Monday, December 28, 2015
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய்யப்பட்டார்.
தேர்தல் முன்விரோதம் காரணமாக 2013–ம் ஆண்டு பட்டமுத்து, சண்முகம் ஆகிய இருவர் கொலை செய்யப்பட்டனர். இதற்கு பழிக்கு பழியாக மணிகண்டன் என்பவரை கொலை செய்ய நடந்த முயற்சியில் சுரேஷ் பலியானார்.
இந்த சம்பவம் குறித்து செய்துங்கநல்லூர் போலீசார் வழக்குபதிவு செய்தனர். இந்த கொலை வழக்கில் தொடர்புடையவர்களை பிடிக்க ஸ்ரீவைகுண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு விஜயகுமார், ஸ்ரீவைகுண்டம் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ், செய்துங்கநல்லூர் இன்ஸ்பெக்டர் ராஜசுந்தரம் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் பட்டமுத்துவின் சகோதரர்கள் சுடலைமுத்து, ரமேஷ், சண்முகத்தின் மகன்கள் அழகு கிருஷ்ணன், வீரபாகு, மற்றொரு முருகன், ஆச்சிமுத்து மற்றும் பலர் மணிகண்டன் உறவினர்கள் மீது தாக்குதல் நடத்தியது தெரியவந்தது. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் கால்வாய் பஞ்சாயத்து தலைவி ராஜவடிவின் கணவரும், முன்னாள் பஞ்சாயத்து தலைவருமான ஆச்சிமுத்துவை நேற்று கைது செய்தனர்.
இந்த நிலையில் மோதல் சம்பவம் குறித்து கொலை செய்யப்பட்ட சுரேஷ் தரப்பை சேர்ந்த மணிகண்டன் மற்றும் அவரது உறவினர்கள் 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இதில் மணிகண்டனின் சகோதரர்கள் அய்யப்பன் (43), சுடலைமுத்து (35), முத்துராமன் (31) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இருதரப்பிலும் பலரை தேடி வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாஷிங்டன், அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஒபாமவை சந்தித்தார். வெள்ளை மாளிகையில்,...
-
''உடல் நாம் சொல்வதைக் கேட்க வேண்டுமானால், நான்கு விஷயங்களில் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டும். ஒன்று... பசி வந்து சாப்பிட வேண்ட...
-
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சத்தியமங்கலம், பு.புளியம்பட்டி, பவானிசாகர் மற்றும் வனப்ப...
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
கோவை சிங்கநல்லூர் தொகுதியில் உள்ள நீலிகோணம்பாளையம் பகுதியில் அமைச்சர் ப.மோகன், எம்.எல்.ஏ.,சின்னசாமி ஆகியோர் மேயர் வேட்பாளர் கணபதி ராஜ்குமா...
-
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மூன்றாம் சனிக்கிழமை சர்வதேச கடற்கரையோர துப்புரவு நாளாக அனுசரிக்கப்படுகிறது . இந்த...
-
ஜெயலலிதாவுக்கு ஆதர வாக தமிழ் திரையுலகினர் சென்னையில் இன்று உண்ணாவிரத போராட்டம் தொடங்கினார்கள். அ.தி.மு.க. பொதுச்செய லாளர் ஜெயலலிதாவுக்கு ச...
-
தமிழக முதல்வர், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளித்த பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டார். இதற்காக மக்கள், கடந்த மக்களவைத்...
0 comments:
Post a Comment