Sunday, February 01, 2015
மதுரை வாழைத்தோப்பு பகுதியை சேர்ந்த கோதண்டராமன் மகன் குருமணி (வயது25), கம்பி கட்டும் தொழிலாளி. திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.
தி.மு.க. பிரமுகர் பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் போலீசாரால் தேடப்படும் அட்டாக் பாண்டியின் தரப்பினருக்கும், குருமணிக்கும் தகராறு இருந்து வந்தது. இதனால் அவ்வப்போது மோதிக் கொண்டனர்.
இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு குருமணி வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் குருமணியை கண்டுபிடிக்க முடியவில்லை.
இது குறித்து தெற்கு வாசல் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து குருமணியை பற்றி விசாரித்து தேடி வந்தனர்.
குருமணியுடன் மோதியவர்களை பிடித்து விசாரித்த போது குருமணி கடத்தி கொல்லப்பட்டது தெரிய வந்தது. இதை தொடர்ந்து குருமணியிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படும் அட்டாக் பாண்டியின் கூட்டாளியான சந்தானம் உள்பட 4 பேரை பிடித்து மேலும் துருவி, துருவி விசாரித்தனர்.
இந்த விசாரணையில் வாலிபர் குருமணியை சந்தானம் உள்பட 9 பேர் சேர்ந்து கடத்தி அடித்து கொன்றுவிட்டு உடலை மேலஅனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள அடர்ந்த சீமை கருவேல் மரங்களுக்கு மத்தியில் எரித்தனர். பின்னர் உடல் முழுவதும் எரிந்ததும் அதன் அடையாளம் தெரியாதபடி சாம்பலை அள்ளி அருகில் உள்ள குளத்தில் கரைத்தது தெரியவந்தது. இதையடுத்து அட்டாக் பாண்டியின் கூட்டாளிகளான சந்தானம், திருப்பதி, முத்துமணி, நயினா ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதை தொடர்ந்து கொலை நடந்த இடம், உடல் எரிக்கப்பட்ட இடம், சாம்பல் கரைக்கப்பட்ட குளம் ஆகியவற்றை போலீஸ் அதிகாரிகள் பார்வையிட்டனர்.
இந்த கொலைக்கும், அட்டாக் பாண்டிக்கும் தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
தி.மு.க. பிரமுகர் பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் போலீசாரால் தேடப்படும் அட்டாக் பாண்டியின் தரப்பினருக்கும், குருமணிக்கும் தகராறு இருந்து வந்தது. இதனால் அவ்வப்போது மோதிக் கொண்டனர்.
இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு குருமணி வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் குருமணியை கண்டுபிடிக்க முடியவில்லை.
இது குறித்து தெற்கு வாசல் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து குருமணியை பற்றி விசாரித்து தேடி வந்தனர்.
குருமணியுடன் மோதியவர்களை பிடித்து விசாரித்த போது குருமணி கடத்தி கொல்லப்பட்டது தெரிய வந்தது. இதை தொடர்ந்து குருமணியிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படும் அட்டாக் பாண்டியின் கூட்டாளியான சந்தானம் உள்பட 4 பேரை பிடித்து மேலும் துருவி, துருவி விசாரித்தனர்.
இந்த விசாரணையில் வாலிபர் குருமணியை சந்தானம் உள்பட 9 பேர் சேர்ந்து கடத்தி அடித்து கொன்றுவிட்டு உடலை மேலஅனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள அடர்ந்த சீமை கருவேல் மரங்களுக்கு மத்தியில் எரித்தனர். பின்னர் உடல் முழுவதும் எரிந்ததும் அதன் அடையாளம் தெரியாதபடி சாம்பலை அள்ளி அருகில் உள்ள குளத்தில் கரைத்தது தெரியவந்தது. இதையடுத்து அட்டாக் பாண்டியின் கூட்டாளிகளான சந்தானம், திருப்பதி, முத்துமணி, நயினா ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதை தொடர்ந்து கொலை நடந்த இடம், உடல் எரிக்கப்பட்ட இடம், சாம்பல் கரைக்கப்பட்ட குளம் ஆகியவற்றை போலீஸ் அதிகாரிகள் பார்வையிட்டனர்.
இந்த கொலைக்கும், அட்டாக் பாண்டிக்கும் தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
திருச்சி மாநகராட்சியில் துணை மேயர் மீது 44 வா ர்டு மாமன்ற உறுப்பினர் பகிரங்க குற்றச்சாட்டு திருச்சி மாநகராட்சி கூட்டம் இன்...
-
திருச்சி இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றதை மதுரையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்ப...
-
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...
-
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...
-
மதுரை மாநகர், புறநகர், வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக ...
0 comments:
Post a Comment