Saturday, May 02, 2015
உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்களில் வன விலங்குகள் கணக்கெடுப்புப் பணிகள் துவங்கியுள்ளன.
ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உள்பட்ட உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்களில் புலி, சிறுத்தை, யானை, மான், காட்டெருமை, செந்நாய் உள்ளிட்ட வன விலங்கினங்கள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில், ஆண்டுதோறும் இந்த வனச்சரகங்களில் யானைகள் குறித்த கணக்கெடுப்பு நடைபெறுவது வழக்கம்.
கடந்த ஆண்டு கணக்கெடுப்புப்படி, உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்களில் சுமார் 300 யானைகள் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. 216 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட உடுமலை, அமராவதி வனச்சரகங்களில் யானைகள் குறித்த கணக்கெடுப்புப் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இதற்காக, வனத் துறை அலுவலர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்ட வன அலுவலர் தன்ராஜ், வனச் சரகர்கள் தங்கராஜ் பன்னீர்செல்வம் (உடுமலை) மாரியப்பன்(அமராவதி) ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியது:
ஆண்டுதோறும் யானைகள் கால் தடம், நடமாட்டம் உள்ளிட்ட விசயங்களை அடிப்படையாக வைத்துக் கணக்கெடுப்புப் பணிகள் நடைபெறுவது வழக்கம். இதற்காக, நிகழாண்டில் புதிய முறை அமல்படுத்தப்படுகிறது. அதாவது யானைகளின் சாணத்தை வைத்து ஆய்வு நடத்தப்படுகிறது. 20 நாள்களுக்கு ஒரு முறை என 140 நாள்களுக்கு மொத்தம் 7 முறை யானைகளின் சாணத்தை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும். இதன் மூலமாக, யானைகளின் உணவு முறை, அதனுடைய ஜீரணத் தன்மை உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் ஆய்வு செய்யப்படவுள்ளது.
இதற்காக, உடுமலை வனச்சரகத்தில் 2 இடங்களும், அமராவதி வனச்சரகத்தில் 2 இடங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் விரைவில் குணமடைய வேண்டி சிறப்பு யாகங்கள் நடைபெற்றது. வேலூர் மாவட்...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
0 comments:
Post a Comment