Tuesday, February 03, 2015
திருப்பூர் மாவட்ட காவல்துறையும், மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளும் இணைந்து நடத்தும் காவல்துறை-பொதுமக்கள் நல்லுறவு 5 நாள் கிரிக்கெட் போட்டி நாளை பல்லடம் புரொபஷனல் கல்லூரியில் துவங்குகிறது.
திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் காவல்துறை-பொதுமக்களி டையே நல்லுறவு ஏற்படுத்தும் விதமாக, மாவட்டத்தில் உள்ள கல்லூரிகள் மற்றும் காவல்துறை பங்கேற்கும் கிரிக்கெட் போட்டிகள்- 2015 நாளை 03.02.2015 முதல் 07.02.2015 வரை தொடந்து 5 நாட்கள் நடைபெற உள்ளது. இப்போட்டிகள் பல்லடம் புரொபஷனல் கல்லூரி மற்றும் உடுமலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதனங்களில் நடைபெற உள்ளது. இதில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, அவினாசி மஹாராஜா பொறியியல் கல்லூரி, பல்லடம் பார்க் கல்லூரி, புரொபஷனல் கல்லூரி, ஸ்கேட் கல்லூரி, ஏஞ்சல் கல்லூரி, ஜெய் ஸ்ரீ ராம் கல்லூரி, ஏ. ஜி கலை கல்லூரி, உடுமலை அரசு கலை & அறிவியல் கல்லூரி, வித்யசாகர் கல்லூரி, தாராபுரம் மஹாராணி பாலிடெக்னிக் கல்லூரி, பிஷப் த்ரோப் கலை & அறிவியல் கல்லூரி, காங்கயம் ஈ.பி.ஈ.டி குழும பயிலகம், ஊத்துக்குளி ராமநாதன் பொறியல் கல்லூரி, சசூரி பொறியல் கல்லூரி மற்றும் வெள்ளகோவில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய 15 கல்லூரிகள் மற்றும் திருப்பூர் மாவட்ட காவல் துறை சார்பான அணியும் கலந்து கொள்கின்றன.
முதல் போட்டி பல்லடம் புரொபஷனல் கல்லூரியில் நாளை 3ம் தேதியன்று துவங்கிறது.இந்நிகழ் ச்சியில் கோவை சரக காவல்துறை துணைத்தலைவர் ஆயுஷ்மணி திவாரி,திருப்பூர் மாவட்ட கிரிக்கெட் கழகத்தின் தலைவர் சந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கின்றனர்.போட்டியை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அமித் குமார் சிங் துவக்கி வைக்கிறார். மேற்கண்டவாறு மாவட்ட காவல்துறை அனுப்ப்பியுள்ள பத்திரிக்கை செய்தியில் தெரிவித்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
திருச்சி மாநகராட்சியில் துணை மேயர் மீது 44 வா ர்டு மாமன்ற உறுப்பினர் பகிரங்க குற்றச்சாட்டு திருச்சி மாநகராட்சி கூட்டம் இன்...
-
திருச்சி இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றதை மதுரையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்ப...
-
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...
-
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...
-
மதுரை மாநகர், புறநகர், வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக ...
0 comments:
Post a Comment