Tuesday, December 09, 2014
சேலம்
மாவட்டம், ஓமலூரை அடுத்த சிக்கனம்பட்டி பகுதியை சேர்ந்த கருணாகரன் மகன்
சக்திவேல் (வயது-17). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் நூல் மில்லில்
வேலை செய்து வருகிறார். இதேபோன்று மேட்டூர் தாலுகா அரங்கனூர் பகுதியை
சேர்ந்த கூத்தன் மகள் சந்திரா (வயது-22). இவரும் அதே நூல் மில்லில் வேலை
பார்த்து வருகிறார். இருவருக்கும் வேலை செய்யும் இடத்தில் பழக்கம்
ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது.
இதை
தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நூல் மில்லிற்கு வேலைக்கு சென்ற
சக்திவேலை காணவில்லை. இதையறிந்த அவரது உறவினர்கள் பல இடங்களில் தேடினர்.
வேலை செய்யும் நூல் மில்லில் விசாரித்தனர். அப்போது சந்திரா என்ற பெண்ணும்
இரண்டு நாட்களாக வேலைக்கு வரவில்லை என தெரிய வந்தது.
உடனே
அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று விசாரித்தனர். அப்போது சேலத்தை அடுத்த
சித்தர் கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டு இருவரும் கடந்த இரண்டு
நாட்களாக சந்திராவின் வீட்டில் இருந்து வந்தது தெரியவந்தது. உறவினர்கள்
தேடுவதை அறிந்த காதலன் மற்றும் காதலி இருவரும் ஓமலூர் காவல் நிலையத்தில்
தஞ்சம் அடைந்தனர்.
இதை
அறிந்த இரு வீட்டின் உறவினர்களும் காவல் நிலையத்தில் கூடியதால் பரபரப்பு
ஏற்பட்டது. காதலர்களிடம் பயிற்சி டி.எஸ்.பி. கீதாஞ்சலி விசாரித்தார்.
அப்போது காதலன் சக்திவேலுக்கு இன்னும் திருமண வயதை கடக்கவில்லை என அறிவுரை
கூறி இருவரையும் அவரவர் வீட்டிற்கு பெற்றோருடன் அனுப்பி வைத்தார்.
17
வயது சிறுவனை 22 வயது பெண் திருமணம் செய்து கொண்டு ஓமலூர் காவல்
நிலையத்திற்கு வந்தது அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சக்திவேலின்
காதலி சந்திராவுக்கு ஏற்கனவே திருமணம் நடந்துள்ளது. ஆனால், அவர் கணவனுடன்
வாழாமல் தாய் வீட்டில் இருப்பது போலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த போராடிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் உ...
-
தமிழகம் முழுவதும் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் இன்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். தமிழ கத்தி...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
-
திருச்சி 18.9.16 திருச்சி திருவானைக்கோவில் மேம்பால பணிக்காண மாற்றுபாதைக்கு முறைப்படி அதிகாரிகள் திட்டமிடாமல் ம...
-
அனைத்து வகையாக ஓட்டுனர்கள் மணப்பாறை வட்டாட்சியரிடம் கோரிக்கை கொரோனா ஊரடங்கால் அனைத்து வகையான தொழில்களும் முடங்கியுள்ள ச...
-
முசிறி அருகே குறி சொல்லி பிழைப்பு நடத்தும் ஜோதிட மக்களுக்கு நிவாரண உதவி திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே அரங்கூர் கி...
-
பிரேசில் நாடடைச் சேர்ந்த டாக்சி ஓட்டுநர் ஒருவர், தனது தலையில் கத்தி பாய்ந்த நிலையில் 3 மணி நேரம் வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார...
0 comments:
Post a Comment