு மொத்தம் 7 முறை யானைகளின் சாணத்தை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும். இதன் மூலமாக, யானைகளின் உணவு முறை, அதனுடைய ஜீரணத் தன்மை உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் ஆய்வு செய்யப்படவுள்ளது.
இதற்காக, உடுமலை வனச்சரகத்தில் 2 இடங்களும், அமராவதி வனச்சரகத்தில் 2 இடங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
தமிழக காவல்துறையில் 10 காவல் துணைக் கண்காணிப்பாளா்களை (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். ...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
0 comments:
Post a Comment