Sunday, February 01, 2015

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் பாரதிய ஜனதா உறுப்பினர் சேர்க்கை கலந்தாய்வு கூட்டம் இன்று (சனிக்கிழமை) காலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 21 மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். சிறப்பு அழைப்பாளர்களாக கட்சியின் தேசிய செயலாளர் முரளீதரராவ், மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் புதிய உறுப்பினர்களுக்கு கட்சியின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. புதிய உறுப்பினர்களை சேர்க்கவும் அறிவுறுத்தப்பட்டது.
தொடர்ந்து தேசிய செயலாளர் முரளீதரராவ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
பாரதிய ஜனதாவின் மத்திய அரசை மக்கள் வரவேற்று உள்ளனர். தமிழகத்தில் 60 லட்சம் உறுப்பினர்களை கட்சியில் சேர்க்க திட்டம் வகுத்துள்ளோம். அதற்கான பணிகள் நடந்து வருகிறது. தற்போது தமிழகத்தில் அ.தி.மு.க. அரசு, செயல்படாத அரசாக உள்ளது.
இதனால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். தி.மு.க.விலும் பிரச்சனைகள் உள்ளன. எனவே தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா நல்ல வளர்ச்சி பெற்றுள்ளது.
தற்போதைய மத்திய ஆட்சியில்தான் மீனவர் பிரச்சனை தீர்க்கப்பட்டது. இதை முழுவதுமாக நீக்க மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். இந்தியாவில் உள்ள அகதிகளில் விருப்பப்படுவோரை அவர்களது நாட்டிற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் தே.மு.தி.க. ஆதரவு அளித்துள்ளது. ஆனால் அவர்கள் பிரசாரத்திற்கு வருவார்களா? என்பது அவர்களது விருப்பம்.
இதுகுறித்து தமிழக பா.ஜ.க. தலைவர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது அவரிடம் ஜெயந்தி நடராஜன் குறித்து கருத்து கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த முரளிதரராவ், அவரை பாரதிய ஜனதா தலைவர்கள் யாரும் சந்திக்கவில்லை. அவர் பாதிரய ஜனதாவில் இணைவாரா? என்பது அவருடைய விருப்பம். காங்கிரசில் இருந்து விலகியதற்கான காரணத்தை ஜெயந்தி நடராஜன் தெளிவாக தெரிவித்துள்ளார் என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
திருச்சி மாநகராட்சியில் துணை மேயர் மீது 44 வா ர்டு மாமன்ற உறுப்பினர் பகிரங்க குற்றச்சாட்டு திருச்சி மாநகராட்சி கூட்டம் இன்...
-
திருச்சி இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றதை மதுரையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்ப...
-
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...
-
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...
-
மதுரை மாநகர், புறநகர், வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக ...
0 comments:
Post a Comment