Friday, July 18, 2014
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
பள்ளி செல்லும் மாணவ– மாணவிகள் சாக்கடையில் மிதித்து செல்ல வேண்டிய அவலம் உருவாகியுள்ளது. இதனால் பல பெற்றோர் தங்கள் பிள்ளைகளை தூக்கிச் சென்று சாக்கடையை தாண்டி இறக்கிவிட்டு பள்ளிக்கு அனுப்பி வைக்கிறார்கள்.
இது பற்றி பொது மக்கள் பலமுறை அதிகாரிகளுக்கு புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனால் பாதிக்கப்பட்ட 500–க்கும் மேற்பட்ட பெண்கள் இன்று காலை திடீரென்று அம்பத்கர் கல்லூரி சாலையின் அருகே மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்படடது.
தகவல் கிடைத்ததும் புளியந்தோப்பு போலீசார் மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகள் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள். சாக்கடை பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டனர். மறியலால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பழைய வண்ணாரப் பேட்டை ஜி.ஏ. ரோட்டில் உள்ள நடைபாதை வியாபாரிகள் இன்று காலை கல்லரை சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். அரசியல் கட்சியினர் சிலர் மாமூல் கேட்டு மிரட்டுவதாக குற்றம்சாட்டினர். வியாபாரிகளுக்கு ஆதரவாக ம.தி.மு.க.வினரும் மறியலில் கலந்து கொண்டனர்.
ராயபுரம் போலீசார் விரைந்து வந்து அவர்களிடம் சமாதானம் பேசி கலைந்து போகச் செய்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
. திருச்சி மாவட்ட பளுதூக்கும் சங்கம் மற்றும் எஸ் ஆர் எம் சுகாதார கிளப் இணைந்து 2018-ம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி திருச்சி திருவெறும்பூர...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
0 comments:
Post a Comment