Wednesday, May 27, 2020

On Wednesday, May 27, 2020 by Tamilnewstv in    
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.*

திருச்சி ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் இராணுவ இடத்தின் பிரச்சினையால் இன்னும் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ளது. இதனைத்தொடர்ந்து நெடுஞ்சாலைத் துறை செயலர் மற்றும் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு ஆகியோர் இன்று ஜங்ஷன் மேம்பாலத்தை ஆய்வு செய்தனர்.

பின்னர் செய்தியாளர் பேட்டியளித்த மாவட்ட ஆட்சியர் சிவராசு திருச்சி ஜங்ஷன் மேம்பாலம் இரண்டு ஆண்டுகளாக முடிக்கப்படாமல் உள்ளது இதனை நெடுஞ்சாலைத்துறை செயலர் மேம்பாலப் பணிகளை விரைவில் முடிப்பதற்க்கான சாத்தியக்கூறுகளை இன்று ஆய்வு செய்தார். மாற்று இடமாக தமிழக காவல் துறை  இடத்தை  இராணுத்திற்க்கு வழங்க இருப்பதாக கூறினார். அதற்க்கான திட்டம் வரையறுக்கப்பட உள்ளதாகவும் விரைவில் மேம்பாலப் பணிகள் தொடங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

0 comments: