Monday, December 28, 2015
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய்யப்பட்டார்.
தேர்தல் முன்விரோதம் காரணமாக 2013–ம் ஆண்டு பட்டமுத்து, சண்முகம் ஆகிய இருவர் கொலை செய்யப்பட்டனர். இதற்கு பழிக்கு பழியாக மணிகண்டன் என்பவரை கொலை செய்ய நடந்த முயற்சியில் சுரேஷ் பலியானார்.
இந்த சம்பவம் குறித்து செய்துங்கநல்லூர் போலீசார் வழக்குபதிவு செய்தனர். இந்த கொலை வழக்கில் தொடர்புடையவர்களை பிடிக்க ஸ்ரீவைகுண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு விஜயகுமார், ஸ்ரீவைகுண்டம் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ், செய்துங்கநல்லூர் இன்ஸ்பெக்டர் ராஜசுந்தரம் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் பட்டமுத்துவின் சகோதரர்கள் சுடலைமுத்து, ரமேஷ், சண்முகத்தின் மகன்கள் அழகு கிருஷ்ணன், வீரபாகு, மற்றொரு முருகன், ஆச்சிமுத்து மற்றும் பலர் மணிகண்டன் உறவினர்கள் மீது தாக்குதல் நடத்தியது தெரியவந்தது. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் கால்வாய் பஞ்சாயத்து தலைவி ராஜவடிவின் கணவரும், முன்னாள் பஞ்சாயத்து தலைவருமான ஆச்சிமுத்துவை நேற்று கைது செய்தனர்.
இந்த நிலையில் மோதல் சம்பவம் குறித்து கொலை செய்யப்பட்ட சுரேஷ் தரப்பை சேர்ந்த மணிகண்டன் மற்றும் அவரது உறவினர்கள் 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இதில் மணிகண்டனின் சகோதரர்கள் அய்யப்பன் (43), சுடலைமுத்து (35), முத்துராமன் (31) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இருதரப்பிலும் பலரை தேடி வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மணப்பாறை அருகே வருவாய்துறையினர் மணல் அள்ளிய வாகனங்களை சிறைபிடித்த மக்கள் சப் கலெக்டர் நேரில் விசாரணை. திருச்சி மாவட்டம், மண...
-
Dear Friends, The very purpose of AINBOF’s demand to restrict the business between 10 to 2.00 pm is as follows: 1. Continue to...
-
மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே உள்ள பொய்கைகரைப் பட்டியை சேர்ந்தவர் வாசு .இவர் மவுலிவாக்கம் கட்டிட பணியின் போது கொத்தனாராக வேலை பார்த்து...
-
பல்லடம், : பல்லடத்தில் மங்களம் ரோட்டில் நகர திமுக அலுவலகம் திறப்பு விழா நடந்தது. அத்துடன் மு.க.ஸ்டாலின் 93வது பிறந்த நாளையொட்டி ரத்ததா...
-
கீழ்பவானி கிளைவாய்க்கால் பாசன பகுதியில் ஆக்கிரமிப்பு பயிர்களை அகற்றி மண்பாதை அமைக்கப்பட்டது.ஈரோடு காஞ்சிக்கோவில் அருகே உள்ள கீழ்பவானி வாய்...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.அமைப்பு தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் அமைச்சர் கோகுல இந்திரா,. மாவட்ட செயலா...
-
P.R. No.374 Date:22.07.2016 PRESS RELEA...
-
Canara Bank Officers Association as a part of its social commitment to the society. The social service wing CANPAL donated about 1500 ...
-
அது 1995 ஆம் ஆண்டின் பிற்பகுதி . சென்னையில் நடந்த அந்த சினிமா விருதுவிழாவில் விருது வாங்குவதற்கு மேடை ஏறிகிறார் அந்த நடிகர். அந்த நடிக...
0 comments:
Post a Comment