Friday, July 18, 2014
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
பள்ளி செல்லும் மாணவ– மாணவிகள் சாக்கடையில் மிதித்து செல்ல வேண்டிய அவலம் உருவாகியுள்ளது. இதனால் பல பெற்றோர் தங்கள் பிள்ளைகளை தூக்கிச் சென்று சாக்கடையை தாண்டி இறக்கிவிட்டு பள்ளிக்கு அனுப்பி வைக்கிறார்கள்.
இது பற்றி பொது மக்கள் பலமுறை அதிகாரிகளுக்கு புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனால் பாதிக்கப்பட்ட 500–க்கும் மேற்பட்ட பெண்கள் இன்று காலை திடீரென்று அம்பத்கர் கல்லூரி சாலையின் அருகே மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்படடது.
தகவல் கிடைத்ததும் புளியந்தோப்பு போலீசார் மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகள் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள். சாக்கடை பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டனர். மறியலால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பழைய வண்ணாரப் பேட்டை ஜி.ஏ. ரோட்டில் உள்ள நடைபாதை வியாபாரிகள் இன்று காலை கல்லரை சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். அரசியல் கட்சியினர் சிலர் மாமூல் கேட்டு மிரட்டுவதாக குற்றம்சாட்டினர். வியாபாரிகளுக்கு ஆதரவாக ம.தி.மு.க.வினரும் மறியலில் கலந்து கொண்டனர்.
ராயபுரம் போலீசார் விரைந்து வந்து அவர்களிடம் சமாதானம் பேசி கலைந்து போகச் செய்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
0 comments:
Post a Comment