Monday, December 29, 2014
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வருவதாக கட்சிசார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் புகார் தெரிவித்துள்ளது.
இது குறித்து சங்கத்தின் மாவட்ட தலைவர் காளிமுத்து கூறியதாவது:
தாராபுரம் மற்றும் காங்கயம் பகுதிகளில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக பால் உற்பத்தி அதிக அளவில் உள்ளது. பெரும்பாலான பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் விற்பனை செய்வதில்லை. தனியார் நிறுவனங்களுக்குதான் விற்பனை செய்து வருகின்றனர். சமீபத்தில் அரசு பாலுக்கு விலையை உயர்த்தி வழங்கியபோதும், கூட்டுறவு சங்கங்களுக்கு பால் வரத்து அதிகரிக்கவில்லை. இதற்கு காரணம் தனியார் நிறுவனங்கள் தோட்டங்களுக்கே வந்து பாலை வாங்கிச் செல்கிறார்கள். கூட்டுறவு சங்கங்களைப்போல கடுமையான விதிகள் கடைப்பிடிப்பதில்லை. குறிப்பிட்ட காலத்தில் பணம் வழங்கப்படுகிறது. இப்படி பல்வேறு சலுகைள் பால் உற்பத்தியாளர்களுக்கு கிடைத்து வருகிறது.
தற்போதைய சூழ்நிலையில் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் வரத்து குறைந்து வருவதால், ஆவின் நிறுவனத்திற்கு பிரச்னைகள் ஏற்படுகிறது. இதை சமாளிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தாராபுரம் மற்றும் காங்கயம் பகுதிகளில் தனியார் பால் நிறுவனங்களை கொள்முதல் செய்யவிடாமல் தடுத்து வருகின்றனர்.
அதிகாரிகளின் மிரட்டலுக்கு பயந்து ஒரு சில பகுதிகளில் தனியார் பால் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டு விட்டது. கூட்டுறவு சங்கங்களில் மட்டும்தான் பாலை விற்பனை செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் ஆளும் கட்சியினரைக் கொண்டு மிரட்டி வருகிறார்கள். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. எங்கு லாபம் அதிகம் கிடைக்கிறதோ, அங்குதான் பாலை விற்பனை செய்ய முடியும் எனவே அதிகாரிகளின் இந்த அராஜகபோக்கை கண்டித்து கட்சிசார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் போராட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளது என்று கூறினார்.
இது குறித்து சங்கத்தின் மாவட்ட தலைவர் காளிமுத்து கூறியதாவது:
தாராபுரம் மற்றும் காங்கயம் பகுதிகளில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக பால் உற்பத்தி அதிக அளவில் உள்ளது. பெரும்பாலான பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் விற்பனை செய்வதில்லை. தனியார் நிறுவனங்களுக்குதான் விற்பனை செய்து வருகின்றனர். சமீபத்தில் அரசு பாலுக்கு விலையை உயர்த்தி வழங்கியபோதும், கூட்டுறவு சங்கங்களுக்கு பால் வரத்து அதிகரிக்கவில்லை. இதற்கு காரணம் தனியார் நிறுவனங்கள் தோட்டங்களுக்கே வந்து பாலை வாங்கிச் செல்கிறார்கள். கூட்டுறவு சங்கங்களைப்போல கடுமையான விதிகள் கடைப்பிடிப்பதில்லை. குறிப்பிட்ட காலத்தில் பணம் வழங்கப்படுகிறது. இப்படி பல்வேறு சலுகைள் பால் உற்பத்தியாளர்களுக்கு கிடைத்து வருகிறது.
தற்போதைய சூழ்நிலையில் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் வரத்து குறைந்து வருவதால், ஆவின் நிறுவனத்திற்கு பிரச்னைகள் ஏற்படுகிறது. இதை சமாளிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தாராபுரம் மற்றும் காங்கயம் பகுதிகளில் தனியார் பால் நிறுவனங்களை கொள்முதல் செய்யவிடாமல் தடுத்து வருகின்றனர்.
அதிகாரிகளின் மிரட்டலுக்கு பயந்து ஒரு சில பகுதிகளில் தனியார் பால் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டு விட்டது. கூட்டுறவு சங்கங்களில் மட்டும்தான் பாலை விற்பனை செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் ஆளும் கட்சியினரைக் கொண்டு மிரட்டி வருகிறார்கள். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. எங்கு லாபம் அதிகம் கிடைக்கிறதோ, அங்குதான் பாலை விற்பனை செய்ய முடியும் எனவே அதிகாரிகளின் இந்த அராஜகபோக்கை கண்டித்து கட்சிசார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் போராட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளது என்று கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி அருகே பெருகமணி கிராமத்தில் தஞ்சை டாக்டர். எம். எஸ்.சுவாமிநாதன் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் இறுதியாண்டு மாணவி...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
உலகில் யாரும் சிந்திக்காத அற்புத திட்டங்களை அளித்து தமிழக மக்களை ஜெயலலிதா காத்து வருகிறார் என அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேச...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
வாஸன் கண் மருத்துவமனை டாக்டர் ஷிபு வர்கி அவர்கள் கண் ந் p றம் மாற்று அறுவை சிகிச்சை சரிசெய்யும் முறையில் பிரபல பாடகர் ...
-
திருச்சி துவாக்குடி அருகே உள்ள வாழவந்தான் கோட்டை துரை குவாரி 200 அடி பள்ளத்தில் சிறுவன் சடலம் மீட்பு . கொலையா? வேறு ஏதும் காரணமா? துவாக்குட...
-
திருச்சி மாவட்ட தலைமை விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர் ஆர்.கே.ராஜா தலைமையில் கோட்டை காவல்துறை உதவி ஆணையர் ஸ்ரீகாந்த், கொரோனா வைரஸ்...
-
பொள்ளாச்சி–பழனி இடையேயான ரெயில் சோதனை ஓட்டம் உடுமலை வழியாக நேற்று நடைபெற்றது. இதனால் உடுமலை மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பொள்ளாச்சி–திண்டு...
0 comments:
Post a Comment