Sunday, February 01, 2015
மதுரை வாழைத்தோப்பு பகுதியை சேர்ந்த கோதண்டராமன் மகன் குருமணி (வயது25), கம்பி கட்டும் தொழிலாளி. திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.
தி.மு.க. பிரமுகர் பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் போலீசாரால் தேடப்படும் அட்டாக் பாண்டியின் தரப்பினருக்கும், குருமணிக்கும் தகராறு இருந்து வந்தது. இதனால் அவ்வப்போது மோதிக் கொண்டனர்.
இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு குருமணி வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் குருமணியை கண்டுபிடிக்க முடியவில்லை.
இது குறித்து தெற்கு வாசல் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து குருமணியை பற்றி விசாரித்து தேடி வந்தனர்.
குருமணியுடன் மோதியவர்களை பிடித்து விசாரித்த போது குருமணி கடத்தி கொல்லப்பட்டது தெரிய வந்தது. இதை தொடர்ந்து குருமணியிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படும் அட்டாக் பாண்டியின் கூட்டாளியான சந்தானம் உள்பட 4 பேரை பிடித்து மேலும் துருவி, துருவி விசாரித்தனர்.
இந்த விசாரணையில் வாலிபர் குருமணியை சந்தானம் உள்பட 9 பேர் சேர்ந்து கடத்தி அடித்து கொன்றுவிட்டு உடலை மேலஅனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள அடர்ந்த சீமை கருவேல் மரங்களுக்கு மத்தியில் எரித்தனர். பின்னர் உடல் முழுவதும் எரிந்ததும் அதன் அடையாளம் தெரியாதபடி சாம்பலை அள்ளி அருகில் உள்ள குளத்தில் கரைத்தது தெரியவந்தது. இதையடுத்து அட்டாக் பாண்டியின் கூட்டாளிகளான சந்தானம், திருப்பதி, முத்துமணி, நயினா ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதை தொடர்ந்து கொலை நடந்த இடம், உடல் எரிக்கப்பட்ட இடம், சாம்பல் கரைக்கப்பட்ட குளம் ஆகியவற்றை போலீஸ் அதிகாரிகள் பார்வையிட்டனர்.
இந்த கொலைக்கும், அட்டாக் பாண்டிக்கும் தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
தி.மு.க. பிரமுகர் பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் போலீசாரால் தேடப்படும் அட்டாக் பாண்டியின் தரப்பினருக்கும், குருமணிக்கும் தகராறு இருந்து வந்தது. இதனால் அவ்வப்போது மோதிக் கொண்டனர்.
இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு குருமணி வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் குருமணியை கண்டுபிடிக்க முடியவில்லை.
இது குறித்து தெற்கு வாசல் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து குருமணியை பற்றி விசாரித்து தேடி வந்தனர்.
குருமணியுடன் மோதியவர்களை பிடித்து விசாரித்த போது குருமணி கடத்தி கொல்லப்பட்டது தெரிய வந்தது. இதை தொடர்ந்து குருமணியிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படும் அட்டாக் பாண்டியின் கூட்டாளியான சந்தானம் உள்பட 4 பேரை பிடித்து மேலும் துருவி, துருவி விசாரித்தனர்.
இந்த விசாரணையில் வாலிபர் குருமணியை சந்தானம் உள்பட 9 பேர் சேர்ந்து கடத்தி அடித்து கொன்றுவிட்டு உடலை மேலஅனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள அடர்ந்த சீமை கருவேல் மரங்களுக்கு மத்தியில் எரித்தனர். பின்னர் உடல் முழுவதும் எரிந்ததும் அதன் அடையாளம் தெரியாதபடி சாம்பலை அள்ளி அருகில் உள்ள குளத்தில் கரைத்தது தெரியவந்தது. இதையடுத்து அட்டாக் பாண்டியின் கூட்டாளிகளான சந்தானம், திருப்பதி, முத்துமணி, நயினா ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதை தொடர்ந்து கொலை நடந்த இடம், உடல் எரிக்கப்பட்ட இடம், சாம்பல் கரைக்கப்பட்ட குளம் ஆகியவற்றை போலீஸ் அதிகாரிகள் பார்வையிட்டனர்.
இந்த கொலைக்கும், அட்டாக் பாண்டிக்கும் தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
திருப்பூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நாராயணன் பதவி உயர்வு பெற்று சேலம் மாவட்டத்திற்கு மாற்றலாகி சென்றுவிட்...
-
ஊழல்வாதிகளை தண்டிக்க தமிழகத்தில் ‘லோக் அயுக்தா’ அமைப்பை ஏற்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் எ...
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
சென்னையில் நேற்று இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பலத்த மழை சென்னையில் நேற்று காலை வெயில் கடுமையாக இருந்தது. மாலையில் லேசான ஈரப்பதமா...
-
. திருச்சி மாவட்ட பளுதூக்கும் சங்கம் மற்றும் எஸ் ஆர் எம் சுகாதார கிளப் இணைந்து 2018-ம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி திருச்சி திருவெறும்பூர...
-
மணப்பாறையில் காவல்துறை அனுமதி கடிதத்தோடு வெளிமாவட்டங்களுக்கு பயணிக்கும் மக்கள். இது சாத்தியமா? மேலதிகாரிகள் மற்றும் அரசு தான் இதற்...
-
திருச்சிராப்பள்ளியில் வாக்களிப்பதின் அவசியத்தை வலியுறுத்தி மாபெரும் கையெழுத்து இயக்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் பழனிசாமிதொடங்கிவைத்...
0 comments:
Post a Comment