Saturday, May 02, 2015
உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்களில் வன விலங்குகள் கணக்கெடுப்புப் பணிகள் துவங்கியுள்ளன.
ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உள்பட்ட உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்களில் புலி, சிறுத்தை, யானை, மான், காட்டெருமை, செந்நாய் உள்ளிட்ட வன விலங்கினங்கள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில், ஆண்டுதோறும் இந்த வனச்சரகங்களில் யானைகள் குறித்த கணக்கெடுப்பு நடைபெறுவது வழக்கம்.
கடந்த ஆண்டு கணக்கெடுப்புப்படி, உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்களில் சுமார் 300 யானைகள் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. 216 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட உடுமலை, அமராவதி வனச்சரகங்களில் யானைகள் குறித்த கணக்கெடுப்புப் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இதற்காக, வனத் துறை அலுவலர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்ட வன அலுவலர் தன்ராஜ், வனச் சரகர்கள் தங்கராஜ் பன்னீர்செல்வம் (உடுமலை) மாரியப்பன்(அமராவதி) ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியது:
ஆண்டுதோறும் யானைகள் கால் தடம், நடமாட்டம் உள்ளிட்ட விசயங்களை அடிப்படையாக வைத்துக் கணக்கெடுப்புப் பணிகள் நடைபெறுவது வழக்கம். இதற்காக, நிகழாண்டில் புதிய முறை அமல்படுத்தப்படுகிறது. அதாவது யானைகளின் சாணத்தை வைத்து ஆய்வு நடத்தப்படுகிறது. 20 நாள்களுக்கு ஒரு முறை என 140 நாள்களுக்கு மொத்தம் 7 முறை யானைகளின் சாணத்தை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும். இதன் மூலமாக, யானைகளின் உணவு முறை, அதனுடைய ஜீரணத் தன்மை உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் ஆய்வு செய்யப்படவுள்ளது.
இதற்காக, உடுமலை வனச்சரகத்தில் 2 இடங்களும், அமராவதி வனச்சரகத்தில் 2 இடங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த போராடிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் உ...
-
தமிழகம் முழுவதும் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் இன்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். தமிழ கத்தி...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
-
திருச்சி 18.9.16 திருச்சி திருவானைக்கோவில் மேம்பால பணிக்காண மாற்றுபாதைக்கு முறைப்படி அதிகாரிகள் திட்டமிடாமல் ம...
-
அனைத்து வகையாக ஓட்டுனர்கள் மணப்பாறை வட்டாட்சியரிடம் கோரிக்கை கொரோனா ஊரடங்கால் அனைத்து வகையான தொழில்களும் முடங்கியுள்ள ச...
-
முசிறி அருகே குறி சொல்லி பிழைப்பு நடத்தும் ஜோதிட மக்களுக்கு நிவாரண உதவி திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே அரங்கூர் கி...
-
பிரேசில் நாடடைச் சேர்ந்த டாக்சி ஓட்டுநர் ஒருவர், தனது தலையில் கத்தி பாய்ந்த நிலையில் 3 மணி நேரம் வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார...
0 comments:
Post a Comment