Saturday, May 02, 2015
உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்களில் வன விலங்குகள் கணக்கெடுப்புப் பணிகள் துவங்கியுள்ளன.
ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உள்பட்ட உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்களில் புலி, சிறுத்தை, யானை, மான், காட்டெருமை, செந்நாய் உள்ளிட்ட வன விலங்கினங்கள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில், ஆண்டுதோறும் இந்த வனச்சரகங்களில் யானைகள் குறித்த கணக்கெடுப்பு நடைபெறுவது வழக்கம்.
கடந்த ஆண்டு கணக்கெடுப்புப்படி, உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்களில் சுமார் 300 யானைகள் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. 216 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட உடுமலை, அமராவதி வனச்சரகங்களில் யானைகள் குறித்த கணக்கெடுப்புப் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இதற்காக, வனத் துறை அலுவலர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்ட வன அலுவலர் தன்ராஜ், வனச் சரகர்கள் தங்கராஜ் பன்னீர்செல்வம் (உடுமலை) மாரியப்பன்(அமராவதி) ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியது:
ஆண்டுதோறும் யானைகள் கால் தடம், நடமாட்டம் உள்ளிட்ட விசயங்களை அடிப்படையாக வைத்துக் கணக்கெடுப்புப் பணிகள் நடைபெறுவது வழக்கம். இதற்காக, நிகழாண்டில் புதிய முறை அமல்படுத்தப்படுகிறது. அதாவது யானைகளின் சாணத்தை வைத்து ஆய்வு நடத்தப்படுகிறது. 20 நாள்களுக்கு ஒரு முறை என 140 நாள்களுக்கு மொத்தம் 7 முறை யானைகளின் சாணத்தை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும். இதன் மூலமாக, யானைகளின் உணவு முறை, அதனுடைய ஜீரணத் தன்மை உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் ஆய்வு செய்யப்படவுள்ளது.
இதற்காக, உடுமலை வனச்சரகத்தில் 2 இடங்களும், அமராவதி வனச்சரகத்தில் 2 இடங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
பொங்கலூர் அருகே உள்ள எஸ்.வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகன் நடராஜ்(வயது46). இவர் கடந்த 2–ந்தேதி விஷம் குடித்துள்ளார். இதன...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
*புதிய வகை* *ஆன்லைன் மோசடி:* *டி.ஜி.பி. சைலேந்திர பாபு எச்சரிக்கை* தற்போது நடைபெறும் இந்த மோசடிக்கு ‘பாஸ் ஸ்கேம்’ என்று பெயர். தமிழக போலீ...
0 comments:
Post a Comment