Friday, July 18, 2014
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
பள்ளி செல்லும் மாணவ– மாணவிகள் சாக்கடையில் மிதித்து செல்ல வேண்டிய அவலம் உருவாகியுள்ளது. இதனால் பல பெற்றோர் தங்கள் பிள்ளைகளை தூக்கிச் சென்று சாக்கடையை தாண்டி இறக்கிவிட்டு பள்ளிக்கு அனுப்பி வைக்கிறார்கள்.
இது பற்றி பொது மக்கள் பலமுறை அதிகாரிகளுக்கு புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனால் பாதிக்கப்பட்ட 500–க்கும் மேற்பட்ட பெண்கள் இன்று காலை திடீரென்று அம்பத்கர் கல்லூரி சாலையின் அருகே மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்படடது.
தகவல் கிடைத்ததும் புளியந்தோப்பு போலீசார் மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகள் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள். சாக்கடை பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டனர். மறியலால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பழைய வண்ணாரப் பேட்டை ஜி.ஏ. ரோட்டில் உள்ள நடைபாதை வியாபாரிகள் இன்று காலை கல்லரை சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். அரசியல் கட்சியினர் சிலர் மாமூல் கேட்டு மிரட்டுவதாக குற்றம்சாட்டினர். வியாபாரிகளுக்கு ஆதரவாக ம.தி.மு.க.வினரும் மறியலில் கலந்து கொண்டனர்.
ராயபுரம் போலீசார் விரைந்து வந்து அவர்களிடம் சமாதானம் பேசி கலைந்து போகச் செய்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி 7.2.16 ஸ்ரீ சிவ ஒளி யோக நிலையம் மற்றும் வெங்கடலெட்சுமி மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் யோக பயி ; ற்சியாளர் சிவகுமா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
0 comments:
Post a Comment