Tuesday, February 03, 2015
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது.
திருப்பூர் கே.ஆர்.சி. சிட்டி சென்டரில் 10 நாட்கள் நடைபெற உள்ள இக்கண்காட்சியை மாநகராட்சி துணை மேயர் சு.குணசேகரன் ரிப்பன் வெட்டித் தொடங்கி வைத்தார். தொடக்க விழாவுக்கு திருப்பூர் தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கே.தங்கவேல் தலைமை வகித்தார். இதைத் தொடர்ந்து கண்காட்சி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 105 அரங்கங்களில் வண்ணமயமாக குவிக்கப்பட்டுள்ள புத்தகங்களை தலைவர்கள் பார்வையிட்டனர்.
தொடக்க விழா நிகழ்ச்சியில் பின்னல் புக் டிரஸ்ட் சார்பில் என்.சுப்பிரமணியம் வரவேற்றார். இதைத் தொடர்ந்து முதல் புத்தக விற்பனையை திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் ஏ.சக்திவேல் தொடக்கி வைக்க, முதல் புத்தகத்தை துணை மேயர் சு.குணசேகரன் பெற்றுக் கொண்டார். இந்த விழாவில் சைமா செயலாளர் எம்பரர் வி.பொன்னுசாமி, டீமா தலைவர் எம்.பி.முத்துரத்தினம், பில்டர்ஸ் அசோஷியேசன் ஆப் இந்தியா திருப்பூர் மையத் தலைவர் டி.சண்முகராஜா ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
முன்னதாக நிமிர்வு கலையகத்தின் பறை முழக்கக் கலைநிகழ்ச்சி கண்காட்சிக்கு வந்திருந்த அனைவரையும் வெகுவாக ஈர்த்தது. முதல் நாளிலேயே வாசகர்கள், பார்வையாளர்கள் அதிக அளவில் வந்திருந்தனர்.
புத்தகக் கண்காட்சி வரவேற்புக்குழுத் தலைவர் கே.ஜெயபால், செயலாளர் செ.முத்துக்கண்ணன், பொருளாளர் அ.நிசார் அகமது, துணைத் தலைவர்கள் அரிமா எம்.ஜீவானந்தம், லிங்க்ஸ் சௌகத் அலி, வீனஸ் கே.பழனிசாமி, என்.கோபாலகிருஷ்ணன், விழிப்பு நடராஜன், கே.உண்ணிகிருஷ்ணன், எஸ்.பொன்ராம், தாண்டவக்கோன், செ.நடேசன், டிஎம்எல் ஆறுமுகம், க.சுந்தரம், இணைச் செயலாளர்கள் ஆர்.ஈஸ்வரன், கே.காமராஜ், எஸ்.சுப்பிரமணியம், பி.சௌந்திரபாண்டியன், கீதாஞ்சலி கோவிந்தப்பன், எம்.ராஜகோபால், கேரவன் எஸ்.ஆறுமுகம், பழ.விஸ்வநாதன், ஆசிரியர் பாலு உள்பட நிர்வாகிகள் மற்றும் வரவேற்புக்குழுவினர் பங்கேற்றனர்.
தொடக்க விழா நிகழ்ச்சியின் நிறைவாக சி.சந்திரசேகர் நன்றி கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
திருச்சி மாநகராட்சியில் துணை மேயர் மீது 44 வா ர்டு மாமன்ற உறுப்பினர் பகிரங்க குற்றச்சாட்டு திருச்சி மாநகராட்சி கூட்டம் இன்...
-
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...
-
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...
-
மதுரை மாநகர், புறநகர், வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக ...
-
அங்கீகாரம் இல்லாத மருத்துவ படிப்பு சுகாதாரத்துறை அமைச்சருக்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை, உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் எத...
-
திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்காக திருப்பூர் பிக்-பஜார் சார்பில் ரத்ததான முகாம் எம்.ஜி.பி.பஸ் நிறுத்தம் அருகில் உள்ள ப...
-
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 13வது மாநில மாநாட்டை முன்னிட்டு கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் கட்டுரை, கவிதை போட...
0 comments:
Post a Comment