Monday, December 29, 2014
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
காங்கயம் அருகே சிவன்மலையில் புகழ்பெற்ற சுப்பிரமணியசாமி மலைக்கோயில் உள்ளது. இந்து அறநிலையத் துறையினரால் நிர்வகிக்கப்படும் இக்கோயில், மாவட்டத்தின் முதன்மைக் கோவிலாகும். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் இங்கு வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
இக்கோயிலுக்கு செல்ல அடிவாரத்தில் இருந்து சுமார் 800 படிக்கட்டுகள் கொண்ட பாதை உள்ளது. இதன் வழியே தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் மலையில் ஏறி, சாமி தரிசனம் செய்கின்றனர். விழாக்காலங்களில் ஆயிரகணக்கான பக்தர்கள் படி வழியே ஏறிச் செல்வர். மலைக் கோயிலுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே தார்ச் சாலையும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் வழியே இரண்டு, நான்கு சக்கர வாகனங்களில் பக்தர்கள் சென்று வருகின்றனர். கோயில் நிர்வாகம் சார்பில் கட்டணப் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.
மூன்றாவது பாதையாக, யானைத்தடம் என அழைக்கப்படும் பாதை உள்ளது. இதிலும், பக்தர்கள் மலைக்கோயிலுக்கு சென்றுவருகின்றனர். இந்நிலையில், கடந்த சில வாரங்களாக இந்த யானைத்தடப் பாதை மூடப்பட்டுள்ளது.
இதுகுறித்து பக்தர்கள் கூறியதாவது:
யானைத்தடம் தான் பக்தர்கள் மலைக்கோயிலுக்கு செல்வதற்கு முதன்மை வழியாக இருந்தது. இதன் வழியாக அடிவாரத்தில் இருந்து பூஜைப் பொருள்களை யானையின் மீது வைத்து, எடுத்துச் சென்றனர். காலப் போக்கில் படிகள் அமைக்கப்பட்டன. அதன் பின்னர் தார்ச்சாலை வசதியும் ஏற்படுத்தப்பட்டது. இருப்பினும், இந்த யானைத்தடத்தின் வழியே இன்னமும் பக்தர்கள் சென்று வருகின்றனர்.
வயதானவர்கள், உடல் நலம் குன்றியவர்களால் 800 படிகளை ஏறுவது என்பது இயலாத காரியம். தார் சாலையில் வசதியுள்ளவர்கள் வாகனத்தில் செல்கின்றனர். சாதாரண நாள்களில் கூட்டம் சேர்ந்தால் தான் பேருந்தும் இயக்கப்படும். எனவே பக்தர்கள் எவ்வித சிரமமும் இன்றி கோயிலுக்கு செல்வதற்கு இந்த யானைத்தடமும்
அவசியமாகும். எனவே, கடந்த சில வாரங்களாக மூடப்பட்டுள்ள இந்த யானைத் தடப் பாதையை பக்தர்கள் பயன்பாட்டிற்காகத் திறந்துவிட வேண்டும் என்றனர்.
இது குறித்து கோயில் தரப்பில் கேட்டபோது, இந்தப் பாதையில் உள்ள மரங்கள் முறிந்து கிடப்பதால், பாதை மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. முன்புபோல, இந்த வழித்தடத்திலும் பக்தர்கள் சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பக்தர்களின் எதிர்பார்ப்பாகும்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 3.1.2016 நடைபெற்ற விழாவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலையில்லா வேட்டி ச...
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
திருப்பூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நாராயணன் பதவி உயர்வு பெற்று சேலம் மாவட்டத்திற்கு மாற்றலாகி சென்றுவிட்...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி 1.1.15 திருச்சி சர்வதேச விமானநிலையத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் குமார் வைஃபை இன்டர்நெட் சேவை இன்று துவக்கி வைத்தார். இந்தி...
-
ஊழல்வாதிகளை தண்டிக்க தமிழகத்தில் ‘லோக் அயுக்தா’ அமைப்பை ஏற்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் எ...
-
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தனது மகன் சண்முகபாண்டியன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பிற்காக கடந்த மாதம் மலேசியா சென்றார். படப்பிடிப்பில் ...
0 comments:
Post a Comment