Tuesday, December 09, 2014
ஈரோடு
மாவட்டம், அந்தியூர் அடுத்த நகலூர், பெருமாபாளையத்தை சேர்ந்தவர்
அன்புரோஸ்(வயது- 72). இவர், தனக்குச் சொந்தமான ஐந்து ஏக்கர் நிலத்தை,
மகன்கள் மார்ட்டின், சில்வர் ஸ்டார் ஆகிய இருவருக்கும், சமீபத்தில்,
பாகபிரிவினை செய்து வைத்துள்ளார்.
இதில்
உடன்பட்டு ஏற்படாததால், மூத்தமகன் மார்ட்டின், அடிக்கடி தந்தையிடம்
கூடுதல் சொத்து கொடுக்கவேண்டும் என்று கேட்டு தகராறு செய்துள்ளார்.
அத்தோடு,
சரிவர வேலைக்கு போகாமல், சும்மா சுற்றிக்கொண்டு, மது அருந்திவிட்டு
உள்ளூரில் ரகளையில் ஈடுபட்டு வந்துள்ளார். வழக்கம் போல, நேற்று, அளவுக்கு
அதிகமாக மதுகுடித்த மார்ட்டின், எனக்கு மட்டும் சொத்து குறைவாக கொடுத்தாய்
என்று சொல்லி பிரச்னை செய்து, அன்புரோஸை தாக்க முயன்றார்.
இதனால்,
ஆத்திரமடைந்த அன்புரோஸ், தன்னிடம் இருந்த நாட்டு துப்பாக்கியால் மகன்
மார்டினை சுட்டுள்ளார். குறி தவறி சுட்டதில், மார்டினின் வயிற்று
பகுதியில், பால்ரஸ் குண்டுகள் பாய்ந்ததால், அவர் ரத்த காயத்துடன், உயிர்
தப்பினார். அக்கம் பக்கம் இருந்த உறவினர்கள் அவரை சிகிச்சைக்காக, அந்தியூர்
தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இது தொடர்பாக, அந்தியூர்
போலீஸார் வழக்குபதிவு செய்து, அன்புரோஸை கைது செய்து, அவர் வைத்திருந்த
நாட்டுத்துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
மணப்பாறை அருகே அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை. உயரதிகாரிகள...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
-
திருச்சி ஸ்ரீரங்கம் ரயில்வே மேம்பாலத்தில் பிரபல ரவுடி தலை துண்டித்து படுகொலை - 3 பேர் காவல்நிலையத்தில் தலையுடன் சரணடைந்தனர். ...
0 comments:
Post a Comment