Sunday, February 01, 2015

கேரளாவில் தாக்குதல் நடத்தும் மாவோயிஸ்டுகள் தமிழகத்தில் ஊடுருவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அதிரடிப்படை ஐ.ஜி. கூறினார்.
தமிழகம் மற்றும் கேரள எல்லையில் ஊடுருவியுள்ள மாவோயிஸ்டுகள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த டிசம்பர் மாதம் கேரள மாநிலத்தின் அட்டப்பாடி வனத்துறை அலுவலகத்திற்கு அவர்கள் தீ வைத்தனர். இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதனால் மாவோயிஸ்டுகள் கேரளா, தமிழகத்தில் தாக்குதல் நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதை உறுதி செய்யும் வகையில் கேரளாவின் கண்ணனூர் கல்குவாரி மற்றும் உணவு விடுதிகளில் தாக்குதல் நடந்தது. இதனால் இரு மாநிலங்களிலும் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த மாதம் (ஜனவரி) போலீசார் குருக்கி மலை, பங்கிதமால் மலைப்பகுதிகளை கண்காணித்தனர். அப்போது மாவோயிஸ்டுகள் சிலர் நடமாடுவது கண்காணிப்பு காமிராவில் பதிவானது. எனவே தமிழகத்தில் மாவோயிஸ்டுகள் ஊடுருவாமல் தடுப்பது குறித்து மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. சிறப்பு அதிரடிப்படை ஐ.ஜி. சங்கர் ஜீவால் தலைமை தாங்கினார்.
தென் மண்டல ஐ.ஜி. அபய்குமார்சிங் மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ், டி.ஐ.ஜி.க்கள் ஆனந்த்குமார், சோமானி, அமீத்சான், அறிவுச்செல்வம், போலீஸ் சூப்பிரண்டுகள் விஜயேந்திர பிதாரி, மகேஸ்வரன், சரவணன், மகேஷ், அதிரடிப்படை போலீஸ் சூப்பிரண்டு கருப்பசாமி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அப்போது ஐ.ஜி. சங்கர் ஜீவால், கேரளாவில் தாக்குதல் நடத்தும் மாவோயிஸ்டுகள் தமிழகத்தில் ஊடுருவாமல் தடுக்கவும், அவர்கள் நடமாட்டத்தை கண்காணிக்கவும் போலீசார் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்று தெரிவித்தார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
திருப்பூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நாராயணன் பதவி உயர்வு பெற்று சேலம் மாவட்டத்திற்கு மாற்றலாகி சென்றுவிட்...
-
ஊழல்வாதிகளை தண்டிக்க தமிழகத்தில் ‘லோக் அயுக்தா’ அமைப்பை ஏற்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் எ...
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
சென்னையில் நேற்று இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பலத்த மழை சென்னையில் நேற்று காலை வெயில் கடுமையாக இருந்தது. மாலையில் லேசான ஈரப்பதமா...
-
. திருச்சி மாவட்ட பளுதூக்கும் சங்கம் மற்றும் எஸ் ஆர் எம் சுகாதார கிளப் இணைந்து 2018-ம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி திருச்சி திருவெறும்பூர...
-
மணப்பாறையில் காவல்துறை அனுமதி கடிதத்தோடு வெளிமாவட்டங்களுக்கு பயணிக்கும் மக்கள். இது சாத்தியமா? மேலதிகாரிகள் மற்றும் அரசு தான் இதற்...
-
திருச்சிராப்பள்ளியில் வாக்களிப்பதின் அவசியத்தை வலியுறுத்தி மாபெரும் கையெழுத்து இயக்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் பழனிசாமிதொடங்கிவைத்...
0 comments:
Post a Comment