Tuesday, February 03, 2015
திருப்பூர் மாவட்ட காவல்துறையும், மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளும் இணைந்து நடத்தும் காவல்துறை-பொதுமக்கள் நல்லுறவு 5 நாள் கிரிக்கெட் போட்டி நாளை பல்லடம் புரொபஷனல் கல்லூரியில் துவங்குகிறது.
திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் காவல்துறை-பொதுமக்களி டையே நல்லுறவு ஏற்படுத்தும் விதமாக, மாவட்டத்தில் உள்ள கல்லூரிகள் மற்றும் காவல்துறை பங்கேற்கும் கிரிக்கெட் போட்டிகள்- 2015 நாளை 03.02.2015 முதல் 07.02.2015 வரை தொடந்து 5 நாட்கள் நடைபெற உள்ளது. இப்போட்டிகள் பல்லடம் புரொபஷனல் கல்லூரி மற்றும் உடுமலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதனங்களில் நடைபெற உள்ளது. இதில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, அவினாசி மஹாராஜா பொறியியல் கல்லூரி, பல்லடம் பார்க் கல்லூரி, புரொபஷனல் கல்லூரி, ஸ்கேட் கல்லூரி, ஏஞ்சல் கல்லூரி, ஜெய் ஸ்ரீ ராம் கல்லூரி, ஏ. ஜி கலை கல்லூரி, உடுமலை அரசு கலை & அறிவியல் கல்லூரி, வித்யசாகர் கல்லூரி, தாராபுரம் மஹாராணி பாலிடெக்னிக் கல்லூரி, பிஷப் த்ரோப் கலை & அறிவியல் கல்லூரி, காங்கயம் ஈ.பி.ஈ.டி குழும பயிலகம், ஊத்துக்குளி ராமநாதன் பொறியல் கல்லூரி, சசூரி பொறியல் கல்லூரி மற்றும் வெள்ளகோவில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய 15 கல்லூரிகள் மற்றும் திருப்பூர் மாவட்ட காவல் துறை சார்பான அணியும் கலந்து கொள்கின்றன.
முதல் போட்டி பல்லடம் புரொபஷனல் கல்லூரியில் நாளை 3ம் தேதியன்று துவங்கிறது.இந்நிகழ் ச்சியில் கோவை சரக காவல்துறை துணைத்தலைவர் ஆயுஷ்மணி திவாரி,திருப்பூர் மாவட்ட கிரிக்கெட் கழகத்தின் தலைவர் சந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கின்றனர்.போட்டியை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அமித் குமார் சிங் துவக்கி வைக்கிறார். மேற்கண்டவாறு மாவட்ட காவல்துறை அனுப்ப்பியுள்ள பத்திரிக்கை செய்தியில் தெரிவித்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
திருப்பூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நாராயணன் பதவி உயர்வு பெற்று சேலம் மாவட்டத்திற்கு மாற்றலாகி சென்றுவிட்...
-
ஊழல்வாதிகளை தண்டிக்க தமிழகத்தில் ‘லோக் அயுக்தா’ அமைப்பை ஏற்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் எ...
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
சென்னையில் நேற்று இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பலத்த மழை சென்னையில் நேற்று காலை வெயில் கடுமையாக இருந்தது. மாலையில் லேசான ஈரப்பதமா...
-
. திருச்சி மாவட்ட பளுதூக்கும் சங்கம் மற்றும் எஸ் ஆர் எம் சுகாதார கிளப் இணைந்து 2018-ம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி திருச்சி திருவெறும்பூர...
-
மணப்பாறையில் காவல்துறை அனுமதி கடிதத்தோடு வெளிமாவட்டங்களுக்கு பயணிக்கும் மக்கள். இது சாத்தியமா? மேலதிகாரிகள் மற்றும் அரசு தான் இதற்...
-
திருச்சிராப்பள்ளியில் வாக்களிப்பதின் அவசியத்தை வலியுறுத்தி மாபெரும் கையெழுத்து இயக்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் பழனிசாமிதொடங்கிவைத்...
0 comments:
Post a Comment