Monday, December 28, 2015
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய்யப்பட்டார்.
தேர்தல் முன்விரோதம் காரணமாக 2013–ம் ஆண்டு பட்டமுத்து, சண்முகம் ஆகிய இருவர் கொலை செய்யப்பட்டனர். இதற்கு பழிக்கு பழியாக மணிகண்டன் என்பவரை கொலை செய்ய நடந்த முயற்சியில் சுரேஷ் பலியானார்.
இந்த சம்பவம் குறித்து செய்துங்கநல்லூர் போலீசார் வழக்குபதிவு செய்தனர். இந்த கொலை வழக்கில் தொடர்புடையவர்களை பிடிக்க ஸ்ரீவைகுண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு விஜயகுமார், ஸ்ரீவைகுண்டம் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ், செய்துங்கநல்லூர் இன்ஸ்பெக்டர் ராஜசுந்தரம் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் பட்டமுத்துவின் சகோதரர்கள் சுடலைமுத்து, ரமேஷ், சண்முகத்தின் மகன்கள் அழகு கிருஷ்ணன், வீரபாகு, மற்றொரு முருகன், ஆச்சிமுத்து மற்றும் பலர் மணிகண்டன் உறவினர்கள் மீது தாக்குதல் நடத்தியது தெரியவந்தது. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் கால்வாய் பஞ்சாயத்து தலைவி ராஜவடிவின் கணவரும், முன்னாள் பஞ்சாயத்து தலைவருமான ஆச்சிமுத்துவை நேற்று கைது செய்தனர்.
இந்த நிலையில் மோதல் சம்பவம் குறித்து கொலை செய்யப்பட்ட சுரேஷ் தரப்பை சேர்ந்த மணிகண்டன் மற்றும் அவரது உறவினர்கள் 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இதில் மணிகண்டனின் சகோதரர்கள் அய்யப்பன் (43), சுடலைமுத்து (35), முத்துராமன் (31) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இருதரப்பிலும் பலரை தேடி வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தமிழக முதல்வர், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளித்த பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டார். இதற்காக மக்கள், கடந்த மக்களவைத்...
-
திருப்பூர் ரெயில் நிலையத்தில் ஆட்டோ நிறுத்தத்தை வேறு இடத்திற்கு மாற்ற, ஓட்டுனர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து அந்த பகுதியில் பரபரப்பு ...
-
புதுப்பட சிடிக்கள் விற்ற 2 பேர் கைது கரூரில் புதுப்பட சிடிக்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்...
-
திருப்பூர், : ஊத்துக்குளி வட்டம் கவுண்டம்பாளையத்தில் சாயக் கழிவு நீரை வெளியோற்றி விவசாய நிலத்தை பாதிப்படைச் செய்து வரும் பனியன் நிறுவனத்தை ...
-
திருச்சி 11.12.15 திருச்சி உங்களுடன் அமைப்பு சார்பாக இன்று ஊர்காவல் படை ரோட்டரி இன்னர்வீல் லயன்எக்ஸ்னோரா தமிழ்நாடு வியாபாரிகள் சங...
-
வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களாக மாநிலத்தில் பல்வேறு பகுதியில் பெய்து வருகிறது கடந்த 23.11.2015 அன்று பெய்த கனமழையின் காரணமாக தூத்து...
-
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும். என முஸ்லிம் லீக...
-
வேளச்சேரி திரவுபதி அம்மன் கோவில் தெருவில் திரவுபதி அம்மன் கோவிலில் தற்போது கோபுரம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதற்காக கோவிலை சுற்ற...
0 comments:
Post a Comment