Sunday, February 01, 2015
கேரளாவில் தாக்குதல் நடத்தும் மாவோயிஸ்டுகள் தமிழகத்தில் ஊடுருவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அதிரடிப்படை ஐ.ஜி. கூறினார்.
தமிழகம் மற்றும் கேரள எல்லையில் ஊடுருவியுள்ள மாவோயிஸ்டுகள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த டிசம்பர் மாதம் கேரள மாநிலத்தின் அட்டப்பாடி வனத்துறை அலுவலகத்திற்கு அவர்கள் தீ வைத்தனர். இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதனால் மாவோயிஸ்டுகள் கேரளா, தமிழகத்தில் தாக்குதல் நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதை உறுதி செய்யும் வகையில் கேரளாவின் கண்ணனூர் கல்குவாரி மற்றும் உணவு விடுதிகளில் தாக்குதல் நடந்தது. இதனால் இரு மாநிலங்களிலும் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த மாதம் (ஜனவரி) போலீசார் குருக்கி மலை, பங்கிதமால் மலைப்பகுதிகளை கண்காணித்தனர். அப்போது மாவோயிஸ்டுகள் சிலர் நடமாடுவது கண்காணிப்பு காமிராவில் பதிவானது. எனவே தமிழகத்தில் மாவோயிஸ்டுகள் ஊடுருவாமல் தடுப்பது குறித்து மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. சிறப்பு அதிரடிப்படை ஐ.ஜி. சங்கர் ஜீவால் தலைமை தாங்கினார்.
தென் மண்டல ஐ.ஜி. அபய்குமார்சிங் மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ், டி.ஐ.ஜி.க்கள் ஆனந்த்குமார், சோமானி, அமீத்சான், அறிவுச்செல்வம், போலீஸ் சூப்பிரண்டுகள் விஜயேந்திர பிதாரி, மகேஸ்வரன், சரவணன், மகேஷ், அதிரடிப்படை போலீஸ் சூப்பிரண்டு கருப்பசாமி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அப்போது ஐ.ஜி. சங்கர் ஜீவால், கேரளாவில் தாக்குதல் நடத்தும் மாவோயிஸ்டுகள் தமிழகத்தில் ஊடுருவாமல் தடுக்கவும், அவர்கள் நடமாட்டத்தை கண்காணிக்கவும் போலீசார் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்று தெரிவித்தார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
Trichy kala bairavar koil spl pooja AiAdmk thalamai korada manoharan and thunai mayer sreenivasan participate
-
திருப்பூர் அருகே சாலை மறியல் செய்தவர்களை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் சமரசம் செய்து அவர்களது கோரிக்கையை உடனடியாக தீர்த்து வைத்தார்.இது பற்...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
த்ரிஷா நடிகையாக அறிமுகமாகி பத்து ஆண்டுகள் கழித்தே கன்னடத் திரையுலகில் அறிமுகமானார். முன்னணி நடிகரான புனித் ராஜ்குமார் ஜோடியாக த்ரிஷா அறிமு...
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
திருப்பூரில், சமையல் கியாஸ் மானியத்திற்கான பதிவு செய்யும் சிறப்பு முகாமை துணை மேயர் குணசேகரன் தொடக்கி வைத்தார்.சமையல் கியாஸ் மானியத்தை பெ...
-
திருச்சி திருவானைக்கோவில் அருகே உள்ள சத்குரு மடம் உள்ளது அதன் தனிச்சிறப்பு அதிசயம் பற்றி கூறியது
0 comments:
Post a Comment