Tuesday, February 03, 2015
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது.
திருப்பூர் கே.ஆர்.சி. சிட்டி சென்டரில் 10 நாட்கள் நடைபெற உள்ள இக்கண்காட்சியை மாநகராட்சி துணை மேயர் சு.குணசேகரன் ரிப்பன் வெட்டித் தொடங்கி வைத்தார். தொடக்க விழாவுக்கு திருப்பூர் தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கே.தங்கவேல் தலைமை வகித்தார். இதைத் தொடர்ந்து கண்காட்சி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 105 அரங்கங்களில் வண்ணமயமாக குவிக்கப்பட்டுள்ள புத்தகங்களை தலைவர்கள் பார்வையிட்டனர்.
தொடக்க விழா நிகழ்ச்சியில் பின்னல் புக் டிரஸ்ட் சார்பில் என்.சுப்பிரமணியம் வரவேற்றார். இதைத் தொடர்ந்து முதல் புத்தக விற்பனையை திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் ஏ.சக்திவேல் தொடக்கி வைக்க, முதல் புத்தகத்தை துணை மேயர் சு.குணசேகரன் பெற்றுக் கொண்டார். இந்த விழாவில் சைமா செயலாளர் எம்பரர் வி.பொன்னுசாமி, டீமா தலைவர் எம்.பி.முத்துரத்தினம், பில்டர்ஸ் அசோஷியேசன் ஆப் இந்தியா திருப்பூர் மையத் தலைவர் டி.சண்முகராஜா ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
முன்னதாக நிமிர்வு கலையகத்தின் பறை முழக்கக் கலைநிகழ்ச்சி கண்காட்சிக்கு வந்திருந்த அனைவரையும் வெகுவாக ஈர்த்தது. முதல் நாளிலேயே வாசகர்கள், பார்வையாளர்கள் அதிக அளவில் வந்திருந்தனர்.
புத்தகக் கண்காட்சி வரவேற்புக்குழுத் தலைவர் கே.ஜெயபால், செயலாளர் செ.முத்துக்கண்ணன், பொருளாளர் அ.நிசார் அகமது, துணைத் தலைவர்கள் அரிமா எம்.ஜீவானந்தம், லிங்க்ஸ் சௌகத் அலி, வீனஸ் கே.பழனிசாமி, என்.கோபாலகிருஷ்ணன், விழிப்பு நடராஜன், கே.உண்ணிகிருஷ்ணன், எஸ்.பொன்ராம், தாண்டவக்கோன், செ.நடேசன், டிஎம்எல் ஆறுமுகம், க.சுந்தரம், இணைச் செயலாளர்கள் ஆர்.ஈஸ்வரன், கே.காமராஜ், எஸ்.சுப்பிரமணியம், பி.சௌந்திரபாண்டியன், கீதாஞ்சலி கோவிந்தப்பன், எம்.ராஜகோபால், கேரவன் எஸ்.ஆறுமுகம், பழ.விஸ்வநாதன், ஆசிரியர் பாலு உள்பட நிர்வாகிகள் மற்றும் வரவேற்புக்குழுவினர் பங்கேற்றனர்.
தொடக்க விழா நிகழ்ச்சியின் நிறைவாக சி.சந்திரசேகர் நன்றி கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
திருப்பூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நாராயணன் பதவி உயர்வு பெற்று சேலம் மாவட்டத்திற்கு மாற்றலாகி சென்றுவிட்...
-
நீலாங்கரை அருகே கடற்கரையில் கல்லூரி மாணவியை கற்பழித்தது போலீஸ்காரரா? என்பது குறித்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தனிப்படை...
-
ஊழல்வாதிகளை தண்டிக்க தமிழகத்தில் ‘லோக் அயுக்தா’ அமைப்பை ஏற்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் எ...
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
சென்னையில் நேற்று இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பலத்த மழை சென்னையில் நேற்று காலை வெயில் கடுமையாக இருந்தது. மாலையில் லேசான ஈரப்பதமா...
-
. திருச்சி மாவட்ட பளுதூக்கும் சங்கம் மற்றும் எஸ் ஆர் எம் சுகாதார கிளப் இணைந்து 2018-ம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி திருச்சி திருவெறும்பூர...
-
மணப்பாறையில் காவல்துறை அனுமதி கடிதத்தோடு வெளிமாவட்டங்களுக்கு பயணிக்கும் மக்கள். இது சாத்தியமா? மேலதிகாரிகள் மற்றும் அரசு தான் இதற்...
0 comments:
Post a Comment