Monday, October 13, 2014
திருப்பூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நாராயணன் பதவி உயர்வு பெற்று சேலம் மாவட்டத்திற்கு மாற்றலாகி சென்றுவிட்டார். இந்தநிலையில் நாகப்பட்டினம் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த சிங்கராஜ் திருப்பூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டு பதவி ஏற்றார். இவருக்கு சக நீதிபதிகள், நீதிமன்ற அலுவலர்கள், வக்கீல்கள் வாழ்த்து தெரிவித்தனர். புதிதாக பதவி ஏற்ற நீதிபதி சிங்கராஜ் 1998 –ல் சேலம் நீதித்துறை நடுவர்மன்ற நீதிபதியாக பணியை தொடங்கினார். பின்னர் திருச்சி மற்றும் பெரியகுளத்தில் ஜே.எம்.1 நீதிபதியாக பணியாற்றினார். தொடர்ந்து 2008–ல் அரியலூர், திண்டுக்கல் மாவட்டத்தில் முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதியாக பணிபுரிந்தார். 2010–ல் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருநெல்வேலி மாநகராட்சி வரிவிதிப்பு மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் நீதிபதியாக பணியாற்றினார். தொடர்ந்து 2011–ல் பெரியகுளத்தில் சப்–ஜட்ஜ் ஆக பணிபுரிந்தார். இதைதொடர்ந்து பதவிஉயர்வு பெற்று நாகப்பட்டினம் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி தற்போது திருப்பூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டு பணிபுரிந்து வருகிறார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
0 comments:
Post a Comment